search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saritha nair"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
    • ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட்டார்.

    இவர் கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடையவர். மேலும் இது தொடர்பான 2 வழக்குகளில் 3 ஆண்டு தண்டனை பெற்றவர். எனவே இவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்தும், தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்தும் சரிதா நாயர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சரிதா நாயரின் வக்கீல் இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது ஆஜராகாதது ஏன்? என்று விசாரித்தனர்.

    அதற்கு தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக வீடியோ கான்பரன்சிங் விசாரணையில் பங்கேற்க இயலவில்லை என சரிதா நாயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்க மறுத்த கோர்ட்டு, ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும் சரிதா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    • சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது
    • என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனது ரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பதாக கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய முதல் மந்திரி உம்மன்சாண்டி உள்பட பலர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    அதன்பின்பு ஜாமீனில் விடுதலையான சரிதா நாயர் அவ்வப்போது கேரள அரசியல் பிரமுகர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறிவந்தார். இந்த நிலையில் சரிதா நாயர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. முடியும் அதிகமாக கொட்டியது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.

    என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனது ரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பதாக கூறினர்.

    இந்த ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டவை. உடலில் இவை கலந்தால் நான் மெதுவாக இறந்து விடுவேன். இதற்காகவே எனக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. மெல்ல கொல்லும் தன்மை கொண்ட விஷம் உணவு மூலம் எனக்கு தரப்பட்டுள்ளது.

    ரத்த பரிசோதனையில் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது. அவ்வப்போது நான் குடிக்கும் பழச்சாறு, குளிர்பானம் மற்றும் உணவுபொருளில் இதனை கலந்து எனக்கு கொடுத்துள்ளனர்.

    இதனை யார் கலந்து கொடுத்தனர் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. சமீபத்தில் நான் திருவனந்தபுரம் சென்றபோது வழியில் ஒரு கடையில் பழச்சாறு குடித்தேன். அதனை எனது டிரைவர் வினுகுமார் வாங்கி வந்து தந்தார்.

    அப்போது அவர் பழச்சாறில் எதையோ கலக்குவதை பார்த்தேன். அப்போதுதான் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை நான் பணியில் இருந்து நீக்கிவிட்டேன்.

    கடந்த 2018-ம் ஆண்டு நான் அரசியல் பிரமுகர்கள் சிலர் மீது பாலியல் புகார் கொடுத்தேன். அவர்கள் என்னை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அவர்களுடன் சேர்ந்துதான் டிரைவர் வினுகுமார் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கருதுகிறேன்.

    அவர் பணத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். எனவே எனது முன்னாள் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சரிதா நாயர் புகாரில் கூறியிருந்தார்.

    திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகாந்திரம் இருந்ததை தொடர்ந்து அவர்கள் சரிதா நாயரின் கார் டிரைவர் வினுகுமார் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    சரிதா நாயரை உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
    • ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

    அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அவரது இந்த புகாரால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதல்-மந்திரி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.

    இந்த சூழலில் ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் சிறையில் இருந்தபோது, ஸ்வப்னாவும் சிறையில் இருந்தார். அப்போது என்னிடம் பேசிய அவர், இந்த வழக்கில் முதல்-மந்திரியை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளதாக தெரிவித்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில், ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் அந்த அறிக்கையை விசாரணை நிறுவனத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

    விசாரணை முடியும் வரை ஸ்வப்னாவின் அறிக்கையை பகிர முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது. எனினும், ஐகோர்ட்டை அணுகப் போவதாக சரிதாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷ் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ராகுலை எதிர்த்து போட்டியிட நினைத்த சரிதாநாயரின் வேட்புமனுக்கள் எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் பேனல் கருவிகளை பொருத்தி தருவதாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் பலரிடமும் பணம் வசூல் செய்தார்.

    ஆனால் அவர் கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்துவிட்டு மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு தனக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயரும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதற்கிடையில் சரிதா நாயர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.

    இந்த நிலையில் சரிதா நாயரால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஹைபிஈடன் என்பவர் காங்கிரஸ் வேட் பாளராக எர்ணாகுளம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இதற்கு சரிதா நாயர் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் அவரது கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரிதா நாயர் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.


    மேலும் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக் கோரி அவர் ராகுல்காந்திக்கு ஈ-மெயில் மூலம் புகார் அனுப்பினார். அதற்கும் எந்த பலனும் இல்லாததால் ராகுல்காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியிலும் சரிதா நாயர் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது எர்ணா குளம் தொகுதியிலும், வயநாடு தொகுதியிலும் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் விதிமுறைப்படி 2 ஆண்டோ அல்லது அதற்கு மேலோ ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் தண்டனைக்காலம் முடியும் வரையும் அதன்பிறகு 6 ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடனை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #SarithaNair
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார்.

    கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கமி‌ஷனும் அமைக்கப்பட்டது.

    சோலார் பேனல் மோசடி வழக்கில் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.

    இந்த வழக்கில் கைதான சரிதாநாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

    கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சரிதாநாயர் தெரிவித்த பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஹிபி ஈடன் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர்.

    ஹிபி ஈடன் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர், எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கு சரிதாநாயர் எதிர்ப்பு தெரிவித்தார். பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை வேட்பாளராக அறிவித்ததை ஏற்க முடியாது என்று கூறிய சரிதாநாயர், எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி ஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

    எர்ணாகுளம் தொகுதியை போட்டியிட தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி சரிதாநாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குற்றம் சாட்டப்பட்ட பலரும் தேர்தலில் போட்டியிடுவது சகஜமாகி விட்டது. அரசியலில் இருப்பவர்கள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பிரசாரமும் செய்கிறார்கள். எந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டாலும் அவர்கள் இதுபற்றி கவலைப்படுவதில்லை. வாக்காளர்களும், பொதுமக்களும் இதை கண்டு கொள்வதில்லை.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியும் என்றால் நானும் தேர்தலில் நிற்க முடியும். இதனை பொதுமக்களுக்கு புரிய வைக்கவே நான், தேர்தலில் நிற்கிறேன்.

    தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எவரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதை வாக்காளர்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நான் தேர்தலில் நிற்பதன் மூலம் இதுபற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எர்ணாகுளம் தொகுதியில் சரிதாநாயர் களம் இறங்க இருப்பது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.   #LokSabhaElections2019 #SarithaNair

    சோலார் பேனல் அமைக்க அனுமதி கேட்டு அணுகியபோது விருந்தினர் மாளிகையில் உம்மன் சாண்டி உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று சரிதாநாயர் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். #SarithaNair #OommenChandy
    திருவனந்தபுரம்:

    கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர்.

    கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் அமைத்து தரும் நிறுவனத்தை சரிதாநாயர் தொடங்கினார். இதற்காக பலரிடமும் பணம் வசூலித்தார்.

    இதில், ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வாங்கிய பின்பு சரிதாநாயர் கூறியபடி, சோலார் பேனல் அமைக்கவில்லை. இதுபற்றி பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதில், சரிதாநாயர் தங்களிடம் பணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறி இருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதா நாயரை கைது செய்தனர்.

    கைதான சரிதாநாயர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றவர்கள், அரசியல் பிரமுகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார்.

    அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நீதிபதி சிவராஜன் தலைமையில் கமி‌ஷன் அமைக்கப்பட்டது.

    கமி‌ஷன் விசாரணை நடந்து வந்த நிலையில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. அவர்கள் முன்பு விசாரணை கமி‌ஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரிதாநாயருக்கு அரசியல் பிரமுகர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.



    கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சினை தீவிரமாக இருந்த போது, திடீரென உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சபரிமலை பிரச்சினையை திசை திருப்ப அரசு நாடகமாடுவதாகவும், தங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு சட்ட ரீதியாக பதில் அளிப்போம் என்றும் உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் தெரிவித்தனர்.

    உம்மன்சாண்டி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா பதில் அளித்தார். அதில், சரிதாநாயர் சமீபத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரிலேயே இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

    இந்நிலையில் சரிதாநாயர் போலீசில் அளித்த புகார் விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சோலார் பேனல் நிறுவனத்திற்கு அனுமதி கேட்டு அரசை அணுகினேன். இதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் என்னை அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டியிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பிறகு உம்மன்சாண்டி அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

    சோலார் பேனல் அமைக்க தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார். மேலும் என்னை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருமாறு அழைத்தார். அவரை பார்க்க நானும் அங்கு சென்றேன். அப்போது அவர், என்னை உடல் ரீதியாக தொந்தரவு செய்தார்.

    சோலார் பேனல் விவகாரத்தில் உம்மன் சாண்டி எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல தொந்தரவுகள் கொடுத்தார். இதுபோல வேணுகோபால் எம்.பி. ஆலப்புழாவில் உள்ள ரோஸ் ஹவுஸ் மாளிகையில் என்னை சந்தித்தார். அவரிடம் என்னை காங்கிரஸ் மந்திரி அணில்குமார் அழைத்துச் சென்றார்.

    ரோஸ் ஹவுசில் வேணுகோபால் எம்.பி. என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இவர்களால் நான் பலமுறை பாதிக்கப்பட்டேன்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.

    சரிதாநாயர் புகாரில் தெரிவித்துள்ள சம்பவங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சம்பவம் நடந்த விருந்தினர் மாளிகை, ரோஸ் ஹவுசுக்கு சென்று சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.  #SarithaNair #OommenChandy



    முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர் டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். #SarithaNair #TTVDhinakaran
    நாகர்கோவில்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர் சரிதா நாயர்.

    பெண் தொழில் அதிபரான இவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணையின் போது அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீது செக்ஸ் புகார் கூறினார்.

    இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள், முதல்-மந்திரி அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் சிக்கினர்.

    வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர் சினிமா மற்றும் டெலிவி‌ஷன் தொடர்களில் நடிக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    ஆனால் அவர் குமரி மேற்கு மாவட்டம் தக்கலை பகுதியில் சிறு தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். இதற்காக அடிக்கடி குமரி மாவட்டம் வந்து களியக்காவிளை, நாகர் கோவில் பகுதிகளில் தங்கினார்.

    குமரி மாவட்டம் வந்து சென்ற சரிதா நாயருக்கு இங்குள்ள சில அரசியல் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று திடீரென நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பச்சைமால் வீட்டிற்கு சென்றார்.



    அவரை சந்தித்து பேசிய சரிதா நாயர் பச்சைமாலுக்கு சால்வை அணிவித்ததோடு, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்காக டி.டி.வி. தினகரனுடன் பேசி நேரம் வாங்கித்தரும்படியும் கேட்டார்.

    இதற்கு ஒப்புக்கொண்ட பச்சைமால் இந்த தகவலை கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிப்பதாகவும், அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்பு முடிவை கூறுவதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இதனை முன்னாள் அமைச்சர் பச்சைமால் தெரிவித்தார்.

    கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர், இப்போது தமிழக அரசியலில் கால் பதிக்க நினைப்பது இங்குள்ள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SarithaNair #TTVDhinakaran

    ×