search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுலை எதிர்த்து போட்டி- சரிதாநாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி ஆனது ஏன்?
    X

    ராகுலை எதிர்த்து போட்டி- சரிதாநாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி ஆனது ஏன்?

    ராகுலை எதிர்த்து போட்டியிட நினைத்த சரிதாநாயரின் வேட்புமனுக்கள் எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் பேனல் கருவிகளை பொருத்தி தருவதாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் பலரிடமும் பணம் வசூல் செய்தார்.

    ஆனால் அவர் கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்துவிட்டு மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு தனக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயரும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதற்கிடையில் சரிதா நாயர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.

    இந்த நிலையில் சரிதா நாயரால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஹைபிஈடன் என்பவர் காங்கிரஸ் வேட் பாளராக எர்ணாகுளம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இதற்கு சரிதா நாயர் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் அவரது கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரிதா நாயர் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.


    மேலும் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக் கோரி அவர் ராகுல்காந்திக்கு ஈ-மெயில் மூலம் புகார் அனுப்பினார். அதற்கும் எந்த பலனும் இல்லாததால் ராகுல்காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியிலும் சரிதா நாயர் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது எர்ணா குளம் தொகுதியிலும், வயநாடு தொகுதியிலும் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் விதிமுறைப்படி 2 ஆண்டோ அல்லது அதற்கு மேலோ ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் தண்டனைக்காலம் முடியும் வரையும் அதன்பிறகு 6 ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    Next Story
    ×