search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravishankarprasad"

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண்  இன்று காலை  மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்தின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.



    இது குறித்து டாம் வடக்கண் கூறியிருப்பதாவது:

    புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் கருத்து ஏற்புடையதல்ல. காங்கிரசின் கருத்து நாட்டு நலனுக்கு எதிரானது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். கட்சிக்காக நான் 20 ஆண்டுகளாக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால், இப்போது என்னை தூக்கி எறிகிறார்கள். பரம்பரை அரசியல் காங்கிரஸில் உச்சத்தினை பெற்றுள்ளது.  இதன் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என பிரதமர் மோடியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த டாம் வடக்கண் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விலகியது கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    பாஜகவில் இணைந்த டாம் வடக்கண்ணிற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், கேரளாவில் சீட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

    கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமலும், கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 

    இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று தெரிவித்தார்.

    தற்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியில் முதல் முறையாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.



    பிரியங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை அறிந்த ரேபரேலி காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கியது குடும்ப அரசியலின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பல பாஜக தலைவர்கள் பிரியங்காவுக்கு பதவி வழங்கியது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.#Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #Ravishankarprasad #AIIMS
    புதுடெல்லி:

    மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், சுவாசப் பிரச்சினை காரணமாக  நுரையீரல் சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து நேற்று அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ரவி சங்கர் பிரசாத்தின் உடல்நிலை தேறியதையடுத்து, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.



    இதேபோல் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பாஜக தலைவர் அமித் ஷா, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் என மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பாஜக தலைவர் அனில் பலூனி கூறியுள்ளார்.

    முன்னதாக இன்று காலை பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் ராம் லால், காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறின் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Ravishankarprasad #AIIMS

    ×