search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defence minister nirmala sitharaman"

    ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RafaleDeal #SC #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கூறுகையில், ரபேல் ஒப்பந்தத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஊழல் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. காவலாளியே திருடனாகி உள்ளார் என தெரிவித்தார். 

    இந்நிலையில், ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை ராகுல் காந்தி திரித்துக் கூறுகிறார். ராகுல் காந்தியின் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன

    ரபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரபேல் வழக்கில் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார், ராகுல் கூறியது நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது என தெரிவித்துள்ளார்.
    #NirmalaSitharaman #RafaleDeal #SC #RahulGandhi
    டெல்லியில் இன்று பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், 'தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடருவோம் 'என எச்சரிக்கை விடுத்துள்ளார். #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி  கடந்த 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புதிய நோட்டுகளை மாற்ற 40 சதவீதம் கமிஷனாக கேட்டது பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த வீடியோ போலியானது என பா.ஜ.க. மறுத்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. மீது அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளோம். போலி வீடியோக்களை வெளியிட்டு பா.ஜ.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு பாஜக மீது அவதூறு பரப்புவது காங்கிரஸ் கட்சிக்கு இது முதல் முறையல்ல. அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என பா.ஜ.க. தலைவர் பூபேந்திர் யாதவ் குறிப்பிட்டுள்ளார். #NirmalaSitharaman #Congress
    அரசுமுறை பயணமாக ஜெர்மனி நாட்டுக்கு சென்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் வீரர்கள் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #NirmalaSitharaman
    பெர்லின்:

    இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நான்கு நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.

    முதல் கட்டமாக ஜெர்மன் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி நிர்ம்லா சீதாராமனுக்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் வீரர்கள் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    அதன்பின்னர், ஜெர்மனி பாதுகாப்புத்துறை மந்திரி உர்சுலா வான் டெர் லியெனை நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். #NirmalaSitharaman
    பெங்களூருவில் இந்திய விமானப்படை விமானம் விழுந்த விபத்தில் பலியான பைலட்டின் குடும்பத்தினரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #IAFAircraftCrashes #NirmalaSitharaman
    டேராடூன்:

    பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் கடந்த ஒன்றாம் தேதி இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் சித்தார்த் நேகி மற்றும் சமீர் அப்ரால் ஆகிய 2 பைலட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டனர். 
     
    தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது. விமானம் தரையை நெருங்கியபோது 2 விமானிகளும் வெளியே குதித்தனர். இதில் பலத்த காயமடைந்த பைலட் சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைலட் சமீர் அப்ரால், பலத்த காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். விமான விபத்து குறித்து பெங்களூரு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பெங்களூருவில் இந்திய விமானப்படை விமானம் விழுந்த விபத்தில் பலியான பைலட் சித்தார்த் நேகியின் குடும்பத்தினரை டேராடூனில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

    டேராடூனில் உள்ள பைலட் சித்தார்த் நேகியின் வீட்டிற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளித்தார். அவருடன், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத்தும் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். #IAFAircraftCrashes #NirmalaSitharaman
    காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

    கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமலும், கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 

    இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று தெரிவித்தார்.

    தற்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியில் முதல் முறையாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.



    பிரியங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை அறிந்த ரேபரேலி காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து பேசிய பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், குடும்ப கட்சியான காங்கிரசில் பிரியங்காவுக்கு பதவி கொடுத்தது பெரிய விவகாரமல்ல என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கியது குடும்ப அரசியலின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பல பாஜக தலைவர்கள் பிரியங்காவுக்கு பதவி வழங்கியது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.#Congress #PriyankaGandhi #RavishankarPradsad
    பயங்கரவாத தாக்குதல், ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக கொடுத்திருக்கிறது என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். #ParlimentElection #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தேசிய கட்சியின் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 12 ஆயிரம் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
     
    இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பேசினர். இதில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது;-



    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் இரு பெரிய சாதனைகளை அனைத்து மக்களுக்கும் விளக்கி சொல்ல வேண்டும்.

    கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக இந்திய மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர். அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாதிகளின் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அனைத்து தொண்டர்களையும் பாஜக சமமாக நடத்தி வருகிறது என தெரிவித்தார். #ParlimentElection #NirmalaSitharaman
    மக்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது என்றார். #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்  இன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 
     
    நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க  விருப்பம் கிடையாது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. 



    வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வழங்கப்படும். ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

    பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நன்றி தெரிவித்துள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

    கடந்த ஜூன் 20-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரத்து 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.



    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, பாதுகபபு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி.

    மேலும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    வேதாரண்யத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #NirmalaSitharaman
    நாகப்பட்டினம்:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.

    இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை வந்தடைந்தார். அங்கிருந்து வேதாரண்யம் சென்ற அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

    மேலும், கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். #GajaCyclone #NirmalaSitharaman
    தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பார்வையிட உள்ளார். #GajaCyclone #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.



    இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பார்வையிட உள்ளார். #GajaCyclone #NirmalaSitharaman
    தாய்லாந்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்ற பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #NirmalaSitharaman #PrayutChanocha #Thailand
    பாங்காக்:

    அரசுமுறை பயணமாக நேற்று தாய்லாந்து நாட்டுக்கு சென்ற இந்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை அந்நாட்டின் பாதுகாப்புத்துறை துணை மந்திரி ரவுங்ரோஜனா சும்ராஸ்ரோம்ருன் அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

    அதைத்தொடர்ந்து, இன்று தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தாய்லாந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #NirmalaSitharaman #PrayutChanocha #Thailand
    ஓணம் பண்டிகையையொட்டி கேரள மக்களுக்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #Onam #NirmalaSitharaman #RamnathKovind
    புதுடெல்லி:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறுகையில், இந்த அசாதாரணமான வேளையில் கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கேரளா மக்கள் படும் துயரங்களில் இருந்து விடுபடும் நம்பிக்கையை மகாபலி சக்கரவர்த்தி அவர்களுக்கு அளிப்பார். அதன்மூலம் அவர்கள் கேரளாவை ம்று நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    ஓணம் பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் கேரளாவை சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பண்டிகை மக்களது வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். கேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்கள் விரைவில் அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டும். ஓணம் பண்டிகை அதற்கான புதிய தொடக்கமாக அமையட்டும் என தெரிவித்துள்ளார். #Onam #NirmalaSitharaman #RamnathKovind
    ×