search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry budget"

    • மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.
    • காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அடுத்த சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்தார்.

    இதற்காக மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட்டில் கூறப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    இந்த ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும். 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும்.

    மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.

    புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம், ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, புதுவையில் உள்ள கோவில்களில் ஆவணங்கள், சொத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை மின்னனு மையமாக்கப்படும். அதனை பொதுமக்கள் பார்வையிடும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    புதுவையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும்.

    புதுவையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும்.

    தொற்று நோயை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்படும்.

    50 புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் ஏற்படுத்தப்படும்.

    அட்டவணை இனத்து பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    • பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார்.
    • தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 12 ஆண்டாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்தார்.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை தலைமையில் திட்டக்குழு கூடி 2023-24-ம் ஆண்டுக்கு பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை நிர்ணயம் செய்தது.

    இதற்கான அனுமதிகோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதி புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.

    தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 9-ந் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    13-ந் தேதி காலை 9.45 மணிக்கு நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    கவர்னர் உரைக்கு பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என முடிவு செய்யும். சட்டசபை நீண்டநாட்கள் நடைபெறும். வித்தியாசமான சட்டமன்றமாக இருக்கும். 10 சதவீத அரசு அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறிவந்தேன்.

    அதேநிலை தற்போதும் நீடிக்கிறது. இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் உரிய தண்டனை அளிக்கப்படும். திட்டங்களை கெடுப்பது உள்ளூர் பி.சி.எஸ். அதிகாரிகள்தான். அவர்கள் திட்டங்களுக்கான கோப்புகளில் எதிர்மறையான கருத்துகளை எழுதுகின்றனர். இத்தகைய அதிகாரிகளுக்கு சட்டசபையில் தண்டனை அளிக்கப்படும்.

    3 அரசு துறைகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை செலவு செய்துள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மார்ச் மாதம் இறுதிக்குள் நிதியை முழுமையாக செலவு செய்வதாக உறுதியளித்துள்ளனர். சிறப்புக்கூறு நிதியும் முழுமையாக செலவிடவில்லை. இதையும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது.
    • அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட், செப்டம்பரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிலும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மார்ச் மாதம் 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.

    மறுநாள் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது. கூட்டத்தொடர் குறைந்த பட்சம் 15 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.

    இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும் ஆகஸ்டு 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். முழு பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருகிறோம்.

    2012-க்கு பிறகு புதுவை கணக்கை முழுமையாக அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக தனி தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அரங்கில் நாளை (புதன்கிழமை) தணிக்கை குழுவின் கூட்டம் நடக்கிறது. இதில் கவர்னர் தமிழிசை தலைமையில் 600 அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நானும், பொதுக்கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி. ரமேசும் பங்கேற்கிறோம்.

    இந்த பட்ஜெட்டில் செலவினங்களை சமர்பித்த பிறகுதான் அடுத்த பட்ஜெட்டில், துறைகளுக்கு நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கும்போது மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி கிடைக்கும். ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறோம். 25 சதவீத அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை.

    சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்ட டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளோம். விரைவில் பூமி பூஜை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

    பட்ஜெட் கூட்டத்தை 27-ந்தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களான பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை சபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 19-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் சபையை ஒரு வாரம் முன்னதாக 19-ந்தேதியே முடித்தனர்.

    அதேநாளில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு தடையில்லை என்பதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என உத்தரவிட்டது.

    இதற்கிடையே யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட்டிற்கு கவர்னரின் ஒப்புதல் பெற்று சபையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கவர்னர் பட்ஜெட் நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாமலேயே சபையை சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு பென்‌ஷன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அரசே முடங்கும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் பட்ஜெட்டிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    இன்று மின்துறை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-


    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் செயல்படவும் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளேன்.

    இதற்கான கோப்பு கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது. 26-ந்தேதி வரை சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவிற்கு அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryAssembly #Kiranbedi
    புதுவை சுகாதாரத்துறையில் குரூப் ஏ 108, பி மற்றும் சி 216, டி பிரிவில் 318 பதவிகள் என மொத்தம் 642 பதவிகள் காலியாக உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    ஜெயமூர்த்தி:- அரசு பொதுமருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி எவ்வளவு மதிப்பீட்டில் எப்போது வாங்கப்பட்டது?

    தற்போது எவ்வளவு காலமாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்படவில்லை? இதை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சுகாதாரத்துறையில் முதுநிலை மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை எந்தெந்த பதவி எவ்வளவு காலியாக உள்ளது? இதை நிரப்ப அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    முதல்- அமைச்சர் நாராயணசாமி: அரசு மருத்துவமனைக்கு 2001-ம் ஆண்டு ரூ.5 கோடியே 37 லட்சம் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வாங்கப்பட்டது. இதை பராமரிக்க தனியார் நிறுவனத்தோடு 2007-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயங்கவில்லை.

    ஸ்கேன் வழங்கிய நிறுவனத்தை பழுதுநீக்கவும், செயல்படுத்தவும் அழைத்தோம். அவர்கள் பழுதிற்கு அப்பாற்பட்டது என சான்றளித்து விட்டனர். சுகாதாரத்துறையில் குரூப் ஏ 108, பி மற்றும் சி 216, டி பிரிவில் 318 பதவிகள் என மொத்தம் 642 பதவிகள் காலியாக உள்ளது.

    மத்திய தேர்வாணையம் மூலமாக காலி மருத்துவ பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப் பினும் அனைத்து காலி பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு மருத்துவ அதிகாரிகளால் நிரப்பப்பட்டு வருகிறது.

    குரூப் பி, சி, டி காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்கேன் எந்திரம் பழுதடைந்துள்ளதால் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து வருகின்றனர்.

    ஆண்டுக்கு ரூ.25 லட்சம் இதற்காக செலவாகிறது. தனியார் பங்களிப்புடன் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறப்பதாக சட்டசபையில் இன்று நடைபெற்ற கேள்விநேரத்தின் போது முதலமைச்சர் நாராயணசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    வையாபுரிமணிகண்டன்:- புதுவை மாநிலத்தில் புற்றுநோயினால் பொது மக்களின் இறப்பு அதி ரிப்பது அரசுக்கு தெரியுமா? சுகாதாரத்துறை இதை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கை என்ன?

    முதல்-அமைச்சர் நாராயணசாமி:- புதுவை அரசு புற்று நோய் சிகிச்சைக்காக இலவச பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகளை அரசு மருத்துவமனை வாயிலாக வழங்குகிறது. ஜிப்மரில் பிராந்திய புற்று நோய் மையத்தின் ஆதரவோடு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

    மேலும் தேசிய திட்டத்தின் கீழ் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க முகாம்கள் நடத்தி வருவதால் ஆரம்ப சிகிச்சை தொடங்கவும், இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழி செய்துள்ளோம். பிராந்திய மருத்துவமனைகளில் பிரத்யேக பராமரிப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது.

    அன்பழகன்:- புற்று நோயால் புதுவையில் அதிகளவில் இறப்பு நிகழ்கிறது. அனுமதி பெறாமல் நகர பகுதி முழுவதும் செல்போன் டவர் அமைத்துள்ளதே புற்றுநோய் அதிகரிக்க காரணம். இதன் அலைவரிசையை கணக்கிடக்கூட நம்மிடம் கருவிகள் இல்லை. செல்போன் டவர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செல்வம்:- பெண்கள் தான் அதிகளவில் புற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியவில்லை. இதனால் நோய் அதிகளவில் பரவி இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரியிலேயே தனி பிரிவு உருவாக்க வேண்டும்.


    ஜெயமூர்த்தி:- பொது மக்களிடம் நாள்தோறும் பழகுகிறோம். பல இறப்புகளுக்கு செல்கிறோம். அப்போது பலர் புற்று நோயால் இறந்ததாக கூறுகின்றனர். இதற்கு சிகிச்சை பெற கால தாமதம் ஏற்படுவதே இறப்பிற்கு காரணம்.

    நாராயணசாமி: புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறக்கின்றனர். ஜிப்மரில் தனி பிரிவு இயங்குவதால் மத்திய அரசு, அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்கு தனி பிரிவு உருவாக்க அனுமதி அளிப்பதில்லை. இருப்பினும் புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான பிரிவை உருவாக்குவோம். புற்று நோய் சிகிச்சை மையம் உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #Narayanasamy #Cancer
    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பகுதிகளில் கூடுதலாக மின் கட்டண உபயோகத்தை காட்டுவதை கண்டித்து புதுவை சட்டசபையில் மின்சார மீட்டரை உடைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மின்துறை சார்பில் நகர பகுதியில் ஸ்மார்ட் மீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் இருந்து 34 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் ரூ.44 கோடி செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் நகர பகுதியில் உருளையன் பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தியுள்ளனர்.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பகுதிகளில் கூடுதலாக மின் கட்டண உபயோகத்தை காட்டுகிறது. இதனால் மின் கட்டணம் 2 மடங்கு கூடுதலாக வருகிறது என புகார்கள் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், தி.மு.க. உறுப்பினர் சிவா ஆகியோர் பேசினர். ஸ்மார்ட் மீட்டரால் வரும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்மார்ட் மீட்டரை திரும்பப்பெற வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் அரசு ஸ்மார்ட் மீட்டரை திரும்பப் பெறும் எண்ணத்தில் இல்லை. இதனால் இதை கண்டித்து புதுவை சட்டசபை வளாகத்தில் மையமண்டபத்துக்கு செல்லும் படிகட்டுக்கு முன்பு இன்று காலை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஸ்மார்ட் மீட்டர்களை உடைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் மீட்டரை தரையில் வீசி உடைத்தனர். பின்னர் வழக்கம் போல சபை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
    புதுச்சேரி மாநிலத்துக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் நாளை தாக்கல் செய்கிறார். #PuducherryBudget
    புதுச்சேரி:

    அனைத்து மாநிலங்களிலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த நிதி ஒதுக்கீடு காலதாமதம் ஆனதால் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக சில மாத செலவினங்களுக்காக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டிருந்தது.

    வழக்கம் போல் பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த மாதம் 4-ந்தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

    அதற்கு பதிலாக மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி அளிப்பது தொடர்பாக சில சந்தேகங்களை உள்துறை அமைச்சகம் எழுப்பியது. இதற்கு கடிதம் மூலமும், நேரிலும் சென்றும் முதல்- அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.

    இதனால் சட்டசபை கூட்டதை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. 2 நாட்களே கூட்டம் நடைபெற்ற நிலையில் சபையை கடந்த 5-ந் தேதி காலவரையின்றி சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இருப்பினும் உடனடியாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை.

    சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிநாடு சென்றதால் பட்ஜெட் தாக்கல் தள்ளி போனது. மத்திய அரசு அனுமதி வழங்கிய 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் சட்டசபையை ஜூலை 2-ந் தேதி கூட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதன்படி புதுவை சட்டசபை மீண்டும் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. காலை 10 மணிக்கு திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சிகளை சபாநாயகர் வைத்திலிங்கம் தொடங்குகிறார்.

    இதனையடுத்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் நாராயணசாமி சபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலுடன் அன்றைய தின சபை நிகழ்ச்சிகள் முடிவடைகிறது.

    நாளை மதியம் சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூடுகிறது. இதில் சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    அநேகமாக பட்ஜெட் கூட்ட தொடர் ஜூலை 20-ந் தேதி வரை சுமார் 15 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தொடரில் நிதி நெருக்கடி, கவர்னர் தலையீடு, இலவச அரிசி விவகாரம், துறைமுக விரிவாக்கம், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பள மின்மை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #PuducherryBudget #Narayanasamy
    புதுச்சேரிக்கு பட்ஜெட் ஒப்புதல் பெற அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லியில் போராட்டம் நடத்துமாறு முதல்வர் நாராயணசாமியை அ.தி.மு.க. வலியுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் சம்பந்தமான மாநில முதல்- அமைச்சர்கள் மாநாட்டில் புதுவை மாநில நலன் குறித்து மாநில முதல்-அமைச்சர் என்கிற முறையில் நல்ல கருத்துக்களை பிரதமரிடம் கொண்டு செல்வதில் நாராயணசாமி தவறிவிட்டார்.

    திட்டக்குழுவின் கூட்டம் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் ஆரம்பிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கூடாது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கேட்பதை தவிர்த்து கிடைக்காத வழங்க முடியாத சட்டத்திற்கு உட்படாத சிறப்பு மாநில அந்தஸ்தை கேட்பது என்பது சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கையாகும்.

    அற்ப அரசியல் காரணங்களுக்காக தனது அமைச்சரவையில் உள்ள கருத்து பிரிவினை சூழல் காரணமாக சிறப்பு மாநில அந்தஸ்து கேட்பது என்பது நாராயணசாமி புதுவை மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தற்போது அமைச்சராக உள்ள ஒருவரே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரின் நலனுக்காக கிடைக்காத ஒரு சிறப்பு மாநில அந்தஸ்தை முன்வைப்பது நாராயணசாமிக்கு அழகல்ல.

    கவர்னரை பற்றி கூட்டத்தில் தேவையில்லாமல் விமர்சித்து கருத்துகளை தெரிவிப்பதும் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் மாநிலத்திற்கு இழுக்கான செயலாகும். பட்ஜெட் கூட போடமுடியாமல் முழுமையாக தோல்வியை தழுவிய நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது கூறுவது போல் தற்போதும் நிதி இன்று வந்துவிடும் நாளை வந்து விடும் என்று பொய் சாக்கு கூறி வருகிறார்.

    எனவே தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு முதல்- அமைச்சர் நாராயணசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டெல்லியில் தங்களது உரிமைக்காக போராடும் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி செயல்பட வேண்டும்.

    கவர்னரை எதிர்ப்பாக நினைத்துக்கொண்டு ஒரு மையில் சில வார்த்தைகளை கூறுவது அவரின் எதிர்ப்பை நீர்த்துபோகச் செய்வது போல் தெரிகிறது.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காமல் இருப்பது புதுவை மாநிலத்திற்கு ஒரு இழுக்கை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை மாநில உரிமையை நிலைநாட்ட முழுமையான போராட்டத்திற்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி முன்வரவில்லை. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லியில் போராட்டம் நடத்த முன்வாருங்கள் இல்லையென்றால் டெல்லியை போல் அனைவரும் கவர்னர் மாளிகையில் போராட்டம் நடத்த முன்வருவோம் என தெரிவித்துள்ளார்.

    நாராயணசாமியின் செயல்படாத தன்மையால் ஆக்டோபஸ் மாதிரி புதுவையை முழுமையாக ஆக்கிரமிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் 7 மருத்துவகல்லூரியில் அரசின் இடஒதுக்கீட்டை பெறுவது சம்பந்தமாக உரிய சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இதற்காக அ.தி. மு.க. சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதேபோல நடப்பு நிதியாண்டிற்கும் மார்ச் 26ந்தேதி அரசின் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு சட்டசபையில் அனுதி பெறப்பட்டது. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய கடந்த 4-ந்தேதி சட்டசபை கூடியது. ஆனால் மத்திய உள்துறையிடமிருந்து பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சட்டசபை 5-ந்தேதியோடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை இணை செயலாளரை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கம் அளித்து வந்தார்.

    இதனால் ஓரிரு நாளில் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என நாராயணசாமி பேட்டியும் அளித்தார். ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, அன்பரசு, பார்த்திபன், மணிகண்டன், சுந்தரவடிவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    புதுவை மாநில பட்ஜெட்டுக்கு திங்கட்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லியில் முகாமிட்டு இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நள்ளிரவு புதுவை திரும்பினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் மத்திய உள்துறை இணை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேசினேன்.

    அப்போது அவர் மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின் கீழ் நிதி அளிப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கங்ளை அளித்தேன். மேலும், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றியே பட்ஜெட் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பியது குறித்தும் தெரிவித்தேன். உள்துறை இணை செயலாளர் புதியவர் என்பதால் இந்த விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

    அநேகமாக வருகிற திங்கட்கிழமை மத்திய அரசின் ஒப்புதல் பட்ஜெட்டுக்கு கிடைக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Congress #Narayanasamy
    ×