search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டுக்கு திங்கட்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்- நாராயணசாமி
    X

    பட்ஜெட்டுக்கு திங்கட்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்- நாராயணசாமி

    புதுவை மாநில பட்ஜெட்டுக்கு திங்கட்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லியில் முகாமிட்டு இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நள்ளிரவு புதுவை திரும்பினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் மத்திய உள்துறை இணை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேசினேன்.

    அப்போது அவர் மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின் கீழ் நிதி அளிப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கங்ளை அளித்தேன். மேலும், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றியே பட்ஜெட் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பியது குறித்தும் தெரிவித்தேன். உள்துறை இணை செயலாளர் புதியவர் என்பதால் இந்த விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

    அநேகமாக வருகிற திங்கட்கிழமை மத்திய அரசின் ஒப்புதல் பட்ஜெட்டுக்கு கிடைக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Congress #Narayanasamy
    Next Story
    ×