search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister Narayanasamy"

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
    • மாகி மருத்துவத்துறை முனைப்புடன் செயல்பட்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தட்டாஞ்சாவடி பகுதியில் நில ஆர்ஜிதம் பற்றி விபரம் தெரியாமல் பேசுகிறார். ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் முதல்-அமைச்சராக இருந்தபோது, அந்த இடம் கையகப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டது. ரூ.80 லட்சம் மாநில அரசு டெபாசிட் கட்டியது.

    அந்த நோட்டீஸ் அனுப்பியதோடு சரி. 4 ஆண்டு எந்த நடவடிக்கையும் ரங்கசாமி அரசு எடுக்க வில்லை. வருவாய்த்துறை நில ஆர்ஜிதத்தை ரத்து செய்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வைத்திலிங்கம் முதல்- அமைச்சராக இருந்தபோது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது என பொய்யான தகவலை கூறுகிறார்.

    நில உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டூ உத்தரவுப்படி நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. சபாநாயகர் செல்வம் தனது புகாரை நிரூபிக்க வேண்டும். அவர் சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் முதலில் ரங்கசாமிதான் மாட்டுவார். இதற்கு ரங்கசாமி பதில்கூற வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சபாநாயகர் செல்வம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    புதுவையில் டெங்கு அதிகமாக பரவி வருகிறது. புதுவை அரசு முன்னெ ச்சரிக்கை எடுக்காத தால் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். அரசு மெத்தனத்தாலும், சுகாதார த்துறை காலம்கடந்த நடவடிக்கையாலும் இந்த பலி ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதித்த பின் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்கிறோம், கொசு மருந்து தெளிக்கிறோம் என்கிறார்கள். முன்னெச்சரிக்கையோடு ஏன் இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை?

    நிபா வைரசால் கேரளாவில் 5 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். மாகி முன்னள் அமைச்சர் வல்சராஜ், எம்.எல்.ஏ. ரமேஷ்பரம்பத் ஆகியோரை தொடர்புகொண்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

    கோழிக்கோடு நகரம் புதுவையின் மாகி பகுதிக்கு அருகில் உள்ளது. நிபா வைரஸ் கொரோனாவை விட கொடியது. மாகி மருத்துவத்துறை முனைப்புடன் செயல்பட்டு நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் மாமூல் கேட்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன், மாமூல் வசூலிக்கும் கூட்டமும் வெளியே வந்துவிடும். கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ், தி.மு.க., என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மாமூல் கேட்கும் கூட்டம் சட்டசபையை சுற்றி வருகிறது. கட்ட பஞ்சாயத்து செய்கின்றனர்.

    முதல்-அமைச்சர், சபாநாயகர் அந்த கூட்டத்தை சட்டசபைக்குள் நுழைய விடக்கூடாது என கூறியுள்ளனர்.

    இதைத்தான் நான் தொடர்ந்து புகார் கூறி வருகிறேன். அவர்களின் வேலையே மாமூல் வசூலி ப்பதுதான். இவர்கள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். புதுவையில் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழும் கூட்டம் அதிகமாக உள்ளது. காவல்துறைக்கு மாமூல் மாதந்தோறும் சரியாக செல்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
    • இந்தியா கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இந்த முடிவுகள் பிரதமர் மோடியை ஆடச்செய்திருக்கிறது.

    புதுச்சேரி:

    விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவனின் 60 வயது நிறைவு விழாவில் புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்டு பாடுபட்டு கொண்டி ருப்பவர் திருமாவளவன். மதச்சார்பற்ற கூட்டணிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற கூட்டணியாக மாற்ற பாடுபட்ட முக்கிய 2 தலைவர்களில் ஒருவர்

    தி.மு.க. முதல்-அமைச்சர் ஸ்டாலின், மற்றொருவர் திருமாவளவன். இவர்கள் இருவரும் மேற்குவங்க முதல்வர், பீகார் லல்லுபிரசாத் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்கள். மற்ற தலைவர்களும் சந்தித்தித்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இநத 2 தலைவர்களின் முயற்சியால் இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உருவாகியுள்ளது.

    எப்போதும் ஆவேசமாக பேசும் பிரதமர் மோடி இப்போது வசைபாடும் மோடியாக மாறிவிட்டார்.

    அதற்கு காரணம் பெங்களூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இந்த முடிவுகள் பிரதமர் மோடியை ஆடச்செய்திருக்கிறது.

    சமூக நீதி, தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை, அம்பேத்கரின் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க அவரது பேச்சு இருக்கும். தனது கொள்கையில் இருந்து எப்போதும், என்றும் மாறாத தலைவர் திருமாவளவன், தமிழகம், புதுவையை பிரித்து பார்க்காத தலைவர் திருமாவளவன். மோடிக்கு என் மீது மிகுந்த பாசம் உண்டு.

    ஏனென்றால் நரேந்திரமோடி சிபிஐ, உளவுத்துறையை அனுப்புகிறார் ஏன் நீங்கள் பயப்படுவதில்லை என்று கேட்டனர். நானும் சி.பி.ஐ அமைச்சராக இருந்துள்ளேன். நான் மோடியையும் பார்ப்பேன். அவரது தாத்தாவையும் பார்ப்பேன் என்றேன். மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள், சிறுபான்மையினரை குறி வைக்கின்றனர்.

    தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். மோடி இதை கண்டுகொள்வதில்லை. மோடியின் ஆட்சியில் வளர்ச்சி இல்லை. பொருளாதாரம் இல்லை. ஆனால் அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு அதிகாரம் துஷ்பிரோயகம் செய்து இந்த நாட்டில் மோடி ஆட்சியை நடத்திகொண்டு இருக்கிறார். இப்பொழுது நாட்டில் மாற்றம் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
    • பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிம் வைப்புத்தொகை, சிலிண்டர் மானியம் ரூ.300 இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு முதல்முறையாக ஜனாதிபதி வருகிறார். அவர் மாநில நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும். இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது.

    அதை திரும்பப் பெற வேண்டும். இந்தி மொழியை திணித்தால் மாநிலங்களில் போராட்டம் உருவாகும். புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் பிறந்தநாளில் புதுவை முழுவதும் பேனர் வைக்கப்பட்டது. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இதற்கு முதல்- அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். காரைக்காலில் பேனர் விவகாரத்தில் அமைச்சர் போலீஸ் நிலையம் சென்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

    ராகுல் தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவருக்கு எம்.பி பதவியை உடனடியாக வழங்க வேண்டும். உத்திர பிரதேச பா.ஜனதா எம்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில் அவரின் பதவி இதுவரை பறிக்கப்பட வில்லை.

    புதுவை முதல்- அமைச்சர் அறிவித்த குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம், பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிம் வைப்புத்தொகை, சிலிண்டர் மானியம் ரூ.300 இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் சந்திரமோகன், துணைத்தலைவர் தேவதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

    புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதேபோல நடப்பு நிதியாண்டிற்கும் மார்ச் 26ந்தேதி அரசின் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு சட்டசபையில் அனுதி பெறப்பட்டது. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய கடந்த 4-ந்தேதி சட்டசபை கூடியது. ஆனால் மத்திய உள்துறையிடமிருந்து பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சட்டசபை 5-ந்தேதியோடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை இணை செயலாளரை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கம் அளித்து வந்தார்.

    இதனால் ஓரிரு நாளில் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என நாராயணசாமி பேட்டியும் அளித்தார். ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, அன்பரசு, பார்த்திபன், மணிகண்டன், சுந்தரவடிவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் சங்பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×