search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்தியா கூட்டணி முடிவுகள் பிரதமரை ஆட்டம் காண செய்துள்ளது
    X

    கோப்பு படம்.

    இந்தியா கூட்டணி முடிவுகள் பிரதமரை ஆட்டம் காண செய்துள்ளது

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
    • இந்தியா கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இந்த முடிவுகள் பிரதமர் மோடியை ஆடச்செய்திருக்கிறது.

    புதுச்சேரி:

    விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவனின் 60 வயது நிறைவு விழாவில் புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்டு பாடுபட்டு கொண்டி ருப்பவர் திருமாவளவன். மதச்சார்பற்ற கூட்டணிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற கூட்டணியாக மாற்ற பாடுபட்ட முக்கிய 2 தலைவர்களில் ஒருவர்

    தி.மு.க. முதல்-அமைச்சர் ஸ்டாலின், மற்றொருவர் திருமாவளவன். இவர்கள் இருவரும் மேற்குவங்க முதல்வர், பீகார் லல்லுபிரசாத் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்கள். மற்ற தலைவர்களும் சந்தித்தித்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இநத 2 தலைவர்களின் முயற்சியால் இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உருவாகியுள்ளது.

    எப்போதும் ஆவேசமாக பேசும் பிரதமர் மோடி இப்போது வசைபாடும் மோடியாக மாறிவிட்டார்.

    அதற்கு காரணம் பெங்களூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இந்த முடிவுகள் பிரதமர் மோடியை ஆடச்செய்திருக்கிறது.

    சமூக நீதி, தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை, அம்பேத்கரின் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க அவரது பேச்சு இருக்கும். தனது கொள்கையில் இருந்து எப்போதும், என்றும் மாறாத தலைவர் திருமாவளவன், தமிழகம், புதுவையை பிரித்து பார்க்காத தலைவர் திருமாவளவன். மோடிக்கு என் மீது மிகுந்த பாசம் உண்டு.

    ஏனென்றால் நரேந்திரமோடி சிபிஐ, உளவுத்துறையை அனுப்புகிறார் ஏன் நீங்கள் பயப்படுவதில்லை என்று கேட்டனர். நானும் சி.பி.ஐ அமைச்சராக இருந்துள்ளேன். நான் மோடியையும் பார்ப்பேன். அவரது தாத்தாவையும் பார்ப்பேன் என்றேன். மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள், சிறுபான்மையினரை குறி வைக்கின்றனர்.

    தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். மோடி இதை கண்டுகொள்வதில்லை. மோடியின் ஆட்சியில் வளர்ச்சி இல்லை. பொருளாதாரம் இல்லை. ஆனால் அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு அதிகாரம் துஷ்பிரோயகம் செய்து இந்த நாட்டில் மோடி ஆட்சியை நடத்திகொண்டு இருக்கிறார். இப்பொழுது நாட்டில் மாற்றம் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×