search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament Eelction"

    • ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது.
    • கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன்.

    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    அதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, நடிகைகள் குஷ்பு, ஆண்ட்ரியா, திரிஷா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் தனது வாக்கினை பதிவு செய்தனர்.

    இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது.

    ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
    • ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதாலும் அதன்பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் மற்றும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்த நிலையில் சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    திருநெல்வேலிக்கு ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதேபோல் கோவை, மதுரைக்கு ரூ. 2 ஆயிரம், திருச்சிக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் விரைவான சொகுசு பயணம் என்பதால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    நாளை(வியாழக்கிழமை) சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 1500 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட உள்ளது.

    இதில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு மூலம் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 7,154 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா வேரூன்ற செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி நேரடியாக பிரசார களத்திற்கு வருகிறார்.

    இதுவரை பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். நேற்று சென்னையில் ரோடு ஷோ சென்றார். இன்று வேலூர் மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அடுத்தபடியாக 13, 14, 15-ந் தேதிகளில் மீண்டும் தமிழகத்தில் விடுபட்ட பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.

    பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதேநேரத்தில் 2 தேசிய கட்சிகளுக்கும் அகில இந்திய அளவிலான தலைவர்கள் யாரும் புதுவையில் பிரசாரத்துக்கு வரவில்லை. அண்டை மாநிலத்துக்கு பிரதமர் பலமுறை வந்துள்ள நிலையில் பிரதமர் மோடி புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் இடத்துக்கு வராதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரிகள் என யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. தங்கள் கட்சி சார்பில் பிரசாரத்துக்கு யார், யார் வருவார்கள்? என தேர்தல் துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதியுடன் புதுவையில் பிரசாரம் நிறைவடைகிறது.

    இதனால் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இதன்பிறகும் தேசிய தலைவர்கள் யாரும் புதுவைக்கு வந்து பிரசாரம் செய்ய வருவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    • மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர்.
    • குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வின் மெத்தன போக்கால் நெசவு தொழில் முழுவதும் முடங்கி தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது. இதனால் தி.மு.க.வில் போதிய வேட்பாளர்கள் கூட இல்லாமல் அ.தி.மு.க.வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே சேலம், கோவை போன்ற நகரங்களில் தி.மு.க. வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் இருந்து சென்ற 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்களின் வியர்வையால் அடையாளம் காணப்பட்டு தற்போது சேலம், கோவை, தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க.வின் கோட்டை, இங்கு யாராலும் வெற்றி பெற முடியாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகிய என்னை 94 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போல் தற்போது அதைவிட கூட கூடுதலான வாக்குகளை சேலம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு அளிக்க வேண்டும்.

    இன்றைய தினம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி விட்டு வருகிறாங்க. 1000 ரூபாய் தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு கொடுத்திருக்காங்க. இந்த பணத்தை எப்படி கொடுத்தாங்கணு பார்க்கணும். நான் பல முறை சட்டமன்றத்தில் பேசி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் 27 மாதங்கள் கழித்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்றினாங்க. இந்த திட்டம் வருவதற்கு காரணம் அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. மட்டும் இல்லாவிட்டால் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைத்திருக்காது.

    இன்றைய தினமும் தி.மு.க.வினர் ஊர் ஊராக சென்று சுவர்களில் விளம்பரம் செய்கிறார்கள். இதை தடுத்தால் அந்த குடும்ப தலைவி பெறுகின்ற 1000 ரூபாய் வழங்குவதை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தினால் இதை நான் சட்டமன்றத்தில் விடமாட்டேன். இதற்கு துணை போகும் அதிகாரிகள் சஸ்பெண்டு, பணி நீக்கத்துக்கு ஆளாக நேரிடும்.

    இப்படி மக்களை வாட்டி வதைத்து அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வினர் சின்னம் வரைகின்றனர். மக்கள் விருப்பப்பட்டால்தால் சுவர்களில் எங்களுடைய சின்னம் வரைவோம். இல்லையென்றால் வரைய மாட்டோம். இதுதான் அ.தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. அப்படி அல்ல. அராஜக ஆட்சி. அதிகாரத்தினுடைய பலத்தை காட்டுகின்றார்கள்.

    குடும்ப தலைவிகளை மிரட்டி வாக்குகள் கேட்டால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என சொன்னோம். ஆனால் பல பகுதிகளில் நமக்கு வாக்கு சரியாக விழவில்லை.

    ஆனால் தி.முக. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு அமர்ந்த கட்சி தி.மு.க., இதுவரை 10 சதவீதம் திட்டம் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என சொன்னாங்க. அதுவும் இல்லை. விலையில்லா கறவை மாடு, ஆடுகள், கோழிகள் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. நம்முடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்தோம். அதையும் நிறுத்திட்டாங்க. அம்மா இருசக்கர வாகனம் நிறுத்திவிட்டாங்க. ஆகவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் கொடுத்த திட்டத்தையும் நிறுத்தி விட்டாங்க.

    தாலிக்கு தங்கம் ஒருபவுன், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரம் வழங்கினோம். அதையும் நிறுத்திட்டாங்க.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நிறுத்தப்பட்டதில் தான் சாதனை படைத்திருக்காங்க. இது தான் தி.மு.க. ஆட்சியினுடைய 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனை. ஆகவே அ.தி.மு.க. அப்படி அல்ல. ஒரு நல்ல திட்டம் என்று சொன்னால் அதை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினீக் தொடங்கினோம். அதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்திட்டாங்க. இப்படி பல திட்டங்களை ரத்து செய்த அரசாங்கம் தி.மு.க.

    நம்முடைய அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் டாக்டர்கள் ஆக வேண்டும் என 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்றி அமுல்படுத்தப்பட்டு இன்றைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கிறாங்க. நம்ம தொகுதியில் மட்டும் சுமார் 35 முதல் 40 பேர் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் படிக்கிறாங்க.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?
    • இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க.வின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நாட்டின் நிலையைப் பார்த்தால் மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வந்து விட்டதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி தேர்தலை சந்திக்க இயலாத நிலை உள்ளது.

    தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? புதிய சட்டத்தின் படி 2 தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஒரு சார்பான நடத்தையையே காட்டுகிறது.

    இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? 543 தொகுதிகளில் ஒரு தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.

    ஜாமின் கொடுக்காமல், வழக்கு விசாரணை நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல் டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார மன்னர் லண்டனில் இருந்தார் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.

    தமிழகத்துக்கு கடன் உதவி கிடைக்காத வகையில், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகத்துக்கு நிதி அளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக வரிப்பணத்தை மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசு, பேரிடர்களுக்கு 1 ரூபாய் கூட தருவதில்லை. நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள்.

    நாங்கள் சொல்லும் திட்டத்தின் கீழ் கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் நடத்தும் நீட் தேர்வை எழுதுங்கள் என கூறுகின்றனர். அரசியலமைப்பு கொடுத்த மாநில உரிமைகளை பறித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×