search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nationalist congress"

    • மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
    • மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி ஷங்கர் சின்ஹ் வகேலா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். #ShankersinhVaghela
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் 12வது முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷங்கர் சின்ஹ் வகேலா. இவர் 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை குஜராத் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஷங்கர் சின்ஹ் வகேலா தனது எம்.எல்.ஏ. பதவியை 16.8.17 அன்று ராஜினாமா செய்தார்.



    அதன்பின்னர், அகில இந்திய ஜன் விகல்ப்  மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கி 95 இடங்களில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி ஷங்கர் சின்ஹ் வகேலா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.  #ShankersinhVaghela
    ×