search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Train"

    • வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    டெல்லியில் மக்களின் பிரதான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது, இளம்ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

    இதைத்தொடர்ந்து, பொது இடங்களில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரித்து இருந்தது. ஆனாலும் பயணிகளின் அத்துமீறல் நின்றபாடில்லை. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சி உடை அணிந்து ஆபாசமாக நடனம் ஆடுவது போன்று காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நின்றுவிடக்கூடாது. அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் சிலர் பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.


    • 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
    • மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், வாரதி இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோ ரெயிலில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணிகள் ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பட்டாளம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அஷ்டபுஜம் ரோடு, ரங்கையா தெரு, ஏ.பி. ரோடு வழியாக டவுட்டன் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை வேப்பேரி பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிக்காக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    வடமலை தெரு முதல் அஷ்டபுஜம் ரோடு சந்திப்பு வரை இருவழிப்பாதையும் மூடப்பட்டுள்ளதால், டவுட்டனில் இருந்து செல்லும் வாகனங்கள் ஒரு வழிபாதையாக வடமலைத் தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேச பக்தன் தெரு வழியாக பெரம்பூர் நோக்கி செல்லலாம். பட்டாளம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அஷ்டபுஜம் ரோடு, ரங்கையா தெரு, ஏ.பி. ரோடு வழியாக டவுட்டன் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்ததை தொடர்ந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு மற்றும் போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    • சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே செல்லும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தொழில்நுட்பக் கோளாறால் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மீனம்பாக்கம்-விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் இடையே இன்று அதிகாலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரலுக்கு நேரடியாக மெட்ரோ ரெயில்களை இயக்க முடியவில்லை. ஆலந்தூர்-விமான நிலையம் இடையே சேவை முடங்கியது.

    தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறை சரி செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் என்று கூறியதால் அந்த வழித்தடத்தில் சேவை இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பயணிகள் விமான நிலையத்திற்கு பச்சை நிற வழித்தடம் வழியாக செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி மாறிச் செல்ல வேண்டும். பச்சை மற்றும் நீல நிற வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விம்கோ நகர் டெப்போவில் இருந்து விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பரங்கிமலை நிலையம் வரை வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

    சென்ட்ரல்-விமான நிலையம் இடையே நேரடி சேவை ரத்து செய்யப்பட்டதால் மக்கள் ஆலந்தூரில் மாறி செல்ல வேண்டியது இருந்தது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வழக்கமாக காலை நேரத்தில் மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு பகுதி சேவை ரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது.
    • பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரெயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.

    மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்றிலும் மக்கள் பயணிக்க முடியும்.

    அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இத்திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொதுப்போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    • புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது
    • மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு. 

    இதுவரை விபத்தில் சிக்கிய 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளனர்.

    • எக்ஸ் தளத்தில் பரவி வரும் வீடியோவில் மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகளுக்கு அருகே இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் உள்ளன.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட தம்பதி மீது மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.

    டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகள் சண்டை போட்டது, ஆபாச செயல்களில் ஈடுபட்டது, மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றது என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

    இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பெங்களூருவில் மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்ஜோடி மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளது. எக்ஸ் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில் மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகளுக்கு அருகே இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட தம்பதி மீது மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பெங்களூரு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது.
    • சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

    டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டம், இருக்கைகளுக்கு சண்டை போட்ட பயணிகள், இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குழு ஒன்று பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடும் காட்சிகள் உள்ளது. அந்த குழுவில் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அனைவருமே பாரம்பரிய பாடல்களை பாடிய நிலையில், சிறிது நேரத்தில் அனைவரும் குழுவாக சேர்ந்து நடனமாடுகின்றனர்.

    இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் பாரம்பரிய நடனத்தை பாராட்டினாலும், பொது இடங்களில் இதுபோன்ற நடனமாடுவது சரியல்ல என பதிவிட்டனர்.

    சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.



    • கருப்பு உடை அணிந்த பெண் மெட்ரோ ரெயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் சர்ச்சையான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே மெட்ரோவில் அத்துமீறிய பயணிகள், அரைகுறை ஆடையுடன் பயணம் செய்த பயணிகள்.

    ஜோடிகளின் முத்தமழை, பயணிகள் இடையே சண்டை என பல வீடியோக்கள் வைரலாகி இருந்த நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு ஆணின் மடியில் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக அமரும் காட்சிகள் உள்ளது.

    கருப்பு உடை அணிந்த அந்த பெண் மெட்ரோ ரெயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. அப்போது யாரும் தனக்கு இருக்கை வழங்காத நிலையில், அந்த பெண் ஒரு வாலிபரிடம் தனக்கு அமர இருக்கை தருமாறு கேட்கிறார். அதற்கு அந்த வாலிபர் மறுத்தார். உடனே அந்த பெண் வாலிபரின் மடியில் அமர்ந்து கொள்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் பெண் பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.
    • பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    பொதுவாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். அங்கு பயணிகளும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் சென்ற போது ஒரு வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக ரிஷிகா குப்தா என்ற பெண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் ரிஷிகா தனது பதிவில் ஒரு வாலிபரின் படத்தை பதிவிட்டிருந்தார்.

    அதில், அந்த வாலிபர் தன் மீது எச்சில் துப்பியதாக குறிப்பிட்டு இந்த வகையான மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒருவர் எவ்வளவு அழுக்காக இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் தனது செயலுக்காக வருத்தப்படவில்லை. அவரை போன்ற ஒரு வாலிபரை எந்த பெண்ணும் சந்திக்க கூடாது என ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவு 11 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது.
    • சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னை :

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. இதனால் சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக க்யுஆர் குறியீடு, வாட்ஸ்அப், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையான ஆன்லைன் முறைகளில் பயணச்சிட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தடைபட்டது. இதனால் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணத்தை மேற்கொண்டனர்.

    இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நிர்வாகம் சிஎம்ஆர்எல்-ல் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.

    • தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.
    • அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5-வது வழித்தடத்தில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.

    இதனால் அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும். இன்னும் சில ஆண்டுகளில் புதிய பாதையில் பயணிக்கும் போது நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் மேம்பாலம், குறுக்காக கீழே செல்லும் மெட்ரோ ரெயில்களை பார்த்து ரசிக்க முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் இதுவரை இல்லாத உயரத்திற்கு கிண்டியில் மிக உயரமான தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மிக உயரமான தூண்களை கட்டமைக்கும் பணி சவாலாக உள்ளது எனவும் இந்த வேலையை லார்சன் அண்ட் டூப்போரா நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.

    இதுகுறித்து திட்ட இயக்குனர் டி.அர்ச்சுணன் கூறியதாவது:-

    விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு மேலே இந்த மேம்பாலம் அமைவது பெரும் சவாலான பணியாகும்.

    'பேலன்ஸ் கான்டிலீவர்' என்ற பொறியியல் முறையை பின்பற்றி சமச்சீர் காண்டிலீவர் முறை 2 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது.


    சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும் போது தரையில் குறைந்த இடவசதி இருப்பதாலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. மேலும் தூண்களை மிக உயரத்தில் கட்ட வேண்டும். இந்த முறையில் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் மிக அதிகம். முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் அதே முறையை பயன்படுத்தி தூண்கள் கட்டப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி எல் அண்ட் டி திட்ட மேலாளர் கிருஷ்ண பிரபாகர் கூறியதாவது:-

    சமச்சீரான கேண்டிலீவர் கட்டுமானத்தில் கத்திப்பாரா சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு பட்ரோடு மற்றும் ஆலந்தூர் இடையே கூர்மையான வளைவை உருவாக்க சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 125 மீட்டர் சுற்றளவுக்கு இந்த வளைவலான பாதை அமைகிறது.

    கத்திப்பாரா மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டர் என்றாலும் சென்னை மெட்ரோ ரெயிலின் தாழ்வாரம் 20 மீட்டர் உயரத்தில் செல்கிறது. தூண்கள் 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்துடன் இருப்பதால் கான்கிரீட் அல்லது கட்டிட இடிபாடுகள் எவர் மீதும் விழாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

    மிக உயரமான தூண்கள் அடித்தளம் கத்திப்பாராவில் உள்ள பால்வெல்ஸ் சாலையில் உள்ளது. இது சாதாரண தூண் போல் இல்லாமல் மிகப்பெரியது.

    உயரமான தூணின் அடித்தளம் 1.5 மீட்டர் விட்டம் மற்றும் 12 பைல்கள் கொண்டதாகவும் தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதால் தூண் கட்டுவதற்கான முக்கிய பணிகள் தொடங்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×