search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loom workers"

    ராஜபாளையம் அருகே கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் விசைத் தறி தொழிலாளர்கள், வைண்டிங் தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், நூல் மற்றும் பாவு சுற்றும் தொழிலாளர்கள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை கூலி உயர்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

    இதனை கண்டித்தும், புதிய கூலி மற்றும் ஊக்க தொகை தொடர்பான ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் சார்பில் 2 முறை போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் 4 கட்ட பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது.பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 3 வாரங்களாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.

    இருப்பினும் உற்பத்தியாளர்கள் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 50 சதவீதம் கூலி உயர்வு, நாள் ஒன்றுக்கு ரூ. 15 ஊக்க தொகை, விடுமுறை ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 250 வழங்க கோரி இன்று முதல், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

    தளவாய்புரம் பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பந்தலில், நாள் ஒன்றுக்கு 20 தொழிலாளர்கள் என சுழற்சி முறையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் தொழிற் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் தரப்பில் இருந்து நாளை மாலை 5 ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படா விட்டால் மறியல், கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

    கூலி உயர்வு வழங்க கோரி ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது.

    இந்த தொழிலில் விசைத்தறி தொழிலாளர்கள், வைண்டிங் தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், நூல் மற்றும் பாவு சுற்றும் தொழிலாளர்கள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை கூலி உயர்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரை எந்த பதிலும் இல்லை.

    இதனை கண்டித்தும், புதிய கூலி மற்றும் ஊக்க தொகை தொடர்பான ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் சார்பில் 2 முறை போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 3 வாரங்களாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.

    இருப்பினும் உற்பத்தியாளர்கள் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 50 சதவீதம் கூலி உயர்வு, நாள் ஒன்றுக்கு ரூ. 15 ஊக்க தொகை, விடுமுறை ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 250 வழங்க கோரி இன்று முதல், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

    தளவாய்புரம் பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பந்தலில், நாள் ஒன்றுக்கு 20 தொழிலாளர்கள் என சுழற்சி முறையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் தரப்பில் இருந்து நாளை மாலை 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மறியல், கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு தறி தொழிலாளி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். தறித்தொழிலாளி. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் மனு கொடுக்க வந்த அவர் தடீரென அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் எனக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என நினைத்து கயிறு திரிக்கும் தொழில் நடத்துவதற்காக கருப்பூர் மின்சார அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு மனு வழங்கினேன்.

    கடந்த 6 மாதம் ஆகியும் மின் இணைப்பு கோரிய மனுவிற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அதிகாரியிடம் மின் இணைப்பு கேட்டு புகார் தெரிவித்தேன்.

    இதையடுத்து மின் ஊழியர்கள் மின் இணைப்புக்காக அளவீடு செய்தனர். அளவீடு செய்து 3 மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

     இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இன்று விடுமுறை என்பதால் கலெக்டர் இல்லை. ஆகவே அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விடுமுறை நாளில் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சங்கரன்கோவிலில் கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.
    நெல்லை:

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் ரூ. 300 என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வந்தனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பாக நெல்லை தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர் களுடன் ஏற்கனவே 4 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பாளையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 5-வது கட்டமாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முடிவு எதுவும் எட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தை 5-வது முறையாக‌ தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 40-வது நாளாக நீடித்தது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுமார் 20 கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பாளையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிற் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள், அதிகாரிகள் தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 19 சதவீத கூலி உயர்வு, விசைத்தறி உரிமையாளர்களுக்கு 17 சதவீத ஒப்பந்த தொகை உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதை தொடர்ந்து கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.

    விசைத்தறி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முக்கிய கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை ஜி.கே. வாசன் வலுயுறுத்தி உள்ளார். #GKVasan #TNGovernment
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விசைத்தறி உற்பத்தியாளர்களும், ஒப்பந்த முறையில் துணிகளை உற்பத்தி செய்து கொடுப்பவர்களும் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் விசைத்தறி மற்றும் அதன் சார்ந்த பிற தொழில் செய்பவர்கள் ஏற்கனவே தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் முடியும் தருவாயில் கூலி உயர்வு கேட்டு, நியாயமான கோரிக்கையை முன் வைத்து கடந்த 30.04.2018 அன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். ஆனால் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.



    ஒரு நெசவு தொழிலாளி ஒரு நாள் 9 மணி நேரம் வேலை செய்தால் ரூபாய் 180 ரூபாய் கூலி பெறும் அவல நிலையில் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய விலைவாசியில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு மிகவும் அவசியமானது. எனவே தமிழக அரசு விசைத்தறி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முக்கிய கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #GKVasan #TNGovernment
    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிந்ததால் 12-வது நாளாக ஸ்டிரைக் நீடித்தது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பிரதான முக்கிய தொழில் விசைத்தறி தொழிலாகும். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருந்து நாள் ஒன்றுக்கு ரூ 40 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் ஒப்பந்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு தற்போது முடிவடைந்தது. இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ 300 வழங்கக்கோரி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இது பற்றி காவல்துறையினர், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து சமாதான கூட்டத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் பேசி முடிவு செய்யலாம் என்று கேட்டுக்கொண்டதின் பேரில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாநில தலைவர் கோபி குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலாளர் அசோக்ராஜ், நிர்வாகிகள் லெட்சுமி, சக்திவேல், சுப்பையா, புளியங்குடி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலு, செயலாளர் பழனி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், சிந்தாமணி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் அங்கப்பன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி லெட்சுமியாபுரம் 4ம் தெருவில் இருந்து துவங்கி திருவேங்கடம் சாலை வழியாக சங்கரன்கோவில் தாலுகா அலுவகத்தில் சென்றடைந்தது. பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், உரிமையாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் நெல்லை தொழிலாளர் நலத்துறை அதிகாரி முகம்மது அப்துல் காதர் கலந்துகொண்டார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உரிமையாளர்கள் தரப்பில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கூலி உயர்வு வழங்க இயலாது என தெரிவித்தனர். இதனால் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து ஸ்டிரைக் நீடிப்பதாக விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்தனர்.

    விசைத்தறி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 12-வது நாளாக நீடிக்கிறது. இத‌னால் ரூ 5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 14-ந்தேதி(திங்கட்கிழமை) நெல்லை தொழிலாளர்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. #tamilnews

    ×