search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "negotiate"

    அணு ஆயுதங்களை அழிக்க வடகொரிய அதிபர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்நாட்டுடன் உடனடி பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo #US
    வாஷிங்டன்:

    வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டது. அதன் அடிப்படையில், அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அணு ஆயுத சோதனையை நிறுத்த ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து சமீபத்தில் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார். அதன்பின்னர், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிரூபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறினார்.



    இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உலக அணு ஆயுத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் முற்றிலும் நிறுத்த கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2012-ம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக கொரியன் தீபகற்பத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு அமையும் எனவும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo #US
    விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கத்தினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    கரூர்:

    விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எனவே இவ்வாறான மின் திட்டங்களுக்கு மாற்றாக சாலையோரமாக கேபிள் பதித்து மின் வயர்களை கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முன்னூர் கிராமம், தென்னிலை கீழ்பாகம், க.பரமத்தி ஆகிய இடங்களில் சில விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கு கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, சாலையோரமாக கேபிள் வயர்களை பதித்து மின்திட்டத்தை செயல்படுத்துமாறும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, மாவட்ட செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் ஈசன், ஆடிட்டர் நல்லுசாமி, செந்தில் உள்பட நிர்வாகிகள், விவசாயிகளுடன், நேற்று அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது உயர் மின் கோபுரம் அமைக்கும் போது அதன் திட்டப்பாதை விவசாய நிலத்தின் உள்ளே செல்வதால் மரம் வளர்த்தல் உள்ளிட்டவை தடைபடுகிறது. மேலும் நீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதிக்கின்றனர்.

    அந்த மின்பாதையில் ஏற்படும் மின் தூண்டலினால் பயிர் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலத்தையொட்டி வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிப்படையக்கூடும். எனவே கரூரில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் கூறினர். அப்போது இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் பதில் கூறினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    உயர் மின்கோபுர திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாழ்படுவதை தவிர்ப்பதற்கான ஒரே வழி கேபிள் மூலம் புதை வழித்தடத்தில் மின்வயர்களை கொண்டு செல்வது தான். எனவே இதை தான் கரூரில் நடைமுறைப்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தினோம். இந்த பிரச்சினை திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருக்கிறது. ஆனால் இந்த உயர் மின்கோபுர திட்டபாதையால் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை பொது மேடையிலோ அல்லது முக்கியஸ்தர்களின் முன்னிலையிலோ யாராவது வாதம் செய்து விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டியக்கம் சார்பில் ரூ.1 கோடி பரிசு தந்து விடுகிறோம். மேலும் விவாத மேடையிலேயே ரூ.1 கோடியை காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ (டிடி) வைத்து விட்டு நாங்கள் பாதிப்புகளை முன்வைக்கிறோம். அந்த சமயத்தில் அதிகாரிகள் பாதிப்புகள் இல்லை என நிரூபிக்க தவறினால், ஏற்கனவே போடப்பட்டுள்ள உயர் மின்கோபுரங்களை கழற்றி கேபிள் மூலம் மாற்று முறையில் அதனை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக நெல்லை தொழிலாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் மீண்டும் 18-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
    நெல்லை:

    விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு கேட்டும், ரூ.300 விடுமுறை கால சம்பளம் கேட்டும் சங்கரன்கோவிலில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பான 2-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் அப்துல் காதர் சுபைர் தலைமை தாங்கினார். தொழிற்சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், புளியங்குடி விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் வேலு, விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் சங்க தலைவர் ஆர்.ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் பி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், பொருளாளர் முத்துசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பில் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2014-15 ஆண்டுக்கான அடிப்படை கூலிதான் தரமுடியும் என்றும், அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க முடியாது என்று விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து இது தொடர்பான 3-வது கட்ட பேச்சுவார்த்தையை வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். 
    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிந்ததால் 12-வது நாளாக ஸ்டிரைக் நீடித்தது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பிரதான முக்கிய தொழில் விசைத்தறி தொழிலாகும். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருந்து நாள் ஒன்றுக்கு ரூ 40 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் ஒப்பந்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு தற்போது முடிவடைந்தது. இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ 300 வழங்கக்கோரி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இது பற்றி காவல்துறையினர், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து சமாதான கூட்டத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் பேசி முடிவு செய்யலாம் என்று கேட்டுக்கொண்டதின் பேரில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாநில தலைவர் கோபி குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலாளர் அசோக்ராஜ், நிர்வாகிகள் லெட்சுமி, சக்திவேல், சுப்பையா, புளியங்குடி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலு, செயலாளர் பழனி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், சிந்தாமணி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் அங்கப்பன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி லெட்சுமியாபுரம் 4ம் தெருவில் இருந்து துவங்கி திருவேங்கடம் சாலை வழியாக சங்கரன்கோவில் தாலுகா அலுவகத்தில் சென்றடைந்தது. பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், உரிமையாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் நெல்லை தொழிலாளர் நலத்துறை அதிகாரி முகம்மது அப்துல் காதர் கலந்துகொண்டார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உரிமையாளர்கள் தரப்பில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கூலி உயர்வு வழங்க இயலாது என தெரிவித்தனர். இதனால் பேச்சுவர்த்தை தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து ஸ்டிரைக் நீடிப்பதாக விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்தனர்.

    விசைத்தறி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 12-வது நாளாக நீடிக்கிறது. இத‌னால் ரூ 5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 14-ந்தேதி(திங்கட்கிழமை) நெல்லை தொழிலாளர்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. #tamilnews

    ×