search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korukkupet"

    கொருக்குப்பேட்டை அருகே அரிவாளுடன் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகர் பகுதியில் ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத், விக்னேஷ், பாலாஜி என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னேரியில் உள்ள மது பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தீர்த்துக் கட்ட அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வாலிபர் ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார். #GoldRobbery
    பெரம்பூர்:

    கொருக்குப்பேட்டை உள்ளார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வரும் இவர் வீட்டின் அருகிலேயே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் வீட்டில் வேலை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த அன்ஸ்ராஜ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து இருவரையும் தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ரெயிலில் செல்வது தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார், ஆந்திர ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது இருவரும் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி சென்ற நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்வதை தெரிந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயில் அங்கு வந்ததும் அதில் இருந்து இறங்கிய அன்ஸ்ராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ தங்கமும் 120 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அன்ஸ்ராஜுடன் இருந்த அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

    இதுபற்றி சென்னை கொருக்குப்பேட்டை போலீசாருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார் அன்ஸ்ராஜை பிடிப்பதற்காக விஜயவாடா விரைந்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் தான் இந்த சம்பவம் பற்றி முழுமையான தகவல் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #GoldRobbery
    கொருக்குப்பேட்டையில், நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது. #GoldRobbery
    பெரம்பூர்:

    சென்னை கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகிலேயே சொந்தமாக நகைக்கடையும் வைத்து உள்ளார்.

    நேற்று இவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். சந்தோஷ், கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    அதில், சந்தோஷ் வியாபாரத்துக்காக தனது வீட்டில் வைத்து இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என சந்தோஷ் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    அத்துடன் நகை வியாபாரி சந்தோசிடமும், அவரது வீட்டுக்கு யார் யார்? வந்து செல்வார்கள்?, உண்மையிலேயே நகை, வெள்ளி கொள்ளை போனதா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #GoldRobbery
    கொருக்குப்பேட்டையில் பள்ளி அருகே பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பேப்பர் குடோன் வைத்தவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். #FireAccident
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, தியாகப்ப செட்டித் தெருவில் பழைய பேப்பர் குடோன் உள்ளது.

    இதன் அருகிலேயே அரசு உதவி பெறும் நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க் கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இன்று காலை 8 மணியளவில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது பேப்பர் குடோனில் இருந்த கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பற்றி எரிந்தது.

    இதனால் அருகில் இருந்த பள்ளிக்குள் கரும்புகை பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

    குடோன் இருந்த தெரு மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனத்தை அருகில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் குடோனின் ‌ஷட்டர், ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த பேப்பர் பண்டல்கள், பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீயின் தாக்கம் காரணமாக கரும்புகை, வெப்பம் அருகில் இருந்த பள்ளிக்கும் பரவியதால் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவ-மாணவிகள் பத்திரமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தீ விபத்து பற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “பள்ளி அருகே பேப்பர் குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லை. பள்ளிக்கும் தீ பரவி இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும்.

    பள்ளிக்குள் செல்லும் மாணவ - மாணவிகள் குடோன் அருகில் உள்ள குறுகலான பாதை வழியாகவே சென்று வருகிறார்கள். தீ முழுவதும் பற்றி எரிந்து இருந்தால் மாணவர்கள் வெளியே வர முடியாத நிலையும் உருவாகி இருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பி உள்ளனர்” என்றனர்.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தீ விபத்தில் தப்பிய பள்ளியை கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பேப்பர் குடோன் வைத்தவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கொருக்குப்பேட்டையில் சோப்பு கம்பெனியில் ரூ.6½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, கார்நேசன் நகரை சேர்ந்தவர் செல்வம். அதே பகுதியில் சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கம்பெனியை பூட்டிச் சென்றனர். நேற்று மதியம் செல்வம் கம்பெனிக்கு வந்தார்.

    அப்போது கம்பெனியின் மேற்கூரை ஆஸ்பெஸ்டா ஷீட் உடைந்து கிடந்தன. கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 6½ லட்சம் மாயமாகி இருந்தது. மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களை சேதப்படுத்தி அதன் பதிவு கருவியையும் கொள்ளை கும்பல் எடுத்து சென்று விட்டனர்.

    அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக ஏறிக்குதித்து கொள்ளை கும்பல்  கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. இது குறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×