search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iftar party"

    • மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார்.
    • அந்த விபத்தில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெற்றியில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து நலமுடன் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நெற்றி காயத்துடன் மம்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா மேயர் மற்றும் மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த இப்தார் விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி உள்பட பலர் பங்கேற்றனர். #IftarParty #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் முக்தார் அப்பாஸ் நக்வி.

    இவர் தலைநகர் டெல்லியில் இன்று இப்தார் விருந்து அளித்தார். இந்த விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  மற்றும் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



    முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்க்காகவே இந்த இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #IftarParty #MukhtarAbbasNaqvi
    டெல்லியில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட பலர் பங்கேற்றனர். #Congress #IftarParty #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, முதல் முறையாக இன்று இப்தார் விருந்து அளித்தார். டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    இந்த இப்தார்  விருந்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல்  மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஷீலா தீட்சித், அகமது படேல்,  சீதாராம் யெச்சூரி, கனிமொழி, சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



    மேலும், ரஷ்யா நாட்டு தூதர் நிகோலய் குகஷேவ் உள்பட பல வெளிநாட்டு பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். #Congress  #Congress #IftarParty #RahulGandhi 
    ரம்ஜான் நோன்பை ஒட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்படும் இப்தார் விருந்து இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்தாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Iftarparty
    புது டெல்லி :

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இடையில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்த 2002- 2007 காலகட்டத்தில் இப்தார் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கைவிடார். இப்தார் நோன்பு நிகழ்சிக்கு ஆகும் செலவை ஆதரவற்றோர் நலனுக்காக அவர் அளித்து வந்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளிக்கப்படாது என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் அசோக் மாலிக் கூறியதாவது :-

    ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர் மத ரீதியான எந்த நிகழ்சிகளும் பொதுமக்களின் வரி பணத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடத்துவது இல்லை என அவர் முடிவு செய்துள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் கொள்கையின் அடிப்படையில் மதம் தவிர அனைத்து சமய நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும்.

    நிச்சயம் அனைத்து மத விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பார் என அசோக் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.  #Iftarparty
    ×