search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hoisted"

    • 75-வது சுதந்திரதினவிழாவையொட்டி ஈரோட்டில் கலெக்டர் தேசியகொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாலமாக நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் ஆரஞ்ச், வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண பலூனை பறக்க விட்டார். பின்னர் கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றவாறு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 53 பேர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 பேர், துணை இயக்குனர் குடும்ப நலப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றி 15 பேர், இணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 313 பேருக்கு

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பாலசுப்ரமணியம், ஏ.டி.எஸ்.பிக்கள் கனகேஸ்வரி, ஜானகிராமன், டவுன் டி. எஸ்.பி ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர்.

    பல்லடம் :

    75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 15-ந்தேதி வரை வீடுகள், நிறுவனங்கள் , கடைகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டன.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டன. மேலும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் வீடுகள் தோறும் தேசிய ெகாடிகள் விநியோகிக்கப்பட்டன. அதனை பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு ஏற்றினர்.

    பல்லடம் நகராட்சியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேசிய கொடியை ஏற்ற வைக்கும் நோக்கில் 18 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கினர். அந்த கொடிகள் இன்று வீடுகள் மற்றும் கடைகளில் ஏற்றப்பட்டது.  

    நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர். #Stormwarning
    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் இன்று (14-ந்தேதி) புதிய புயல் உருவாகி உள்ளது.

    இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும், எனவே 15, 16 ஆகிய நாட்களில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    மேலும் இந்த புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதாகவும், அப்போது 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆழ்கடல் சென்று மீன் பிடித்த நாகை மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் புதிய புயல் என்ன சேதத்தை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி நாகை மாவட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Stormwarning

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும்.

    புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி வரை நீடிப்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    இதனிடையே வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    கீழ்வேளூர்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று வீசிய வண்ணம் இருந்தது.

    வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு தொலை தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்பதை குறிப்பதாகும். இருந்தபோதிலும் நாகை மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை வெயில் சுட்டெரிக்கிறது. கடல் பரப்பில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் கடல்களில் சுமார் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழும்பி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இன்றும் 3-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்து வருகின்றனர்.



    வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    கடலூர்:

    வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதோடு கடல் சீற்றமாக காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ×