search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry port"

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும்.

    புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி வரை நீடிப்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×