search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handloom weavers"

    • கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்து உள்ள முகாசிபிடாரியூரில் டாக்டர் கலைஞர் நூற்றா ண்டு விழாவினை முன்னி ட்டு ஈரோடு மாவட்ட கைத்தறித் துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    இதன் தொடக்க விழா விற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ் மற்றும் அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கைத்தறி நெசவாளர்களின் குறை களை கேட்டறிந்து சங்க வளாகத்தில் மரக் கன்று களை நட்டு வைத்தார்.

    மேலும் கைத்தறித்துறை யின் சார்பில் சென்னிமலை தொழிலியல், காளிக்காவலசு தொழிலியல்,சென்னிமலை இந்திரா, மைலாடி மற்றும் சுப்பிரமணியசாமி ஆகிய 5 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.63 லட்சம் மதிப்பீட்டிலான தொழில் நுட்ப தறி உபகர ணங்களையும், 5 நெசவா ளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ், 13 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கினார்.

    முன்னதாக சாமிநாதன் வேளாண்மை உழவர் நலன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறைகளின் சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமை க்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீ தேவி அசோக், கைத்தறித்துறை உதவி இயக்குநர் பெ.சரவணன், தலை மை பொது குழு உறுப்பி னரும், முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனருமான சா.மெய்யப்பன், முகாசி பிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஸ் என்கிற சுப்பிரமணியம்,

    கைத்தறி கூட்டுறவு சங்க மேலா ளர்கள் இந்திரா டெக்ஸ் சுகுமார் ரவி, காளிக்கோப் டெக்ஸ் கே.என்., சுப்பிர மணியம், சென்கோப்டெக்ஸ் சி.சுப்பிரமணியம், சென்டெ க்ஸ் பாஸ்கர், மயில் டெக்ஸ் ரகுபதி, சுவாமி டெக்ஸ் குழந்தைவேலு, கொங்கு டெக்ஸ் ராஜா,

    அண்ணா டெக்ஸ் ரமேஷ், சென்குமார் டெக்ஸ் துரைசாமி, பி.கே., புதூர் டெக்ஸ் மூர்த்தி, மெட்றோ டெக்ஸ் வெள்ளி யங்கிரி, சிரகிரி டெக்ஸ் சுரேஷ், அம்மா டெக்ஸ் கிருஷ்ண மூர்த்தி, சேரன் டெக்ஸ் அழகு என்கிற சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட கைத்தறி துறை கைத்தறி அலுவலர் ஜானகி, கைத்தறி ஆய்வாளர்கள் யுவராஜ், பிரபாகர் மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    • நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.


    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.

    தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

    தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.

    எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.

    நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.

    ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.

    கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

    தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.

    மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.

    எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • முத்ரா திட்டம் மூலம் கடன் பெற்ற விவசாயிகள் பலருக்கு அதற்குரிய மானியம் கிடைக்கவில்லை.
    • கோ ஆப்டெக்ஸ் நிா்வாகம் நெசவாளா்களிடம் கூலியை மிகவும் குறைத்துக் கொடுத்து விலை நிா்ணயம் செய்கின்றனா்.

    பல்லடம் :

    கைத்தறி சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ள சூழலில் கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கைத்தறி நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    கோவை மண்டல கைத்தறி சங்க பொதுச் செயலாளா் நடராஜன், கோவை மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்களிடம் நெகமம் காட்டன் ரக சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ளது. உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் இவற்றின் தேவை அதிகம் உள்ளது.

    ஆனால் நெசவு செய்வதற்கு தறிகள் குறைவாகவே உள்ளன. கோ ஆப்டெக்ஸ் நிா்வாகம் நெசவாளா்களிடம் கூலியை மிகவும் குறைத்துக் கொடுத்து விலை நிா்ணயம் செய்கின்றனா். இதனால் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப கூலியை உயா்த்த வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்கள் கேட்கும் மில்களின் நுால்களை கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த புங்கா் பீமா யோஜனா திட்டம் கிடப்பில் உள்ளது. எண்ணற்ற கைத்தறி நெசவாளா் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    முத்ரா திட்டம் மூலம் கடன் பெற்ற விவசாயிகள் பலருக்கு அதற்குரிய மானியம் கிடைக்கவில்லை. நெசவாளா்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் தருவதாக அரசு அறிவித்து இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. துணி நெசவு செய்வதற்கு தரமுள்ள நூல் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் கு.வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பாலாஜி, மாவட்ட அமைப்பு தலைவர் பாபுயாதவ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜி. சுரேஷ்குமார் உள்பட அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மகளிர் சங்க தலைவர் கலைவாணி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    ஒன்றிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் உடன் இணைந்து 15 பேர் கொண்ட கிளை பொறுப்பை நியமிப்பது, 5 பேர் கொண்ட அணி பொறுப்பை நியமித்து தின்னை பிரசாரம் குழுவை நியமிப்பது.

    குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி வாகனம் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கும், ஆம்புலன்சில் வரும் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தனியார் மில்லில் இருந்து நூல் கொள்முதல் செய்து கைத்தறி சங்க நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.

    பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நேதாஜி சவுக் ஒரு வழி பாதையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.

    கூட நகரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்டாமல் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்காத பொதுப்பணி துறையையும், நெடுஞ்சாலை துறையையும் கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.
    • மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.

    பல்லடம் :

    கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாரதீய மஸ்தூர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து அதன் கோவை மண்டல பொது செயலாளர் நடராஜன் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. பாரம்பரியமாக நெசவு செய்து வரும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.குறைந்த கூலி வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வரும் நெசவாளர்களின் நலன் கருதி மகாத்மா காந்தி பங்கர் பீமா யோஜனா காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தில் உறுப்பினர் இயற்கை மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு 60 ஆயிரம் ரூபாய், விபத்து மரணம், அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் 1.50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.ஆனால் 4 ஆண்டாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இத்திட்டத்தில் இணைந்த நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு கிடைப்பதில்லை. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், முத்ரா கடனுக்கு மானியம் வழங்காதது, கூட்டுறவு சங்கங்களில் சேலை உற்பத்தி செய்த உறுப்பினர்களின் கணக்கிலேயே, மானிய தொகையை வரவு வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்த றியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், விதவைகள், ஆதரவற்றோர், மிக மூத்தோர், அந்தி–யோதயா அன்னயோஜனா திட்ட கார்டுதாரர்கள் போன்றோருக்கு ரேஷன் கடைகள் மூலம், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    அத்துடன் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை கிடைத்தது.

    கடந்தாண்டு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்தறியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நடப்பாண்டு பட்ஜெட்டிலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானிய கோரிக்கையிலும், இதற்கான அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு பற்றியும் தெரிவிக்காததுடன் நேற்று வரை ஆர்டர் வழங்கவில்லை. இதனால், பொங்கலின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

    பொங்கலின்போது வினியோகிப்பதற்காக, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை ஆர்டர் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் கைத்தறியிலும், 70 சதவீதம் விசைத்தறியிலும் நெய்து வழங்கப்படும்.

    இந்த ஆர்டரில் 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

    தற்போது ரயான் நூல் விலை உயராத நிலையில், துணி விலை மீட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் சரிந்து, விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்திலும், தொடர்ந்து விசைத்தறியை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம்.

    வழக்கமாக பட்ஜெட்டில் நிதியும், எவ்வளவு எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்தி செய்வது என அறிவிக்கப்படும். மே மாதத்துக்குள் நூலுக்கு டெண்டர் விடப்பட்டு, அந்தந்த பகுதிக்கு நூலும், சொசைட்டி மூலம் நிதியும் வழங்கப்படும்.

    ஜூன் மாதம் உற்பத்தி தொடங்கினால் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற டையும். பொங்கலுக்கு முன் 90 சதவீதம் பேருக்கு சென்றடையும்.

    நடப்பாண்டு நிதி அறிவிப்பு இல்லை. டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யாததால் நூல் வரத்துக்கு இன்னும் சில வாரங்களுக்கு மேலாகும். இருப்பினும் விரைவாக பணி வழங்கினால் முடங்கி கிடக்கும் விசைத்தறிகளுக்கு தொடர் வேலை கிடைக்கும்.

    கடந்தாண்டு போல இல்லாமல் விரைவாக வேட்டி, சேலையை உற்பத்தி செய்து வழங்க வாய்ப்பாகும். இதுபற்றி, அரசு விரைவான முடிவை அறிவிக்க வேண்டும்.

    இதன் மூலம் ஈரோடு பகுதியில் மட்டும் 30 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் பயன் பெறும். பல லட்சம் விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
    • தமிழக கைத்தறி நெச–வாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்க–ளுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    சென்னிமலை: –

    கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான கே.எஸ்.பி. ராஜேந்திரன், தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக கைத்தறி நெசவாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் இன்றளவும் நடைமுறைப்படுத்த படவில்லை.

    நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நெசவாளர் பசுமை வீட்டு திட்டம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடுமையாக நூல்விலை உயர்வின் காரனமாக நெசவாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பைகூட வழங்க முடியாமல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிரம நிலையில் உள்ளன.

    பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ள ஜவுளிகளை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யவும், நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த மத்திய அரசினை வலியுறு–த்தவும் தமிழக கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×