search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare assistance for"

    • கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்து உள்ள முகாசிபிடாரியூரில் டாக்டர் கலைஞர் நூற்றா ண்டு விழாவினை முன்னி ட்டு ஈரோடு மாவட்ட கைத்தறித் துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    இதன் தொடக்க விழா விற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ் மற்றும் அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கைத்தறி நெசவாளர்களின் குறை களை கேட்டறிந்து சங்க வளாகத்தில் மரக் கன்று களை நட்டு வைத்தார்.

    மேலும் கைத்தறித்துறை யின் சார்பில் சென்னிமலை தொழிலியல், காளிக்காவலசு தொழிலியல்,சென்னிமலை இந்திரா, மைலாடி மற்றும் சுப்பிரமணியசாமி ஆகிய 5 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.63 லட்சம் மதிப்பீட்டிலான தொழில் நுட்ப தறி உபகர ணங்களையும், 5 நெசவா ளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ், 13 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கினார்.

    முன்னதாக சாமிநாதன் வேளாண்மை உழவர் நலன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறைகளின் சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமை க்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீ தேவி அசோக், கைத்தறித்துறை உதவி இயக்குநர் பெ.சரவணன், தலை மை பொது குழு உறுப்பி னரும், முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனருமான சா.மெய்யப்பன், முகாசி பிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஸ் என்கிற சுப்பிரமணியம்,

    கைத்தறி கூட்டுறவு சங்க மேலா ளர்கள் இந்திரா டெக்ஸ் சுகுமார் ரவி, காளிக்கோப் டெக்ஸ் கே.என்., சுப்பிர மணியம், சென்கோப்டெக்ஸ் சி.சுப்பிரமணியம், சென்டெ க்ஸ் பாஸ்கர், மயில் டெக்ஸ் ரகுபதி, சுவாமி டெக்ஸ் குழந்தைவேலு, கொங்கு டெக்ஸ் ராஜா,

    அண்ணா டெக்ஸ் ரமேஷ், சென்குமார் டெக்ஸ் துரைசாமி, பி.கே., புதூர் டெக்ஸ் மூர்த்தி, மெட்றோ டெக்ஸ் வெள்ளி யங்கிரி, சிரகிரி டெக்ஸ் சுரேஷ், அம்மா டெக்ஸ் கிருஷ்ண மூர்த்தி, சேரன் டெக்ஸ் அழகு என்கிற சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட கைத்தறி துறை கைத்தறி அலுவலர் ஜானகி, கைத்தறி ஆய்வாளர்கள் யுவராஜ், பிரபாகர் மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    ×