search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம், பசுமைவீடு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
    X

    கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம், பசுமைவீடு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

    • கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
    • தமிழக கைத்தறி நெச–வாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்க–ளுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    சென்னிமலை: –

    கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான கே.எஸ்.பி. ராஜேந்திரன், தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக கைத்தறி நெசவாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் இன்றளவும் நடைமுறைப்படுத்த படவில்லை.

    நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நெசவாளர் பசுமை வீட்டு திட்டம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடுமையாக நூல்விலை உயர்வின் காரனமாக நெசவாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பைகூட வழங்க முடியாமல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிரம நிலையில் உள்ளன.

    பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ள ஜவுளிகளை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யவும், நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த மத்திய அரசினை வலியுறு–த்தவும் தமிழக கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×