search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Insurance Scheme"

    • மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு, கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

    இந்த விழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் உயர்சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை வழங்கிய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனை உள்ளிட்ட மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும், 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான அட்டையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 காப்பீட்டு திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகே சன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மேலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11 அரசு மருத்துவமனைகள் மற்றும் 53 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் கீழ் உள்ளவா்கள் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பப் படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையைக் காண்பித்து பயன்பெறலாம்.

    திருச்சி ;

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஆரோக்கியத் திட்டத்தின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சை பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் கலந்துகொண்டு பரிசுகளையும், புதிதாக மருத்துவக் காப்பீட்டுத் திட்ட உறுப்பினா்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் கேடயங்களையும் வழங்கி பாராட்டினார்.

    அப்போது அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11 அரசு மருத்துவமனைகள் மற்றும் 53 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 2021–-22 ஆம் ஆண்டில் 23,499 பயனாளிகளுக்கு ரூ.43.38 கோடி மதிப்பில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தில் மொத்தம் 1,450 மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைகளும் 38 நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடா்புடைய 154 தொடா் சிகிச்சைகளும் 8 உயா் அறுவை ச்சிகிச்சைகளும் சோ்க்கப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் கீழ் உள்ளவா்கள் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பப் படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையைக் காண்பித்து பயன்பெறலாம்.

    வருமான வரம்பு இல்லாத விதவைகள், முதியோா் உதவித்தொகை பெறுபவா்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்த இலங்கைத் தமிழா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் அதற்குண்டான அடையாள அட்டையைக் காண்பித்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட புகைப்படம் எடுக்கும் மையத்தில் காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

    மாவட்டத்தில் இதுவரை 5,00,679 குடும்பத்தினா் இத்திட்டத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.

    • கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
    • தமிழக கைத்தறி நெச–வாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்க–ளுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    சென்னிமலை: –

    கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான கே.எஸ்.பி. ராஜேந்திரன், தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக கைத்தறி நெசவாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் இன்றளவும் நடைமுறைப்படுத்த படவில்லை.

    நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நெசவாளர் பசுமை வீட்டு திட்டம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடுமையாக நூல்விலை உயர்வின் காரனமாக நெசவாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பைகூட வழங்க முடியாமல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிரம நிலையில் உள்ளன.

    பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ள ஜவுளிகளை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யவும், நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த மத்திய அரசினை வலியுறு–த்தவும் தமிழக கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    பிரதமரின் ஆயுஷ்மன் பாரத் மருத்துவ காப்புறுதி திட்டத்தில் முதல்முறை சிகிச்சை பெற ஆதார் எண் அவசியமில்லை. ஆனால், இரண்டாம் முறை ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #AyushmanBharat
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக பிரதமரின் ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறும் மத்திய அரசின் திட்டத்தை 23-9-2018 அன்று ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரம் மற்றும் சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மருத்துவக் காப்பீட்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும். இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதில் பணம் செலுத்தி மருத்துவம் பெற்றுக் கொண்டு, பிறகு கட்டண பில்களை செலுத்தி, பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி கிடையாது.

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு மருத்துவமனைகள், மாநில அரசு மருத்துவமனைகள் மற்றும் சுமார் 15 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள்.
     
    இந்நிலையில், இந்த திட்டத்தில் முதல்முறை சிகிச்சை பெற ஆதார் எண் அவசியமில்லை. ஆதார் அட்டை இருந்தால் அதை காட்டலாம். அல்லது, வாக்களர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய அரசு ஆவணங்களை காட்டி சிகிச்சை பெறலாம்.


    ஆனால், ஆதார் அட்டைக்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் குறிப்புட்டுள்ளதால் இரண்டாம் முறை ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இரண்டாம் முறை இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற வருபவர்களுக்கு ஆதார் எண் இல்லை என்றாலும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த மனு எண்ணை காட்டி சிகிச்சை பெறலாம் என தேசிய சுகாதார திட்டத்தின் தலைமை செயல் அலுவலர் இந்து பூஷன் தெரிவித்துள்ளார்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை சுமார் 47 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் மூலம் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Aadhaarmandatory #AyushmanBharat
    ×