search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைவேற்ற வேண்டும்"

    • பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மண்டல டவுன் பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்க செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    டவுன் பஞ்சாயத்துகளில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை விதிகள், குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகளை அவுட் சோர்சிங் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க வழி வகுக்கும் வழிமுறைகளை கைவிட வேண்டும்.

    கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதிய சட்டப்படியான சம்பளத்தை வழங்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் இம்மாதம் 31-ந் தேதி வரை டவுன் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 515 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.

    பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், பெத்தாம்பாளையம், காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட பல டவுன் பஞ்சாயத்துகளில் 501 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பிடித்தமான தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும்.

    டவுன் பஞ்சாயத்துகளில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டப்பணி, பராமரிப்பு போன்றவற்றை தனியாரிடம் வழங்கக்கூடாது.

    ஏற்கனவே பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
    • தமிழக கைத்தறி நெச–வாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்க–ளுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    சென்னிமலை: –

    கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான கே.எஸ்.பி. ராஜேந்திரன், தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக கைத்தறி நெசவாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் இன்றளவும் நடைமுறைப்படுத்த படவில்லை.

    நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நெசவாளர் பசுமை வீட்டு திட்டம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடுமையாக நூல்விலை உயர்வின் காரனமாக நெசவாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பைகூட வழங்க முடியாமல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிரம நிலையில் உள்ளன.

    பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ள ஜவுளிகளை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யவும், நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த மத்திய அரசினை வலியுறு–த்தவும் தமிழக கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×