என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி துறை"

    • கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது.

    கிராம ஊராட்சிச் செயலர் பணி என்பது, கிராம ஊராட்சி மன்றத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, கிராம ஊராட்சிக்கு வரும் அரசாணைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவது, கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியது.

    கிராம ஊராட்சி செயலர் பணிக்கு www.tnrd.tn.gov.in தளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தி, அம்மாத இறுதிக்குள் பணி ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

    வரும் நவம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

    வரும் நவம்பர் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3-ந்தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.

    இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16-ந்தேதிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து 17-ந்தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.

    அரசு வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

    • உள்ளாட்சி துறை ஓட்டுநர்கள் கூட்டம் நடந்தது.
    • மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஓட்டுநர்கள், துலக்குநர்கள் கூட்டமைப்பு சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மாநில கவுரவத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.

    மாநில தலைவர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தாமோதரன் ஆகியோர் பேசினார்.

    துணைத்தலைவர் தனசேகரன், கருணாநிதி, முருகன், இணை செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆண்டுக்கு 3 செட்டு சீருடை வழங்க வேண்டும், கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், 152 ஜி.ஓ.வை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் ஓட்டுநர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாகன ஆய்வாளர் பதவி வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

    • பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மண்டல டவுன் பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்க செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    டவுன் பஞ்சாயத்துகளில் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை விதிகள், குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகளை அவுட் சோர்சிங் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க வழி வகுக்கும் வழிமுறைகளை கைவிட வேண்டும்.

    கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதிய சட்டப்படியான சம்பளத்தை வழங்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் இம்மாதம் 31-ந் தேதி வரை டவுன் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 515 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.

    பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், பெத்தாம்பாளையம், காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட பல டவுன் பஞ்சாயத்துகளில் 501 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பிடித்தமான தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும்.

    டவுன் பஞ்சாயத்துகளில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டப்பணி, பராமரிப்பு போன்றவற்றை தனியாரிடம் வழங்கக்கூடாது.

    ஏற்கனவே பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×