என் மலர்
நீங்கள் தேடியது "கிராம ஊராட்சி செயலர்"
- கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது.
கிராம ஊராட்சிச் செயலர் பணி என்பது, கிராம ஊராட்சி மன்றத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, கிராம ஊராட்சிக்கு வரும் அரசாணைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவது, கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியது.
கிராம ஊராட்சி செயலர் பணிக்கு www.tnrd.tn.gov.in தளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தி, அம்மாத இறுதிக்குள் பணி ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
வரும் நவம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
வரும் நவம்பர் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3-ந்தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.
இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16-ந்தேதிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து 17-ந்தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்தில் 26 கிராம ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கலெக்டர் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் சுமார் 26 கிராம ஊராட்சி செயலர் களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டு உள்ளார். அதன் ஒரு பகுதி யாக திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களி லுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்க ளையும் பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் வாய்ப்பை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடு வதாக பல்வேறு ஊராட்சி செயலர்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழல் தடுப்பு துறையிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
அந்த மனுக்களை கலெக்டரின் பரிசீலனைக்கு ஊழல் தடுப்பு துறை அறிக்கை அனுப்பியது. அதனை பரிசீலித்த கலெக் டர் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சுழி ஒன்றியத்தில் பள்ளிமடம் ஊராட்சி செயலர் சிக்கந்தர் கனி, நல்லாங்குளம் ஊராட்சிக் கும், நல்லாங்குளம் ஊராட்சி செயலர் முருகன் பள்ளி மடம் ஊராட்சிக்கும், பணியிட மாற்றம் செய்யட்டு உள்ளனர்.
மேலும் நரிக்குடி ஒன்றி யத்திலுள்ள இருஞ்சிறை ஊராட்சி செயலர் தங்கப் பாண்டியன் வேளாநேரிக் கும், சுப்பையா இருஞ் சிறைக்கும், ராமகிருஷ்ணன் எழுவணிக்கும், ஆதிமூலம் வி.கரிசல்குளத்திற்கும், செல்வபிரபு பிள்ளையார் குளம் ஊராட்சிக்கும், சாரதி திம்மாபுரம் ஊராட்சிக்கும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.






