search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Post Transfer"

    • விருதுநகர் மாவட்டத்தில் 26 கிராம ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கலெக்டர் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் சுமார் 26 கிராம ஊராட்சி செயலர் களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டு உள்ளார். அதன் ஒரு பகுதி யாக திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களி லுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்க ளையும் பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் வாய்ப்பை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடு வதாக பல்வேறு ஊராட்சி செயலர்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழல் தடுப்பு துறையிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    அந்த மனுக்களை கலெக்டரின் பரிசீலனைக்கு ஊழல் தடுப்பு துறை அறிக்கை அனுப்பியது. அதனை பரிசீலித்த கலெக் டர் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

    திருச்சுழி ஒன்றியத்தில் பள்ளிமடம் ஊராட்சி செயலர் சிக்கந்தர் கனி, நல்லாங்குளம் ஊராட்சிக் கும், நல்லாங்குளம் ஊராட்சி செயலர் முருகன் பள்ளி மடம் ஊராட்சிக்கும், பணியிட மாற்றம் செய்யட்டு உள்ளனர்.

    மேலும் நரிக்குடி ஒன்றி யத்திலுள்ள இருஞ்சிறை ஊராட்சி செயலர் தங்கப் பாண்டியன் வேளாநேரிக் கும், சுப்பையா இருஞ் சிறைக்கும், ராமகிருஷ்ணன் எழுவணிக்கும், ஆதிமூலம் வி.கரிசல்குளத்திற்கும், செல்வபிரபு பிள்ளையார் குளம் ஊராட்சிக்கும், சாரதி திம்மாபுரம் ஊராட்சிக்கும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.

    ×