search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gunfire"

    • மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    சிவாடட் யுரேஸ்:

    மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிறைச்சாலைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கைதிகள் மற்றும் போலீசார் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.

    இந்த சம்பவத்தில் 10 பாதுகாப்பு படை போலீசார் மற்றும் 4 கைதிகள் உயிர் இழந்தனர். 13 பேர் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. அவர்களை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

    துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி கைதிகள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 11 பேர் பலி யானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்ட எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். #Maoist

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    இதை தொடர்ந்து அம்மாநில போலீசார் மற்றும் வனத்துறையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கேரளா போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிகளில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

    இதையடுத்து தமிழக போலீசார் மற்றும் அதிரடி படையினர் தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

    மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுத போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில தெலுங்கு தேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டு கொன்றது சீனுபாபு என்கின்ற சுனில், அருணா என்ற வெங்கட்ரவி சைதன்யா, காமேஸ்வரி ஆகிய 3 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன்நவாஸ் அறிவுறுத்தலின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தலைமை காவலர் சார்லஸ் ஆகியோர் மேற்பார்வையில் அதிரடி படையினர் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையை ஒட்டிய கேரிங்டன், கிண்ணக்கொரை, தனயகண்டி, இரியசீகை, முள்ளி, பெரும்பள்ளம், மானார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடி படை போலீசாருக்கு நவீன துப்பாக்கிகளுடன் புல்லட் புரூப் எனப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. #Maoist

    இலங்கை ராணுவத்தினரின் தோட்டாவுக்கு தப்பியவர் தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான தகவல் வெளியாகி உள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா (58) என்பவரும் ஒருவர்.

    இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணி (48), மகன் ஜெகதீஸ் வரன் (27). ஆகியோருடன் தங்கியிருந்தார். கட்டுமான வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனி மனித உரிமைக்காக போராடுவதில் முன்னணியில் இருந்தார்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100-வது நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் சென்ற அவர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து சென்ற அவர் ரத்த வெள்ளத்தில் மண்ணில் பிணமாக கிடந்தார்.

    இந்த வீடியோ அனைத்து டெலிவி‌ஷன்களிலும் ஒளி பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால் அவரது மனைவி செல்வமணிக்கோ தனது கணவர் துப்பாக்கி சூட்டில் பலியானது தெரிந்து விட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து அவர் கூறும் போது, “டி.வி.யில் பார்த்தவுடன் துப்பாக்கி சூட்டில் பலியானது எனது கணவர் என தெரிந்து விட்டது.


    இலங்கையில் ராணுவ தாக்குதலுக்கு பயந்து உயிர் பிழைக்க மற்ற தமிழர்களுடன் நாங்களும் கடந்த 1981-ம் ஆண்டு இந்தியா வந்தோம். தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி விட்டார்” என்றார்.

    துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிலோன் காலனியில் அவரது உருவப்படம் பொறித்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரனுக்கோ தனது தந்தை மரணம் அடைந்தது தெரியவில்லை. ஏனெனில் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவர். அவரால் பேச முடியாது. ஆனால் மற்றவர்களின் நடவடிக்கையை அவரால் புரிந்து கொள்ள முடியும். இவர் தனது தந்தை கந்தையா மீது அதிக பாசம் கொண்டவர். அவர் ஊட்டி விட்டால் தான் உணவு சாப்பிடுவார்.

    தற்போது அவர் உயிருடன் இல்லாததால் ஜெகதீஸ்வரன் கடந்த 5 நாட்களாக உணவு சாப்பிட மறுத்து பட்டினி கிடக்கிறார். இரவில் தனது தந்தையை கட்டிப்பிடித்து தான் தூங்குவார். தற்போது அவர் இல்லாததால் தூக்கமின்றி தவிக்கிறார். அவர் இறந்தது கூட தெரியாமல் பேனர் அருகேயே நிற்கிறார். இது அப்பகுதி மக்களின் நெஞ்சங்களை கணக்க செய்கிறது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு படிப்புக்கு தகுந்தபடி வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஆனால் கந்தையாவின் மகன் மனவளர்ச்சி குன்றியவர். படிப்பறிவு இல்லாதவர் அவரது மனைவி குடும்ப தலைவி, அவர் தனது மகன் ஜெகதீஸ்வரனை கவனிக்க வேண்டியுள்ளது. கந்தையாவின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்தை காப்பாற்ற பாதுகாவலர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #SterliteProtest #Thoothukudi
    ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பேரணி நடத்திய பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இது வரை 13 பேர் பலியாகி விட்டார்கள்.

    இதைகண்டித்து தமிழ்நாடு முழுவதும் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரையும் அரசையும் கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி பஸ் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும்,போலீசாரை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பேரணி நடத்திய பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதை அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #Rahulgandhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும், வேதனையும் வெளியிட்டுள்ளார்.


    ’ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற போலீசாரின் செயல் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு காட்டுமிராண்டித்தனமான உதாரணமாக அமைந்துள்ளது. இவர்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக இவர்கள் கொல்லப்பட்டனர். இறந்த தியாகிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடுபத்தாருடன் எனது நினைவுகளும், பிரார்த்தனைகளும் இணைந்திருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #policefiring #Rahulgandhi
    ×