search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maoist attack"

    நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க நக்சல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Maoist

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் 3 மாநில எல்லையில் அமைந்துள்ளது. 16 எல்லையோர சோதனை சாவடிகள் உள்ளன. நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம், வயநாடு, பாலக்காடு மற்றும் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ளன.

    நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறிப்பாக பழங்குடியின மக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என யாரேனும் மக்களை அணுகிடுவதை தவிர்க்கும் வகையிலும், எக்காரணத்தை கொண்டும் தேர்தலை புறக்கணிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் பழங்குடியினர் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    கேரளாவில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்க கோரி பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டினார்கள். நீலகிரி மாவட்டத்துக்குள் அவர்கள் நுழைந்து மக்களை அச்சுறுத்த கூடாது என்பதற்காத 200 அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவில் 50 பேரும், கமாண்டோ பயிற்சி முடித்த 44 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 240 கி.மீ., தூரம் மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சி.ஆர்.பி.எப்., ஒரு கம்பெனி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒரு கம்பெனியினர் வந்துள்ளனர்.

    இது தவிர உள்ளூர் போலீசார் 1400 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நீலகிரி தொகுதியை பொறுத்த வரை 78 பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளன. அங்கு சி.ஆர்.பி.எப்., படையினர் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #Maoist

    நீலகிரி மாவட்ட எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். #Maoist

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    இதை தொடர்ந்து அம்மாநில போலீசார் மற்றும் வனத்துறையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கேரளா போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிகளில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

    இதையடுத்து தமிழக போலீசார் மற்றும் அதிரடி படையினர் தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

    மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுத போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில தெலுங்கு தேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டு கொன்றது சீனுபாபு என்கின்ற சுனில், அருணா என்ற வெங்கட்ரவி சைதன்யா, காமேஸ்வரி ஆகிய 3 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன்நவாஸ் அறிவுறுத்தலின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தலைமை காவலர் சார்லஸ் ஆகியோர் மேற்பார்வையில் அதிரடி படையினர் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையை ஒட்டிய கேரிங்டன், கிண்ணக்கொரை, தனயகண்டி, இரியசீகை, முள்ளி, பெரும்பள்ளம், மானார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடி படை போலீசாருக்கு நவீன துப்பாக்கிகளுடன் புல்லட் புரூப் எனப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. #Maoist

    ×