search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goat theft"

    • ஆட்டோ பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி -சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கண்ணகிநகரை சேர்ந்தவர் ரகு (வயது 38). இவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டி ருந்த ஆடும், பக்கத்து வீட்டில் ராணி என்பவ ரின் வீட்டின் முன்பு கட்டப்பட் டிருந்த ஆடும் நேற்று பகலில் திடீரென மாயமானது.

    உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் ஆடுகளை தேடினர். அப்போது ஆடுகளுடன் ஆட்டோவில் 2 பேர் சென்றதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி சாலை, அம்பேத்கர் நகர் அருகே ஆட்டோவில் ஆடுகளுடன் சென்ற 2 பேரை பிடித்து ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் வேலூர் மாவட்டம், அல்லாபுரம் பகுதியை சேர்ந்த சபரி (35), இவரது மனைவி நிஷா (31) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது.

    இவர்கள் மீது வேலூர், சத்துவாச்சாரி உள் ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் ஆடு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் 2 ஆடுகளையும் பறிமுதல் செய்து அதன் உரிமையா ளர்களிடம் ஒப்படைத்தனர்.

    • ஆட்டோ பறிமுதல்
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த ஏறையூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). விவசாயி.

    இவருக்கு வீட்டின் அருகே ஒரு ஏக்கரில் சொந்தமாக நிலம் உள்ளது. அதில் இவர் கொட்டகை அமைத்து 30 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகள் சத்தம் கேட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 வாலிபர்கள் ஆட்டோவில் 3 ஆடுகளை ஏற்றி கொண்டிருந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் வாலிபர்கள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இது குறித்து செய்யாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர்.

    நேற்று செய்யாறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் செய்யாறு டவுன் வெங்கட் ராயன்பேட்டையை சேர்ந்தவர்கள் தமிழரசன் (28), மொய்தீன் (31) என்பதும், முனுசாமியின் ஆடுகளை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பிஸ்கட் கொடுத்து துணிகரம்
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த ஆடுகள் காலை நேரத்தில் மெய்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். அந்த ஆடுகள் சாலைகளில் உணவு தேடி மாலைநேரத்தில் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.அப்போது அவ்வழியாக காரில் குடும்பத்துடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பித்து ஆட்டுக்கு பிஸ்கெட் கொடுப்பது போல் நாடகமாடி ஒரு ஆட்டை காரில் தூக்கி போட்டனர். இதே போல் 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுககொண்டு சென்றனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக கார் நின்று ஆடுகளை திருடுவது கண்டு தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்த ளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலா னதால் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் காலை 9 மணிக்கு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை கடந்து வாணியம்பாடி நோக்கி வந்த காட்சிகள் நெக்குந்தி டோல் கேட் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே ஆடுகளை திருடி சென்ற கும்பல் வெளியூறை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    • வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த சாந்தகுமார் என்பவர் ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை.
    • அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாந்தகுமார் (வயது42). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை சாந்தகுமார் வழக்கம் போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டுள்ளார்.

    ஆடு திருட்டு

    வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த அவரது ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை. அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    உடனே சுதாரித்துக் கொண்ட சாந்தகுமார் ஆறுமுகநேரி சந்தைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு தனது ஆட்டை இரு நபர்கள் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய வேறு ஒருவரிடம் பேசி கொண்டிருப்பதை கண்டார்.

    2 பேர் கைது

    உடனடியாக இதுபற்றி அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆடு திருடிய அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் காயல்பட்டினம் ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக்ராஜா (33), முத்துசாமி (34) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆடு மீட்கப்பட்டது. ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • மூதாட்டியிடம் சென்று நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக வாலிபர்கள் தெரிவித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மெயின்ரோடு அருகே மூதாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற வாலிபர்கள், அந்த மூதாட்டியிடம் சென்று, 'நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

    அதற்கு அந்த மூதாட்டி ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த வாலிபர்கள் ஆட்டின் அருகில் நின்று செல்போனில் செல்பி எடுத்தனர்.

    திடீரென்று அந்த வாலிபர்கள் ஒரு ஆட்டை திருடி ஆட்டோவில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆட்டோவை சிறிது தூரம் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது27), ராகேஷ் பாபு (22). சந்தோஷ் (21), ஆனந்த் (22) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஆட்டோவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து விட்டு மது போதையில் சென்னை திரும்பி செல்லும்போது செல்பி எடுப்பதுபோல் நடித்து ஆட்டை திருடியுள்ளனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் சிறையில் அடைத்தனர்.

    அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்ட போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

    • கேமராவில் கண்காணித்தனர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி சின்ன குட்டூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 50), கடந்த 6-ம்தேதி காலை நிலத்தில் 3 ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மொபட்டில் அங்கு வந்தார். அவர் இரண்டு பெரிய ஆடுகளை கழுத்தில் இருந்த கயிறை அவிழ்த்து கால்களை கட்டி மொபட்டின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு சென்றுள் ளார்.

    இந்த நிலையில் பூங்கொடி. வந்தபோது குட்டி ஆடு மட்டுமே இருந்ததையும் 2 பெரிய ஆடுகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் மொபட்டில் 2 ஆடுகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்காணித்தபோது மொபட்டில் 2 ஆடுகளுடன் சென்றவர்தான் பூங்கொடி ஆடுகளை திருடியது தெரிய வந்தது. அவரது முகவரியை கண்டுபிடித்து சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரின் மகன் வினோத் குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் உள்ளவர்கள் ஏற்கனவே 20 ஆடுகளை பரா மரித்து வந்த நிலையில் மேலும் 2 ஆடுகளை வாங்குமாறு வினோத்குமாரிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை வினோத்குமார் பதுக்கி வைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு கட்டியிருந்த ஆட்டை திருடி சென் றதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். பின்னர் 2 ஆடுகளையும் மீட்டு ஆட்டின் உரிமையானரான பூங்கொடியிடம் ஒப்படைத்தனர்.

    • அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர்.
    • போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த கணியூரை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மொட்டையப்பன்(வயது 32) என்பவர் கடந்த 5ந்தேதி காலை 6 மணியளவில் உடுமலை ஆட்டு சந்தையில் ரூ. 15 ஆயிரத்துக்கு ஆடு ஒன்று வாங்கி அதை அருகில் உள்ள மரத்தடியில் கட்டி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கட்டி வைத்திருந்த ஆட்டை காண வில்லை. மர்ம நபர் ஆட்டை திருடி சென்று இருந்தனர். இதில் அதிர்ச்சியடைந்த மொட்டை யப்பன், இது குறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், உடுமலை காந்தி சவுக்கு பத்ரகாளியம்மன் லே-அவுட் டை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சேது மாதவன் (வயது 22 )என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ஆட்டையும் மீட்டனர்.

    • இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி.இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி ஆகியோர் ஆடு திருடர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்க.டலூர் வாரசந்தையில் வடலூர் போலீசார் ஆடுகள் விற்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்

    விசாரணையில் பேர்பெரியான் குப்பம் அசோக்குமார் (வயது 22), கருக்கை பிரதாப் (17), கீழ்காங்கேயன்குப்பம் ஹரிஷ் (17) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை வீட்டில் 2 ஆடுகளை திருடி சென்று வடலூர் சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் ஆகிவற்றை பறி முதல் செய்தனர்.

    • ஆடு திருடும் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் சிவசாமி புகார் செய்தார்.
    • கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் ஊர், ஊராக சென்று ஆட்டு கிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    தற்போது காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் தற்காலிகமாக ஆட்டு கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இவரது ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது.

    கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசாமி காரை விரட்டி சென்றுள்ளார். ஆனால் தடுக்க முடியாத நிலையில் அந்த பகுதிகளில் பள்ளி மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது காரின் எண் மற்றும் பதிவாகியிருந்தது.

    அதனை ஆதாரமாக கொண்டு குன்றக்குடி காவல் நிலையத்தில் சிவசாமி புகார் செய்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை.

    இதையடுத்து சிவசாமி மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் மனுவை அளித்தனர்.

    • ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம் : 

    திருப்பூர் மாவட்டத்தில் முக்கால்வாசி மக்கள் விவசாயிகள். இவர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பையே பெரிதும் சார்ந்துள்ளனர். காங்கேயகம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தற்போது மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டலாம் என விவசாயிகள் கணக்கு போட்டால், ஆடு திருடர்களின் கணக்கு வேறாக உள்ளது. விவசாயிகள் மானாவாரி நிலங்களில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நிலத்திலேயே மேய்ச்சலுக்கு பின் பட்டியில் அடைத்து வைக்கின்றனர்‌.

    இவ்வாறு பட்டிகளில் அடைக்கப்படும் ஆடுகளை குறிவைத்து திருடர்கள் ஆடுகளை தொடர்ச்சியாக திருடி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில் காங்கயம் அருகே விவசாயி ஒருவரது பட்டியில் அடைத்து வைத்திருந்த 9 ஆடுகள் மற்றும் சேவல் ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா ஊதியூர் அருகே உள்ள நிழலி கிராமம், குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(வயது40). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆடுகள் மேய்ச்சல் முடிந்த பின்பு மாலை அனைத்து ஆடுகளையும் தோட்டத்திலுள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து இருந்த 30 ஆடுகளில் 9 ஆடுகள் மற்றும் ஒரு சேவல் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்து பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    பட்டியை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை அறுத்து விட்டு மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காங்கயம் தாலுகா பகுதியில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

    இதுவரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடு திருட்டு விவசாயிகள் மத்திய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் கடந்த சில நாட்களாக இந்த திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தொடர் முயற்சி செய்தும் அந்த திருட்டு போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் போலீசார் இந்த திருட்டு கும்பலை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர்.

    • 3 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நம்பியூர், பொலவபாளையம், மலையப்பாளையம், எம்மாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது.

    கடந்த 19-ந் தேதி நல்லகட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவரது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருடப்பட்டது சம்பந்தமாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் மனு கொடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வரபா ளையம் மற்றும் நம்பியூர் போலீசார் மலைய ப்பாளையம் இந்திரா நகர் காலனி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நம்பியூர் மற்றும் மலையப்பாளையம் பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதியை சேர்ந்த சேகர் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் நல்ல பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஆடுகளை திருடி திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் பகுதியில் கறிக்கடையில் வேலை செய்து வரும் சங்கர் (28) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து நேற்று நம்பியூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் 3 வாலிபர்களையும் கைது செய்து கோபி 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே அம்பலவாணன் பேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் தனது வீட்டின் எதிரில் 5 ஆடுகள் கட்டி வைத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென்று 2 ஆடுகளை திருடிகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் ஆடுகள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்து, கட்டியாங்குப்பம் என்ற பகுதியில் அவர்களை மறித்து பிடித்தனர்.

    பின்னர் 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் 2 நபர்களை விசாரணை செய்தனர்‌ அப்போது கடலூர் சேடப்பாளையம் சேர்ந்த அருண் (வயது 23), சின்ன காரைக்காடு சேர்ந்தவர் கபாலீஸ்வரர் (வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    ×