search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 youths"

    • 3 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நம்பியூர், பொலவபாளையம், மலையப்பாளையம், எம்மாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது.

    கடந்த 19-ந் தேதி நல்லகட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவரது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருடப்பட்டது சம்பந்தமாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் மனு கொடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வரபா ளையம் மற்றும் நம்பியூர் போலீசார் மலைய ப்பாளையம் இந்திரா நகர் காலனி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நம்பியூர் மற்றும் மலையப்பாளையம் பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதியை சேர்ந்த சேகர் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் நல்ல பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஆடுகளை திருடி திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் பகுதியில் கறிக்கடையில் வேலை செய்து வரும் சங்கர் (28) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து நேற்று நம்பியூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் 3 வாலிபர்களையும் கைது செய்து கோபி 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) , சாமுண்டி (27) மற்றும் கருணா என்கிற கருணாமூர்த்தி (24) ஆகிய 3 பேர் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தால் பிரபலமாகி விடலாம் என்று அரசுக்கு அவப்பெயரையும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள திட்டமிட்டதாக தெரியவந்தது

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் (46) நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் இருந்தனர்.

    அந்த மோட்டார் சைக்கிளை ஏட்டுஅற்புதராஜ் நிறுத்த முயன்றார். ஆனால் அற்புதராஜ் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அற்புதராஜின் 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில், கிருஷ்ணன் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (30) சுமை தொழிலாளி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (28), இவரது சகோதரர் முரளிதரன் (27) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த ஏட்டு அற்புதராஜ் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    ×