search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escaped on a motorcycle"

    • கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் (46) நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் இருந்தனர்.

    அந்த மோட்டார் சைக்கிளை ஏட்டுஅற்புதராஜ் நிறுத்த முயன்றார். ஆனால் அற்புதராஜ் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அற்புதராஜின் 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில், கிருஷ்ணன் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (30) சுமை தொழிலாளி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (28), இவரது சகோதரர் முரளிதரன் (27) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த ஏட்டு அற்புதராஜ் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    ×