search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு திருடும் கும்பல் மீது வழக்குப்பதிய மறுப்பு
    X

    ஆடு திருடும் கும்பல் மீது வழக்குப்பதிய மறுப்பு

    • ஆடு திருடும் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் சிவசாமி புகார் செய்தார்.
    • கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் ஊர், ஊராக சென்று ஆட்டு கிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    தற்போது காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் தற்காலிகமாக ஆட்டு கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இவரது ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது.

    கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசாமி காரை விரட்டி சென்றுள்ளார். ஆனால் தடுக்க முடியாத நிலையில் அந்த பகுதிகளில் பள்ளி மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது காரின் எண் மற்றும் பதிவாகியிருந்தது.

    அதனை ஆதாரமாக கொண்டு குன்றக்குடி காவல் நிலையத்தில் சிவசாமி புகார் செய்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை.

    இதையடுத்து சிவசாமி மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் மனுவை அளித்தனர்.

    Next Story
    ×