search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் திருட்டு"

    • பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.
    • ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார்.

    வேலூர்:

    தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). ஆடு வியாபாரி.

    இவர் சொந்தமாக ஆடு வைத்துள்ளவர்களிடம் இருந்து ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். பெருமாள் ஆடுகளை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து ஆடு தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என செல்போன் எண்ணை பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனக்கு ஆடுகள் தேவைப்படுகிறது, ஆடுகளை வேலூருக்கு கொண்டு வந்தால் நேரில் பணம் தருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பெருமாள் தன்னிடம் இருந்த 36 ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூருக்கு வந்தார்.

    பாகாயம் அடுத்த ஏ. கட்டுப்படி அருகே லாரி மற்றும் கூலியாட்களுடன் தயாராக இருந்த மர்ம நபர் பெருமாள் கொண்டு வந்த ஆடுகளை அவரது லாரியில் ஏற்றினார்.

    பின்னர் ஆம்பூரில் பணம் தருவதாக கூறி பெருமாளை அழைத்துச் சென்றார். ஆம்பூர் சென்றதும் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு லாரியில் ஆடுகளுடன் வாலிபர் சென்றுவிட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குடியாத்தம் பகுதியில் ஆடுகளுடன் லாரி நின்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி வாடகை மற்றும் கூலி ஆட்களுக்கு பணம் தராததால் இந்தப் பகுதியில் காத்து இருக்கிறோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் லாரியுடன் ஆடுகளை மீட்டனர். பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    மேலும் ஆடுகளை நூதன முறையில் திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

    • காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளை விற்பனை செய்தும் வருகிறார். தனது வீட்டின் முன் பகுதியில் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்து விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை எழுந்து வந்து பார்த்த போது ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் ஆடுகள் குறித்து தகவல் இல்லை. ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் நம்பியூர் அருகே உள்ள சின்ன கோசணம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்து நம்பியூர் மற்றும் கோபி போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையல் கோபி பகுதியில் 3 வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கவின் (19), சிறுவலூர் ரஞ்சித்குமார் (21), கரட்டடிபாளையம் ஹரி பிரசாத் (20) என்பதும், அவர்கள் தனியார் கல்லூரியில் என்ஜனீயரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் 3 பேர் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அவர்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஆட்டோ பறிமுதல்
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த ஏறையூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). விவசாயி.

    இவருக்கு வீட்டின் அருகே ஒரு ஏக்கரில் சொந்தமாக நிலம் உள்ளது. அதில் இவர் கொட்டகை அமைத்து 30 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகள் சத்தம் கேட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 வாலிபர்கள் ஆட்டோவில் 3 ஆடுகளை ஏற்றி கொண்டிருந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் வாலிபர்கள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இது குறித்து செய்யாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர்.

    நேற்று செய்யாறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் செய்யாறு டவுன் வெங்கட் ராயன்பேட்டையை சேர்ந்தவர்கள் தமிழரசன் (28), மொய்தீன் (31) என்பதும், முனுசாமியின் ஆடுகளை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பிஸ்கட் கொடுத்து துணிகரம்
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த ஆடுகள் காலை நேரத்தில் மெய்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். அந்த ஆடுகள் சாலைகளில் உணவு தேடி மாலைநேரத்தில் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.அப்போது அவ்வழியாக காரில் குடும்பத்துடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பித்து ஆட்டுக்கு பிஸ்கெட் கொடுப்பது போல் நாடகமாடி ஒரு ஆட்டை காரில் தூக்கி போட்டனர். இதே போல் 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுககொண்டு சென்றனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக கார் நின்று ஆடுகளை திருடுவது கண்டு தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்த ளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலா னதால் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் காலை 9 மணிக்கு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை கடந்து வாணியம்பாடி நோக்கி வந்த காட்சிகள் நெக்குந்தி டோல் கேட் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே ஆடுகளை திருடி சென்ற கும்பல் வெளியூறை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    • கேமராவில் கண்காணித்தனர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி சின்ன குட்டூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 50), கடந்த 6-ம்தேதி காலை நிலத்தில் 3 ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மொபட்டில் அங்கு வந்தார். அவர் இரண்டு பெரிய ஆடுகளை கழுத்தில் இருந்த கயிறை அவிழ்த்து கால்களை கட்டி மொபட்டின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு சென்றுள் ளார்.

    இந்த நிலையில் பூங்கொடி. வந்தபோது குட்டி ஆடு மட்டுமே இருந்ததையும் 2 பெரிய ஆடுகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் மொபட்டில் 2 ஆடுகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்காணித்தபோது மொபட்டில் 2 ஆடுகளுடன் சென்றவர்தான் பூங்கொடி ஆடுகளை திருடியது தெரிய வந்தது. அவரது முகவரியை கண்டுபிடித்து சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரின் மகன் வினோத் குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் உள்ளவர்கள் ஏற்கனவே 20 ஆடுகளை பரா மரித்து வந்த நிலையில் மேலும் 2 ஆடுகளை வாங்குமாறு வினோத்குமாரிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை வினோத்குமார் பதுக்கி வைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு கட்டியிருந்த ஆட்டை திருடி சென் றதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். பின்னர் 2 ஆடுகளையும் மீட்டு ஆட்டின் உரிமையானரான பூங்கொடியிடம் ஒப்படைத்தனர்.

    • ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம் : 

    திருப்பூர் மாவட்டத்தில் முக்கால்வாசி மக்கள் விவசாயிகள். இவர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பையே பெரிதும் சார்ந்துள்ளனர். காங்கேயகம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தற்போது மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் மானாவாரி நிலங்களில் ஆடுகள் வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டலாம் என விவசாயிகள் கணக்கு போட்டால், ஆடு திருடர்களின் கணக்கு வேறாக உள்ளது. விவசாயிகள் மானாவாரி நிலங்களில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நிலத்திலேயே மேய்ச்சலுக்கு பின் பட்டியில் அடைத்து வைக்கின்றனர்‌.

    இவ்வாறு பட்டிகளில் அடைக்கப்படும் ஆடுகளை குறிவைத்து திருடர்கள் ஆடுகளை தொடர்ச்சியாக திருடி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில் காங்கயம் அருகே விவசாயி ஒருவரது பட்டியில் அடைத்து வைத்திருந்த 9 ஆடுகள் மற்றும் சேவல் ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா ஊதியூர் அருகே உள்ள நிழலி கிராமம், குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(வயது40). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆடுகள் மேய்ச்சல் முடிந்த பின்பு மாலை அனைத்து ஆடுகளையும் தோட்டத்திலுள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து இருந்த 30 ஆடுகளில் 9 ஆடுகள் மற்றும் ஒரு சேவல் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்து பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    பட்டியை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை அறுத்து விட்டு மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காங்கயம் தாலுகா பகுதியில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

    இதுவரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடு திருட்டு விவசாயிகள் மத்திய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் கடந்த சில நாட்களாக இந்த திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தொடர் முயற்சி செய்தும் அந்த திருட்டு போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் போலீசார் இந்த திருட்டு கும்பலை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர்.

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே அம்பலவாணன் பேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் தனது வீட்டின் எதிரில் 5 ஆடுகள் கட்டி வைத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென்று 2 ஆடுகளை திருடிகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் ஆடுகள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்து, கட்டியாங்குப்பம் என்ற பகுதியில் அவர்களை மறித்து பிடித்தனர்.

    பின்னர் 2 நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் 2 நபர்களை விசாரணை செய்தனர்‌ அப்போது கடலூர் சேடப்பாளையம் சேர்ந்த அருண் (வயது 23), சின்ன காரைக்காடு சேர்ந்தவர் கபாலீஸ்வரர் (வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    • ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன.
    • அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்ன சேலம் அருகே உள்ள ஏராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . விவசாயி. இவர் ஆடுகளை மேய்த்து கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பி கொளஞ்சியப்பன் வீட்டு அருகே தனக்கு சொந்தமான 18 ஆடுகளை கட்டிவிட்டு ஆடு வெளியே செல்லாமல் இருக்க வலைகளை கட்டி நிறுத்தி விட்டு அருகில் உள்ளஅவருடைய வீட்டிற்கு வழக்கம்போல் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆடுகள் சத்தம் போட்டு உள்ளன.

    சத்தத்தை கேட்டு வந்து பார்த்தபோது கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கார் அருகே சென்ற போது கார் வேகமாக சென்றுவிட்டது. பிறகு ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன. மீதமுள்ள மூன்று ஆடுகள் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்தபுகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து ஆடு திருடி சென்றவர்களை சின்ன சேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 10 ஆடுகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் வீட்டின் பின்புறத்தில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 10 ஆடுகளை மர்ம கும்பல் திருடி சென்றது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆட்டின் உரிமையாளர் ஆறுமுகம், செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×