search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Convention"

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்தார்
    • அரங்கு மாநாட்டில் புதுவை சுற்றுலா துறை சார்பில் புதுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது

    புதுச்சேரி:

    உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தை படுத்துதல் மாநாடு சிங்கப்பூர் நாட்டில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடை பெறுகிறது.

    புதுவை அரங்கு மாநாட்டில் புதுவை சுற்றுலா துறை சார்பில் புதுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.இதனை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார்.

    இதில் புதுவை சுற்றுலா துறையை சேர்ந்த சுப்ர மணியன், புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த ஆஷா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

    சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் டாக்டர் ஷில்பக் அம்புலே புதுவை அரங்கினை பார்வையிட்டு பாராட்டினார்.


    • அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோடு கருப்புசாமி கோவில் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.

    இதற்காக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-

    தாய் தமிழ்நாட்டை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தி, கழகத்தின் எளிய தொண்ட னும் மக்கள் சேவையாலும், உழைப்பாலும் உயர்ந்த இடத்திற்கு வரலாம் என்ற வரலாற்றை கழகத்தில் உருவாக்கித்தந்து, ஜனநா யகத்தை கட்டி காத்து, எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்ற அம்மாவின் கனவை நனவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி.

    இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டு காலம் அன்னை தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று அம்மா வின் வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு க உறுப்பி னர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியில் 2 கோடி தொண்டர்களை கழகத்தில் இணைத்திட இலக்காக வைத்து, இந்த 75 நாட்களில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து தாய் தமிழ்நாட்டில் புதிய வெற்றி சரித்திரம் படைத்து காட்டியுள்ளார்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டை புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நேசித்த தென்தமிழகத்தின் தலை நகரம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டத் தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்திய தேசமே திரும்பி பார்க்கும் வகையில், மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா போல நடைபெறும் இந்த மாநாட்டில், கழகத் தொண்டர்கள், பொது மக்கள் குடும்பம், குடும்ப மாக பங்கேற்று எடப்பாடி யார் தலைமை யில், அம்மாவின் புனித ஆட்சியை தாய் தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்திட உறுதி ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது.
    • இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மோடி ஆட்சியில் ரூ. 29 ஆயிரம் கோடி கொரோனா மருந்துகளை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா இன்று தலைமை ஏற்றுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலா வணியை ஈட்டுத்தந்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக இருந்த சாலைகள் இன்று தரமானதாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 29 லட்சம் கோடி ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாடு நடந்தது.
    • மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை திடல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பாராளுமன்ற தொகுதி மாநாடு நடந்தது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும்,தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், அழிந்துவரும் விவசாயத் தொழிலை மீட்டெடுக்கவும், பனைத்தொழிலை பாதுகாக்கவும், தொழில்வளத்தை அதிகப்படுத்தக் கோரியும் இந்த மாநாடு நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்ஜமீல் வரவேற்றார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

    • நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, மற்றும் பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் சார்பில் மிலாது நபி மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு பரமத்தி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தியில் அனைத்து மதத்தினர் பங்கேற்ற மிலாது நபி, மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.

    மத நல்லிணக்க மாநாடு

    நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, மற்றும் பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் சார்பில் மிலாது நபி மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு பரமத்தி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார்.

    பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் இமாம்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    கலந்து கொண்டவர்கள்

    மாநாட்டில், நாமக்கல்லை அடுத்துள்ள கொல்லிமலை ஜீவகாருண்ய விஷ்வ கேந்திரா ஓம் குருவன நிறுவனர் பிரம்மஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிகள், சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி பேராசிரியர் முகமது அபுதாஹிர், நாமக்கல் காவடிப்பட்டி கிருபாசனம் சர்ச் பாஸ்டர் வில்சன் டோமினிக், மற்றும் இந்து கிறிஸ்தவ, முஸ்லிம் குருமார்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்க சிறப்புரையாற்றினர்.

    தோழமையுடன்

    நாட்டில் பல்வேறு பிரித்தாலும் சூழ்ச்சியால் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் அனைத்து மதத்தினரும் தோழமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டு கேட்டுக்கொண்டனர். இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்த குருமார்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் பட்டாசு வணிகர்கள் மாநில மாநாடு நாளை மறுநாள் நடக்கிறது.
    • மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார்.

    சிவகாசி

    தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் உள்ள ஜா போஸ் திருமண மண்டபத்தில் நாளை மறுதினம் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார்.

    காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ஏ.பி.செல்வராஜன் முன்னிலை வகிக்கிறார், மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் விவேகானந்தன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கணேசன், அகில இந்திய பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜொன்னடா மாணிக்ராவ் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் தி இந்தியன் பட்டாசு உற்பத்தி அலுவலக சங்கத் தலைவர் ஸ்ரீராம் அசோக், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி, தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காத்தலிங்கம், சிவகாசி கம்பி மத்தாப்பு உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகசாமி, கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன், பொதுச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜன், நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

    • தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி - 1995 சேலம் மண்டல ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை மாநாடு நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மத்திய அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி - 1995 சேலம் மண்டல ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை மாநாடு நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாடு வரவேற்பு கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஐசிஎல் மாணிக்கம் வரவேற்றார். மாநில செயலாளர் பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் . அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் மோகனன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மத்திய அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கமுட்டேசன், ஆண்டு உயர்வு, சர்வீஸ் வெயிட்டேஜ் இஎஸ்ஐ போன்ற சட்ட சலுகைகளை அமுலாக்க வேண்டும். கேரளா போல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் சேலம் மண்டல கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது.
    • விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

    சிவகிரி:

    கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனக்கா–ரர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி செயலாளர் பொன்னையன் வழக்க–றிஞர் பிரிவு தலைவர் சுப்பு, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத்த–லைவர் ஆறுமுகம் எல்.5, பாசன சபை தலைவர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜனதா மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கும் சுமார் 1½ மணி நேரம் மைதானத்துக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #PMModi #AIIMSinMadurai

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில் ரூ.1300 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை விமான நிலையம் வருகிறார். பகல் 11.20 மணிக்கு மதுரை வரும் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    பின்னர் காரில் விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் பகுதியில் நடைபெறும் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். 12 மணி வரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

     


     

    பின்னர் 12.05 மணிக்கு பா.ஜனதா மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மத்தியில் தேர்தல் வியூகம் குறித்து மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி 12.55 மணி வரை நடக்கிறது. பின்னர் விமான நிலையம் வரும் மோடி சிறப்பு விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு செல்கிறார்.

    மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். 2 நிகழ்ச்சிக்கு அருகருகே மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் வந்து செல்லும் பாதை, பார்வையாளர்கள் அனுமதிக்கும் பகுதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    விழா மைதானம் விமான நிலையம் அருகே உள்ளது. எனவே மோடி பங்கேற்கும் சுமார் 1½ மணி நேரம் மைதானத்துக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளையும் போலீசார் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (சனிக்கிழமை) இரவு மதுரை வருகிறார்.

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார். அவரை வரவேற்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட கலெக்டர் நடராஜன், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

    எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். #PMModi #AIIMSinMadurai

    மயிலாடுதுறையில் வருகிற 23-ந் தேதி பேராசிரியர் ஜெயராமன் நடத்தும் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    மயிலாடுதுறை:

    காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டைமப்பு சார்பில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வருகிற 23-ந் தேதி ‘இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாடு’ நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

    இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமனின் மாநாட்டுக்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆணை பிறப்பித்துள்ளார். அதன் நகலை பேராசிரியர் ஜெயராமனின் இல்லத்தில் போலீசார் ஓட்டி உள்ளனர்.

    போலீசார் அனுப்பிய ஆணையில், மயிலாடு துறையில் 23-ந் தேதி நடை பெற உள்ள இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் மத்திய அரசின் திட்ட பணிகள், சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு சட்ட விரோத போராட்டங்களை நடத்தி பிரச்சினை ஏற்படுத்தி உள்ளீர்கள். இதனால் உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×