search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு வணிகர்கள் மாநில மாநாடு
    X

    பட்டாசு வணிகர்கள் மாநில மாநாடு

    • சிவகாசியில் பட்டாசு வணிகர்கள் மாநில மாநாடு நாளை மறுநாள் நடக்கிறது.
    • மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார்.

    சிவகாசி

    தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் உள்ள ஜா போஸ் திருமண மண்டபத்தில் நாளை மறுதினம் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார்.

    காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ஏ.பி.செல்வராஜன் முன்னிலை வகிக்கிறார், மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் விவேகானந்தன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கணேசன், அகில இந்திய பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜொன்னடா மாணிக்ராவ் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் தி இந்தியன் பட்டாசு உற்பத்தி அலுவலக சங்கத் தலைவர் ஸ்ரீராம் அசோக், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி, தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காத்தலிங்கம், சிவகாசி கம்பி மத்தாப்பு உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகசாமி, கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன், பொதுச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜன், நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×