search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Professor Jayaraman"

    கதிராமங்கலம் வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். #ProfessorJayaraman #ONGC
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்திருந்த குழாய் பழுதடைந்தது.

    இந்த பழுதை நீக்க அந்த நிறுவனத்தினர் தனது ஊழியர்களுடன் சென்றனர். அங்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஜெயராமன், வக்கீல் கரிகாலன், ராஜி, தர்மராஜ், விஜயராகவன், சீனிவாசன், சேதுராஜா, கொளஞ்சிநாதன், கருணாநிதி, பிரபு ஆகிய 10 பேர் மீது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி புகார் அளித்தனர்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி சண்முகப்பிரியா குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.  #ProfessorJayaraman #ONGC


    காவிரி படுகை பகுதியில் இருந்து எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். #professorjayaraman #ongc
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்கள் எதுவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இல்லை என்று மேலாளர் மிஸ்ரா  தெரிவிப்பது உண்மைக்கு புறம்பான செயல். அதுபோன்றே எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளதும் தவறானது.

    தமிழ்நாட்டில் 9 பிளாக்குகளில் ஷேல் கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி பெற்றது. முதற்கட்ட கிணறுகள் அமைப்பு அனுமதியை 2015 -ம் ஆண்டிலேயே  மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உள்ளிட்ட அனைத்து வகை எண்ணை எரிவாயுவை எடுக்கும் திட்டம் ஆகும் . அபாயகர நீரியல் விரிசல் முறையை பயன் படுத்தித்தான் ஹைட்ரோ கார்பன்களை எடுக்க முடியும்.

    முதல் சுற்று ஏலத்தில் காவிரிப் படுகையில் 5094 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய பெரிய நிலப்பரப்பை மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஓ.என்.ஜி.சி. மற்றும்  வேதாந்தா நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.  நிலப்பரப்பில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.யும் மீதியுள்ள ஆழமற்ற கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனமும் உரிமம் பெற்றுள்ளன. இந்த உண்மையை ஓ.என்.ஜி.சி. மறைக்கின்றது. 

    காவிரிப்படுகையில் பெரும் நிலப்பரப்பில் ஷேல் கேஸ் எடுக்க முயற்சி செய்யும் ஓ.என்.ஜி.சி. யை எதிர்த்தும், உள்ளே நுழைய முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களை எதிர்த்தும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் மக்களிடம் கருத்துக் கேட்பே இல்லாமல் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

    தமிழக அரசு காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவித்து, எண்ணை எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தின் காவிரிப் படுகை முதல் ராமநாதபுரம் வரை நீரையும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் தமிழகத்தின் உணவு உறுதிப் பாட்டையும் காக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #professorjayaraman #ongc
    கதிராமங்கலம் போராட்ட வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் ஆஜரானார். #kathiramangalamprotest #professorjayaraman

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தது.

    இந்த குழாய்களால் விளைநிலங்கள் பாதிப்படைவதாக கூறி மயிலாடு துறையை சேர்ந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டடைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இதையடுத்து பேராசிரியர் ஜயராமன் உள்பட சிலர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தவிட்டார். மீதி 5 வழக்குகளை மார்ச் மாதம் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்க விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பது கண்டிக்கதக்கது.

    வரும் பிப்ரவரி மாதம் மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி மயிலாடுதுறையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #kathiramangalamprotest #professorjayaraman

    மயிலாடுதுறையில் வருகிற 23-ந் தேதி பேராசிரியர் ஜெயராமன் நடத்தும் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    மயிலாடுதுறை:

    காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டைமப்பு சார்பில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வருகிற 23-ந் தேதி ‘இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாடு’ நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

    இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமனின் மாநாட்டுக்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆணை பிறப்பித்துள்ளார். அதன் நகலை பேராசிரியர் ஜெயராமனின் இல்லத்தில் போலீசார் ஓட்டி உள்ளனர்.

    போலீசார் அனுப்பிய ஆணையில், மயிலாடு துறையில் 23-ந் தேதி நடை பெற உள்ள இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் மத்திய அரசின் திட்ட பணிகள், சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு சட்ட விரோத போராட்டங்களை நடத்தி பிரச்சினை ஏற்படுத்தி உள்ளீர்கள். இதனால் உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்தார். #NEET
    திருவாரூர்:

    மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் உயிர் பலி நடந்து வருகிறது. தமிழகத்தில் அனிதா, பிரதீபா, இதே போன்று டெல்லி, ஹைதராபாத்திலும் மாணவர்கள் பலியாகி வருகின்றனர். நீட்டால் ஆண்டுதோறும் மாணவர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்.

    மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்விகள் கேட்பதின் மூலம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மட்டும் நீட் தேர்வில் வெற்றி பெறும் நிலையை உருவாக்குகிறது. இதனால் தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சேருவதற்கான நிர்பந்தத்தை உருவாக்கிறது.

    இதன் மூலமாக தமிழ் மொழி மற்றும் தமிழக கல்வி திட்டத்தை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே சி.பி.எஸ்.இ பாடத்திற்கு செல்வதை தடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வு நடத்த கூடாது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையற்றது.

    இந்திய அரசியலமைப்பு 371-ன் படி ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுள்ளது. தற்போது 371-கே என்ற சிறப்பு பிரிவினை சேர்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்து விடும்.

    எனவே தமிழக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NEET
    ×