என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சிக்க வேண்டும்- பேராசிரியர் ஜெயராமன்
Byமாலை மலர்7 Jun 2018 4:29 AM GMT (Updated: 7 Jun 2018 4:29 AM GMT)
தமிழக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்தார். #NEET
திருவாரூர்:
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் உயிர் பலி நடந்து வருகிறது. தமிழகத்தில் அனிதா, பிரதீபா, இதே போன்று டெல்லி, ஹைதராபாத்திலும் மாணவர்கள் பலியாகி வருகின்றனர். நீட்டால் ஆண்டுதோறும் மாணவர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்.
மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்விகள் கேட்பதின் மூலம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மட்டும் நீட் தேர்வில் வெற்றி பெறும் நிலையை உருவாக்குகிறது. இதனால் தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சேருவதற்கான நிர்பந்தத்தை உருவாக்கிறது.
இதன் மூலமாக தமிழ் மொழி மற்றும் தமிழக கல்வி திட்டத்தை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே சி.பி.எஸ்.இ பாடத்திற்கு செல்வதை தடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வு நடத்த கூடாது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையற்றது.
இந்திய அரசியலமைப்பு 371-ன் படி ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுள்ளது. தற்போது 371-கே என்ற சிறப்பு பிரிவினை சேர்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்து விடும்.
எனவே தமிழக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #NEET
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் உயிர் பலி நடந்து வருகிறது. தமிழகத்தில் அனிதா, பிரதீபா, இதே போன்று டெல்லி, ஹைதராபாத்திலும் மாணவர்கள் பலியாகி வருகின்றனர். நீட்டால் ஆண்டுதோறும் மாணவர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்.
மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்விகள் கேட்பதின் மூலம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மட்டும் நீட் தேர்வில் வெற்றி பெறும் நிலையை உருவாக்குகிறது. இதனால் தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சேருவதற்கான நிர்பந்தத்தை உருவாக்கிறது.
இதன் மூலமாக தமிழ் மொழி மற்றும் தமிழக கல்வி திட்டத்தை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே சி.பி.எஸ்.இ பாடத்திற்கு செல்வதை தடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வு நடத்த கூடாது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையற்றது.
இந்திய அரசியலமைப்பு 371-ன் படி ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுள்ளது. தற்போது 371-கே என்ற சிறப்பு பிரிவினை சேர்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்து விடும்.
எனவே தமிழக அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #NEET
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X