search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kathiamangalam protest"

    கதிராமங்கலம் போராட்ட வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் ஆஜரானார். #kathiramangalamprotest #professorjayaraman

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்தது.

    இந்த குழாய்களால் விளைநிலங்கள் பாதிப்படைவதாக கூறி மயிலாடு துறையை சேர்ந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டடைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

    இதையடுத்து பேராசிரியர் ஜயராமன் உள்பட சிலர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் நேரில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தவிட்டார். மீதி 5 வழக்குகளை மார்ச் மாதம் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காவிரி படுகையில் மீத்தேன் எடுக்க விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பது கண்டிக்கதக்கது.

    வரும் பிப்ரவரி மாதம் மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி மயிலாடுதுறையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #kathiramangalamprotest #professorjayaraman

    ×