search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bose Venkat"

    • கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.
    • இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

    தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

     

    இப்படத்தை சிராஜ் எஸ் தயாரித்துள்ளார். சித்து குமார் இசையமைக்கிறார். இயக்குனர் வெற்றி மாறன் நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் கம்பனி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றூம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெட்டி ஒலி சீரியலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் போஸ் வெங்கட்
    • தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    மெட்டி ஒலி சீரியலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் போஸ் வெங்கட். பின் பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'ஈர நிலம்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் பெரும் அங்கிகாரம் கிடைத்தது போஸ் வெங்கட்டிற்கு.

    பின் தீபாவளி, தாம் தூம், வேதா, தலை நகரம், சரோஜா, கோ, சிங்கம் போன்ற பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

    தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

    இப்படத்தை சிராஜ் எஸ் தயாரித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் கம்பனி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இதனை போஸ் வெங்கட் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இருவரின் இறுதி ஊர்வலமும் நாளை அறந்தாங்கியில் நடைபெறுகிறது.

    'ஈரநிலம்' படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். சின்னத்திரையில் பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார்.

    இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி மாடம்' படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சாதி மற்றும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து போஸ் வெங்கட் மா.பொ.சி என்ற படத்தை இயக்கினார்.

    இந்நிலையில், நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்துள்ளார்.

    இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரணடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதனும் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    இருவரின் இறுதி ஊர்வலமும் இன்று அறந்தாங்கியில் நடைபெறுகிறது. 

    • நடிகர் போஸ் வெங்கட், கன்னி மாடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
    • இவர் இயக்கும் அடுத்த படம் குறித்தும் அந்த படத்தின் தலைப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

    'ஈரநிலம்' படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி மாடம்' படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சாதி மற்றும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது மா.பொ.சி. என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் நடிக்கிறார். இதில் கன்னிமாடம் படத்தில் கதாநாயகி சாயா தேவி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் சரவணன் மற்றும் நடிகை ரமா நடிக்கவுள்ளனர். தயாரிப்பாளர் சிராஜ் இப்படத்தை தயாரிக்க இனியன் ஒளிப்பதிவையும் இசையை சித்து குமாரும் கவனிக்கிறனர்.

     

    மா.பொ.சி. படக்குழு

    மா.பொ.சி. படக்குழு

    இப்படம் பற்றி இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, மா.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. மா என்ற எழுத்தில் துணைக்கால் சேர்த்து தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

    மா.பொ.சி. படக்குழு

    மா.பொ.சி. படக்குழு

     

    மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்று வைத்திருந்தோம், அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி மா.பொ.சி. என்று வைத்தோம். ஒருவேளை ம.பொ.சி அவர்களை நினைவுபடுத்தினால் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும். நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். இப்படம் ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக்கூடிய படமாகத்தான் இருக்கும் என்றார்.

    நடிகர் போஸ் வெங்கட் கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர், போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கன்னிமாடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்தது. இதுபற்றி அவர் கூறியதாவது:-

    “தயாரிப்பாளர் ஹஷீரின் முழு ஆதரவு இல்லாவிட்டால், 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இருக்க முடியாது. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ‘கன்னிமாடம்’ படம் மெட்ராஸ் என்றால் என்ன? என்பதை வரையறுக்கும். சாதிக்க நினைக்கும் கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களை பற்றிய கதை, இது.



    மேட்டுக்குப்பம், விஜயராகவபுரம், சூளைமேடு ஆகிய இடங்களில் அவர்கள் தங்குவது, பொதுவான விஷயம். இதற்காக சென்னையில் அந்த 3 இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தினோம். ஸ்ரீராம், காயத்ரி ஆகிய இருவரும் கதைநாயகன்-நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.

    நெல்லையில் உள்ள தியேட்டரில் நடந்த தேவராட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் எனது தந்தை மிகப்பெரிய நடிகர், அவரைப்போல் நடிக்க முடியாது என்றார். #Devarattam #GauthamKarthik
    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள ‘தேவராட்டம்‘  திரைப்படம் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

    இந்த படத்தின் டிரைலர் பல்வேறு தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில்நேற்று மாலை காட்சியின் போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

    அதனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு திரையரங்கம் சார்பில், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து தேவராட்டம் படத்தின் டிரைலரை கண்டு ரசித்தனர்.

    பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘தேவராட்டம்‘ படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் ஒரு குடும்பத்தினர் போல பழகினர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.



    செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன்.

    எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இயக்குனர் முத்தையா கூறும்போது, “தேவராட்டம் எனது 5-வது படம். தமிழ் பண்பாடு, கலாசாரம், உறவு, மண்வாசனை ஆகியவற்றை மையமாக வைத்துதான் படம் எடுக்கிறேன். தமிழ் உறவுகள் நிலைத்து நிற்கவேண்டும். நமது உறவை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளை மையமாக வைத்துதான் படங்கள் எடுத்து வருகிறேன்.

    எனது படத்தின் பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கதையை மையமாக வைத்துதான் படத்தின் பெயரை சூட்டுகிறேன். என்றார். #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 
    `தேவராட்டம்'.

    கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,

    என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள். 

    ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.

    படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    போஸ் வெங்கட் இயக்கி வரும் புதிய படத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் புதிய அவதாரம் ஒன்று எடுத்துள்ளார். #BoseVenkat #RoboShankar
    நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியிருக்கிறார்.

    இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் கூறும்போது, "நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை துவங்கினேன், அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன். பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். சாதாரண ஒரு தொழிலாளி பாடுவதை போல பாடல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பாடலை பாட நல்ல பிரபலமான ஒரு குரலை தேடினோம். ரோபோ ஷங்கர் குரல் அதற்கு பொருத்தமாக இருந்தது. பாடலின் இறுதி வடிவம் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில யோசனைகள் மற்றும் அனுமானங்கள் இருந்தபோதிலும், இசையமைப்பாளர் ஹரி சாய், அவர் பங்குக்கு சில துள்ளலான விஷயங்களை சேர்த்துக் கொண்டார்.



    ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுக நடிகை காயத்ரி (யார் கண்ணன் மகள்), வலீனா ப்ரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிசால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய, இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹரி சாய் இசையமைக்கிறார். சிவ சங்கர் (கலை), விவேகா (பாடல்கள்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), ஜோசப் ஜாக்சன் (டிசைன்ஸ்), ஆர்.பாலகுமார் (ப்ரொடக்‌ஷன் கண்ட்ரோலர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கிறார்’ என்றார்.
    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நடிகர், நடிகைகள் தங்களது வாங்குகளை பதிவு செய்து வருகிறார்கள். #ChinnathiraiNadigarSangam
    சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது வழக்கம்.

    சங்கத்தின் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மஹாலில் இன்று தேர்தல் தொடங்கியது.

    காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. மொத்தம் உள்ள 1551 ஓட்டுகளில் 12 மணி நிலவரப்படி 425 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    இந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா, சிவன் சீனிவாசன், ரவிவர்மா, போஸ் வெங்கட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



    நிரோஷா அணியில், பரத் செயலாளர் பதவிக்கும், எஸ்.ஸ்ரீதர் பொருளாளர் பதவிக்கும், வி.டி.தினகரன், கன்யா பாரதி ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கும் விஜய் ஆனந்த், ரவீந்திரன், மோனிகா, முனிஷ் ராஜா ஆகியோர் இணை செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

    சிவன் ஸ்ரீநிவாசன் அணியில் செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண், துணைத்தலைவராக ராஜசேகர், மனோபாலா, பொருளாளராக ஸ்ரீவித்யா, இணைசெயலாளராக தளபதி தினேஷ், எம்.டி. மோகன். கற்பகவல்லி, சவால் ராம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    போஸ் வெங்கட் அணியில் செயலாளராக பி.கே. கமலேஷ், துணைத் தலைவர் பதவிக்கு சோனியா, எல்.ராஜா, பொருளாளராக நவீந்தர், இணை செயலாளராக க.தேவானந்த், தாடி பாலாஜி, ஸ்ரத்திகா, கே.கமலஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 4 அணிகள் சார்பில் 56 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    லியாகத் அலிகான், தம்பிதுரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துகிறார்கள். #ChinnathiraiNadigarSangam

    ×