search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vela Ramamoorthy"

    • மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’
    • படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படம் பற்றி மைக்கேல் கே.ராஜா கூறியதாவது:-

    மந்திரி குமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடலில் இடம்பெற்ற போகும் இடம் வெகு தூரமில்லை என்ற பாடல் வரிகளை தலைப்பாக எடுத்தோம். படத்துக்கு இந்த தலைப்பு பொருத்தமாக அமைந்தது.

    விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விமல்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில் விமல் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மன அழுதத்தில் அரசியல் பிரமுகர் உடலை ஏற்றி சென்று கொண்டிருக்கும் விமல் ஆம்புலன்சை வழிமறித்து கருணாஸ் ஏறுகிறார். மன அழுத்தத்தில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்ட கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வருகிறார். இது ஒருபுறமிருக்க மரணமடைந்த அரசியல் புள்ளிக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் பிள்ளைகள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது.

    இதையொட்டி நடந்தது என்ன? என்பது தான் படத்தின் கதை. படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'குற்றப் பரம்பரை’, ‘குறுதி ஆட்டம்’ போன்ற பல நூல்களை எழுதி பிரபலமடைந்தவர் வேல. ராமமூர்த்தி.
    • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    'குற்றப் பரம்பரை', 'குருதி ஆட்டம்', 'பட்டத்து யானை' போன்ற பல நூல்களை எழுதி பிரபலமடைந்தவர் வேல. ராமமூர்த்தி. இவர் 'மதயானை கூட்டம்', 'கொம்பன்', 'அண்ணாத்த' போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளார்.


    வேல ராமமூர்த்தி

    அதாவது, என் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் கேட்டு ஏமாற்றுவதாகவும் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் வேல. ராமமூர்த்தி எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    நெல்லையில் உள்ள தியேட்டரில் நடந்த தேவராட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் எனது தந்தை மிகப்பெரிய நடிகர், அவரைப்போல் நடிக்க முடியாது என்றார். #Devarattam #GauthamKarthik
    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள ‘தேவராட்டம்‘  திரைப்படம் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

    இந்த படத்தின் டிரைலர் பல்வேறு தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில்நேற்று மாலை காட்சியின் போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

    அதனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு திரையரங்கம் சார்பில், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து தேவராட்டம் படத்தின் டிரைலரை கண்டு ரசித்தனர்.

    பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘தேவராட்டம்‘ படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் ஒரு குடும்பத்தினர் போல பழகினர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.



    செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன்.

    எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இயக்குனர் முத்தையா கூறும்போது, “தேவராட்டம் எனது 5-வது படம். தமிழ் பண்பாடு, கலாசாரம், உறவு, மண்வாசனை ஆகியவற்றை மையமாக வைத்துதான் படம் எடுக்கிறேன். தமிழ் உறவுகள் நிலைத்து நிற்கவேண்டும். நமது உறவை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளை மையமாக வைத்துதான் படங்கள் எடுத்து வருகிறேன்.

    எனது படத்தின் பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கதையை மையமாக வைத்துதான் படத்தின் பெயரை சூட்டுகிறேன். என்றார். #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 
    `தேவராட்டம்'.

    கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,

    என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள். 

    ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.

    படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    நந்தன் சுப்பராயன் இயக்கத்தில் கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள `மயூரன்' படத்தின் முன்னோட்டம். #Mayuran
    பி.எஃப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டூடியோ என்ற பட நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் `மயூரன்'. 

    மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். இதில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா, கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - பரமேஷ்வர், இசை - ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் - குகை மா.புகழேந்தி, படத்தொகுப்பு - அஸ்வின், கலை -  எம்.பிரகாஷ், 
    ஸ்டன்ட் - டான் அசோக், நடனம் - ஜாய்மதி, தயாரிப்பு - கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன்.



    படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,

    சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

    மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.

    சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்
    படம் தான் மயூரன். 

    படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார். #Mayuran

    சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - சுவேதா திரிபாதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் விமர்சனம். #MehandiCircus #MehandiCircusReview
    தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.

    இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் ரங்கராஜுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுவாதியை கரம்பிடிக்க ஆசைப்படுகிறார்.



    நாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு ஒரு போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.

    கடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா? அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே எளிமையான மீதி காதல் கதை.



    இரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். சுவாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து ஜாதி வெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

    கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது. இளையராஜின் புகழை சொல்லும்படியாக பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நினைவுகளை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.



    எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் `மெஹந்தி சர்க்கஸ்' இனிமை. #MehandiCircus #MehandiCircusReview #SaravanaRajendran #MadhampattyRangaraj #ShwetaTripathi

    சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதல் கலந்து மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாகி இருப்பதாக இயக்குநர் சரவண ராஜேந்திரன் கூறினார். #MehandiCircus
    ‘குக்கூ,’ ’ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்திற்கு கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். அவருடைய அண்ணன் சரவண ராஜேந்திரன் இந்த படத்தின் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இந்த நிலையில், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை பற்றி இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது, 



    “ ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஸ்வேதா திரிபாதி. இவர், மும்பை அழகி. மாரிமுத்து, விக்னேஷ்காந்த், வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார்.

    இது, சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதை. எளிமையான காதல் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “படம் நன்றாக இருக்கிறது” என்று பாராட்டினார். அதன் பிறகுதான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார். #MehandiCircus

    சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - சுவாதி திரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் முன்னோட்டம். #MehandiCircus
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `மெஹந்தி சர்கக்ஸ்'.

    மாதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திரிபாதி நாயகன், நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், கபிர் துஹான் சிங், ரவி மரியா, அங்குர் விகல், சன்னி சார்லஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - செல்வகுமார்.எஸ்.கே., படத்தொகுப்பு - பிலோமின் ராஜ், கலை - சதீஷ்குமார், பாடல்கள் - யுகபாரதி, ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன் - சுரேன், ஆடை வடிவமைப்பு - பிரவீன்ராஜா.டி, நடனம் - பாபி, சண்டை பயிற்சி - பில்லா ஜெகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஆறுமுகம், நிர்வாகத் தயாரிப்பு - முகேஷ் சர்மா, இணைத் தயாரிப்பு - வி.கே.ஈஸ்வரன் - வினீஷ் வேலாயுதன், தயாரிப்பு - கே.இ.ஞானவேல் ராஜா, கதை, வசனம் - ராஜூ முருகன், இயக்கம் - சலவண ராஜேந்திரன்.



    படம் பற்றி நாயகி சுவேதா திரிபாதி பேசும்போது,

    1990-களில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. கொடைக்கானலுக்கு சர்க்கஸ் குழுவினர் பயணிக்கும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானலைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே மெஹந்தி சர்க்கஸ்” என்று கூறினார். 

    படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #MehandiCircus #SaravanaRajendran #MadhampattyRangaraj #ShwetaTripathi

    மெஹந்தி சர்க்கஸ் டிரைலர்:

    இளையராஜா இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள் என்று படவிழாவில் ஷான் ரோல்டன் பேசினார். #MehandiCircus #Ilayaraja
    இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ், சுவாதி திரிபாதி, விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விழா நடைபெற்றது.

    இதில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது: ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு இன்ஸ்பிரே‌ஷன் இளையராஜா சார் தான். குறிப்பாக அவரது இசையில் 80-களில் வெளியான படங்களை தனியாகச் சொல்லலாம். பாடலின் வரிகள், இசைக்கோர்வைகள் அனைத்துமே ஒரு மேஜிக்கலாக இருக்கும். அதே போல் செய்து பார்த்தால் சரியாக வராது.



    அவருடைய இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். பழைய இசை, புதிய இசை என்று பலர் விவாதம் செய்வதாக கேள்விப்பட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை எப்போதுமே நல்லாயிருக்கிற இசை தான் நல்ல இசை. பழைய இசை என்று ஒன்று கிடையாது. இளையராஜா சாருடைய இசையை பழையது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. கிணற்றில் எப்போதுமே தண்ணீர் வந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இளையராஜாவின் இசையும். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து அவரது இசையைக் கேட்டால் அதிலிருந்து ஒரு இன்ஸ்பிரே‌ஷன் கிடைக்கும். அவரது இசையை மேலோட்டமாகப் பார்த்தால் சிம்பிளாகத் தெரியும். இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா.

    இவ்வாறு அவர் கூறினார். #MehandiCircus #Ilayaraja

    சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெஹந்தி சர்க்கஸ் படத்திற்காக சர்க்கஸ் பயிற்சி பெற்ற சுவேதா திரிபாதி, சர்க்கஸ் கலைஞர்கள் மனவலிமையால் வெற்றி பெறுகின்றனர் என்று கூறினார். #MehandiCircus #ShwetaTripathi
    பாலிவுட் நடிகையான சுவேதா திரிபாதி தனது முதல் தமிழ் படமான மெஹந்தி சர்க்கசுக்காக உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்று இருக்கிறார்.

    ராஜு முருகன் கதை, வசனத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில் காதல் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் ஒரு சர்க்கஸ் கலைஞராக சுவேதா திரிபாதி நடிக்கிறார். இதுகுறித்து சுவேதா திரிபாதி பேசும்போது, “இது என்னுடைய முதல் தமிழ் படம் என்பதால் நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.

    உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. சர்க்கஸ் கலை என்பது எளிதானது அல்ல என்பதை புத்தகங்கள் மூலமாகவும், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் மூலமாகவும் நான் முன்பே தெரிந்துகொண்டேன். இருந்தாலும், அவர்களுடன் நேரம் செலவிடும்போதுதான் அவர்களின் உழைப்பு பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் எப்படி வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.



    சர்வதேச சர்க்கஸ் கலைஞர்களிடம் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நம் நாட்டு கலைஞர்களுக்கு இல்லை. அவர்களது மன வலிமையாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர். படத்திற்காக ராஜா சர்க்கஸ் நிறுவனத்திடம் சின்னமனூரிலும், மதுரையிலும் பயிற்சி பெற்றேன். நடப்பது, தலைவணங்குவது போன்றவற்றை பயிற்சி செய்தேன். கத்தியை தூக்கி எறிவது எப்படி என்றும் கற்றுக் கொண்டேன்.

    1990-களில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. கொடைக்கானலுக்கு சர்க்கஸ் குழுவினர் பயணிக்கும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானலைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே மெஹந்தி சர்க்கஸ்” என்று தெரிவித்துள்ளார். #MehandiCircus #ShwetaTripathi #SaravanaRajendran #MadhampattyRangaraj

    அகரம் கமுரா இயக்கத்தில் ஆதவா பாண்டியன் - நேகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பிரான்மலை' படத்தின் விமர்சனம். #Piranmalai #PiranmalaiReview #AathavaPandian #Neha
    பிரான்மலையில் வசித்து வருகிறார் நாயகன் ஆதவா பாண்டியன். சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால், அப்பா வேல ராமமூர்த்தியின் வளர்ப்பில் வளர்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வரும் வேல ராமமூர்த்தி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

    ஆனால் ஆதவா பாண்டியன் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். பெற்றோரை இழந்து ஆசரமத்தில் வளர்ந்து வருகிறார் நாயகி நேகா. ஒருநாள் ரோட்டில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர் ஒருவரை குளிப்பாட்டி தயார் செய்து விடும் நேகா மீது ஆதவா பாண்டியனுக்கு காதல் வருகிறது. 

    இந்த நிலையில், ஊருக்குள் ஆதவா பாண்டியன் செய்யும் சேட்டைகள் அதிகமாவதால் அவரை வெளியூரில் சென்று வேலை பார்க்கும்படி அனுப்பி வைக்கிறார் வேல ராமமூர்த்தி. இதையடுத்து கோயமுத்தூர் செல்லும் ஆதவா, தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். மேலும் கோவையில் நாயகியை பார்த்துவிடுகிறார்.



    ஒரு கட்டத்தில் ஆதவா - நேகா இருவருக்கும் இடையே காதல் வளர்கிறது. விடுதியில் ஏற்படும் ஒரு பிரச்சனையால், பாதிரியார் ஒருவரின் ஆலோசனையில் பேரில் வீட்டிற்கு தெரியாமல் நேகாவை, ஆதவா திருமணம் செய்து கொள்கிறார். அதேநேரத்தில் வேல ராமமூர்த்தி வேறு உறவுக்கார பெண்ணை பார்த்து வைக்கிறார்.

    கடைசியில், தனது மகன், மருமகளை வேல ராம மூர்த்தி ஏற்றுக் கொண்டாரா? ஆதவா - நேகாவின் வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    முதல் படம் என்றாலும் ஆதவா பாண்டியனின் நடிப்பு குறைசொல்லும்படியாக இல்லை. கதைக்கு தேவையான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுத்திருக்கிறார். நேகா கிறிஸ்த்துவ சமயத்து பெண்ணாக கதையோடு ஒன்றி, சிறப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றத்தில் வந்தாலும், சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. எனினும் கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடி பெரிதாக எடுபடவில்லை.

    பாரதி பாஸ்கரின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. எஸ்.மூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `பிரான்மலை' செல்லலாம். #Piranmalai #PiranmalaiReview #AathavaPandian #Neha

    ×