என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Balakrishna"
- கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
- தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் சந்திரசேகரராவ் கட்சி காங்கிரஸ் பா.ஜ.க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் காசானி கூறியதாவது
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 87 இடங்களில் போட்டியிடும்.
விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பட்டியலில் 30 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.
2-வது வேட்பாளர் பட்டியல் உடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்கும்.
கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகருமான என்.டி. ராமராவின் மகன் நந்தமுரிபாலகிருஷ்ணா தலைமையில் போட்டியிடுவோம். அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் இடம்பெறும் என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
- 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி மீசையை முறுக்கி சந்திரபாபு நாயுடுவை சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாக பேசினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சட்டசபைக்கு வந்த அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே. நாங்கள் 151 பேர். எங்களை சட்டப் பேரவையில் மதிக்கவில்லை என்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் சட்டசபை, சபாநாயகர் மற்றும் சட்டங்களை மதிக்கிறோம்.
தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததற்கான உறுதியான ஆதாரங்களை சி.ஐ.டி. கண்டுபிடித்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை. பெண்களை இழிவாக பேசுவது அவரது வழக்கம்.
மைத்துனர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற சட்டமன்றத்தில் சத்தமாக கூச்சலிட்டபடி அழுகிறார். சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சித்தரிக்க பார்க்கின்றனர்.
சந்திரபாபு நாயுடு மீது சட்ட விரோத வழக்கு இருந்தால் விவாதம் நடத்த வேண்டும்.
சட்டசபையில் முறைபடி விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து சைக்கோக்கள் போல் கத்தி சபாநாயகர் மீது பாட்டில் வீசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்திரபாபு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் எம்.எல்.ஏ.வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர சட்டசபை இன்று கூடியபோது சட்டசபைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகில் சென்று பேப்பர்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சபாநாயகர் மீது வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார்.
ஆதாரம் இன்றி சந்திரபாபு நாயுடுவை கைது செய்து இருக்கிறீர்கள்.
முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபைக்கு வந்து இதற்கு பதில் அளிக்க வேண்டும் என பேசினார்.
இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எதிர் கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம் பாபு எழுந்து இதுபோன்ற செயல்களை சினிமா நடிப்பதில் வைத்துக்கொள்ளுங்கள்.
சட்டசபைக்குள் இது போன்று நடந்து கொள்ளக்கூடாது என தெரிவித்தார்.
இதற்கு நடிகர் பாலகிருஷ்ணா தில் இருந்தால் இந்த பக்கம் வா என ஆவேசமாக கத்தினார். அதற்கு அம்பதி ராம்பாபு உனக்கு தில் இருந்தால் இந்த பக்கம் வா என மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா.
- இந்துபுரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பாலகிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவது இல்லை என்று புகார் கிளம்பி உள்ளது.
இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். அதில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை என்றும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகார் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பி உள்ளது. யாரோ தூண்டுதலின் பேரில் பாலகிருஷ்ணா மீது புகார் அளித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.
துணை நடிகை சந்தியாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா தன் மீது எவ்வளவு காதலுடன் இருந்தார் என்பது பற்றிய தகவலை நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டுள்ளார்.
சந்தியாவும் நானும் உயிருக்கு உயிராக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டோம். அந்த காதல் கொலை செய்யும் நாள் வரை குறையவே இல்லை. என் மீதுகொண்ட அளவு கடந்த காதலால் என்னை எந்த சூழ்நிலையிலும் மறக்க கூடாது என்று உடலில் 3 இடங்களில் பச்சை குத்திக்கொண்டார்.
முக்கியமாக அவர் வலது நெஞ்சில் என் பெயரை குத்திக் கொண்ட போது வலியால் துடித்தார். அதை பார்த்து நானே அழுது விட்டேன். ஆனால் அவர் பிடிவாதமாக குத்திக் கொண்டார். எங்களுக்கு சிவனை மிகவும் பிடிக்கும். தினமும் வணங்குவோம். அதனால் சிவன் பார்வதியை வலது கையில் பச்சை குத்திக்கொண்டார். சிவன் பார்வதி போல நாங்கள் வாழ வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டோம்.
நான் அவளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டேன். சினிமா வாய்ப்பு இல்லாததால் பிரியாணி கடை வைத்தேன். அதன் பின்னர் தான் டைரக்டர் ஆனேன். என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த புதுமுகங்களுக்கு அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தேன். சமீபத்தில் தான் என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். இந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டது.
சந்தியாவின் உடலை துண்டித்தபோது பாலகிருஷ்ணன் முதலில் வலது கையை தான் துண்டித்துள்ளார். தன்னை காதலிப்பதற்காக பச்சை குத்திக்கொண்ட வலது கையை முதலில் துண்டிக்க காரணம் சந்தியா செய்த துரோகத்தால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்புதான் என்கிறார்கள்.
இதற்கிடையே சந்தியாவின் தலையையும் இடது கையோடு கூடிய உடல்பாகங்களை தேடும் பணியில் 20 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு பகலாய் தேடி வருகிறார்கள். பெருங்குடி குப்பை கிடங்கை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் குப்பை சேமிப்பு நிலையத்திலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.
பெருங்குடியில் 20 அடி உயர குப்பையில் 15 அடி வரை தோண்டி தேடிவிட்டார்கள். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் டைசன் நாய்க்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து இதற்காக பெங்களூருவில் இருந்து இன்னொரு மோப்ப நாய் வரவைக்கப்பட உள்ளது.
துணை நடிகை சந்தியாவின் தாயார் பிரசன்னகுமாரி மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் அருகே உள்ள ஞாலம் பகுதியில் வசித்து வருகிறார்கள். மகள் சாவு குறித்து பிரசன்னகுமாரி கூறியதாவது:-
கொடூரமான முறையில் எனது மகள் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கிட்னி, இதயம், கண் போன்ற முக்கிய பாகங்கள் கிடைக்கவில்லை. அவரது உடல் உறுப்புகள் திருடி விற்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இந்த கொலையில் பாலகிருஷ்ணனுக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். எனது மகள் சாவிற்கு நியாயம் கிடைக்கவேண்டும்.
இவ்வாறு பிரசன்னகுமாரி கண்ணீர் மல்க கூறினார். #Sandhya #Balakrishnan
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில் புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.
ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GreenWayRoad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்