search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் போலீசில் புகார்
    X

    பாலகிருஷ்ணா

    எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் போலீசில் புகார்

    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா.
    • இந்துபுரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பாலகிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவது இல்லை என்று புகார் கிளம்பி உள்ளது.

    பாலகிருஷ்ணா

    இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். அதில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை என்றும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகார் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பி உள்ளது. யாரோ தூண்டுதலின் பேரில் பாலகிருஷ்ணா மீது புகார் அளித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.

    Next Story
    ×