search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aravakurichi constituency"

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவின்படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் உள்ளார்.
    கரூர் :

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன் ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர்.

    மொத்தமுள்ள 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81 ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 115 பேர் வாக்களித்தனர். இது 84.33 சதவீதம் ஆகும்.

    வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.



    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதல் சுற்று வாக்கு விபரம் வருமாறு:-

    செந்தில்பாலாஜி (தி.மு.க.)-5,102

    செந்தில்நாதன் (அ.தி.மு.க.)-3,911

    சாகுல் அமீது (அ.ம.மு.க.)-347

    செல்வம் (நாம் தமிழர்)-91

    மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)-57

    முதல் சுற்று முடிவின் படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்தார்.
    அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் நாதன், தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன்ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63பேர் போட்டியிட்டனர்.

    மொத்தமுள்ள 2 லட்சத்து 5ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து73ஆயிரத்து 115 பேர் வாக்களித்துள்ளனர். இது 84.33 சதவீதம் ஆகும். 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

    அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


    இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தளவாப்பாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்காக ஒதுக்கப்பட்ட அறையை ஆய்வு செய்தார். அப்போது அந்த அறை மிகச்சிறியதாக இருந்தது. இதனால் கூடுதல் அறை ஒதுக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் புகார் மனு கொடுத்தார்.

    அதில், அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை மிகச்சிறியதாக உள்ளது. இதனால் அங்கு வேட்பாளர்களின் முகவர்கள், ஊழியர்கள் யாரும் நிற்க முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே பெரிய அறையோ அல்லது இடவசதிஉள்ள அறைகளையோ ஒதுக்கி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் தெரிவித்தார்.

    இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டது. மேலும் இடப்பற்றாக்குறை உள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. செந்தில்பாலாஜி புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் மேற்கொள்வார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நிர்ணயித்தபடி அரவக்குறிச்சி தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வாரா? என தொண்டர்களிடையே குழப்பம் நிலவியது. எனினும் தேர்தல் விதிகளை பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கிவிட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.



    மேலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் இர.ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் அகர வரிசைப்படி 5-வது இடத்தில் இருந்தது.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இடம் பெற்றிருந்தது.

    இதனை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4-ந்தேதி ரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி சரியான இடமான 5-வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலகமான, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேட்பாளர் ரமேசை தேர்தல் நடத்தும் அலுவலரான மீனாட்சியிடம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுயேச்சை வேட்பாளர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். #SenthilBalaji #DMK
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். அ.தி.மு.க., அ.ம.மு.க. சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இன்னும் 2, 3 நாட்களில் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இத்தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மீனாட்சியிடம் மனு தாக்கல் செய்தார்.


    அவருடன் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மற்றும் பலர் உடன் சென்றிருந்தனர். வருகிற 29-ந்தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 30-ந்தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அடுத்த மாதம் 2-ந்தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி காமராஜர் நகரில் உள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்து அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சின்னச்சாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  #SenthilBalaji #DMK
    அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடந்தது. 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

    இதேபோன்று மே 19ந்தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மீனாட்சி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஈஸ்வரன், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஜெயராஜ், மீனாகுமாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அரவக்குறிச்சி மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22ம்தேதி முதல் 29ம்தேதி வரை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    அரவக்குறிச்சி தொகுதி உண்ணாவிரத போராட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். #TTVDhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் அரசின் மக்கள் விரோத நிலையை சுட்டிக்காட்டும் வகையில், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் 3-வது நாளான நாளை (திங்கட் கிழமை) மாலை 4 மணிக்கு வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் நடை பெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran

    ×