search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 நாள் வேலை திட்டம்"

    • முதுகுளத்தூரில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    முதுகுளத்தூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முதுகுளத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழுத்தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.கணேசன், மாவட்டத் தலைவர் என்.கலையரசன், தாலுகா செயலாளர் பி.அங்குதான், தாலுகா பொருளாளர் வி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு செயலாளர் வி.முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வேலையின்றி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அடிப்படை வசதிக்கே கஷ்டப்படும் அவர்களுக்கு அரசு 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநில செயலாளர் சங்கர் தலைமையில் துணை வட்டாட்சியரிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    • வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள்.
    • வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சம்பளம் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஊராட்சி துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை பணியாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பளப்பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து 100 நாள் பணியாளர்கள் கூறும்போது, வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

    • திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை.
    • திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமை யிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விழுப்புரத்தில் கள ஆய்வு செய்கிறார். பெரும்பாலான அதிகாரிகள் அங்கு சென்று விட்டனர். அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் பேசி உங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் அசோகன் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தின் போது விபரீதம்
    • உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை

    அணைக்கட்டு:

    தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    அதேபோல் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடிசை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை செய்து வருகின்றனர்.

    இதில் வழக்கம் போல் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ராதிகா (வயது 29)என்பவர் வேலை செய்து கொண்டு இருந்தார். வேலை செய்யும் இடத்தில் யாரோ மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து அப்பகுதியில் வீசி சென்றுள்ளனர். இதனை கவனிக்காத ராதிகா அதை மிதித்துள்ளார்.

    இதனால் அவர் காலில் பாட்டிலின் கண்ணாடி ஆழமாக குத்தி நரம்பை அறுத்து உள்ளது.

    இதனால் வலியால் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த ராதிகாவை சக பணியாளர்கள் மீட்டு வேலூர் தனியார் மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    இதனை பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அனுமதித்துள்ளனர். இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும், அவரின் வாழ்வாதாரமே இழந்து தவிக்கும் வேளையில் அதிகாரிகள் இதனை அலட்சியம் காட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
    • கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட எலவமலை பஞ்சாயத்து சென்னா நாயக்கனார் பகுதியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களிடம் புகையிலை மற்றும் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தது.

    புகையிலை பயன்பா ட்டின் தீமைகள், புற்று நோய் பாதிப்பு, புகையிலை தடுப்பு சட்டங்கள், போதை பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள், கோடை வெப்ப தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்,

    மாரடைப்பு நோய் பிரச்சனை மற்றும் பாதுகாப்பு முறைகள், கோடை கால உணவு முறை, கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயன் பெற யோசனை தெரிவித்தனர். தற்போதைய நிலையில் கொரோனா, டெங்கு பரவலை தடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு நல ஆலோசகர் டாக்டர்.கலைச்செல்வி,

    சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் மூர்த்தி, குமார், ராஜா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • தேவக்கோட்டை தாலுகா கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த கருப்பையா வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
    • வேலை செய்ததாக பெய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடியில் செய்ததாக குற்றச்சாட்டு

    மதுரை:

    வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பெயர்களை சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் கருப்பையா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், தாயார், உடன்பிறந்தவர்கள் பெயர் மற்றும் வெளிநாட்டில் வாழும் நபர்கள், கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் நபர்களின் பெயர்களும் சேக்கப்பட்டுள்ளன. அவர்கள் வேலை செய்ததாக பெய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடியில் செய்துள்ளனர். ஊராட்சி தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 12 வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உத்தரவிட்டார். 

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணி செயல்பட்டு வருகிறது.

    இதில் மாற்று திறனாளிகளுக்கு 100 நாட்கள் முழுவதுமாக வேலை தர வேண்டும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக வருகை பதிவேடு வழங்க வேண்டும், மேலும் மத்தியஅரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் அரசு ஆணைப்படி 4 மணி நேரமே பணி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி இந்திராணியிடம், மனு அளித்தனர். இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலைதிட்ட பணி வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்ட பணியை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

    மேலும் தற்போது 100 நாள் பணி வழங்க கோரியும் நிரந்தரமான கூலி வழங்க கோரியும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஆரணி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை விளார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது.
    • இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஊராட்சி ஒன்றியம் விளார் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் மைதிலி ரெத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்தும், தூய்மை பணிகள் மேற்கொள்வது, சுத்தமான குடிநீர் வழங்குவது, 100 நாள் வேலை திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர் . அதனை சரி செய்வது தருவதாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • 100 நாள் வேலை திட்ட குறைகளை தெரிவிக்க குறைதீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • குறைதீர்ப்பாளரின் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ராமமூர்த்தி (89258 11321) என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய மின்னஞ்சல் முகவரி: ramllm47@yahoo.com பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டதால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது.

    இம்ரான்கான், பிரதமர் பதவியை இழந்தார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்தக்கோரி இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர்.

    இதையடுத்து இஸ்லாமாபாத்துக்கு பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் செல்ல தயாராகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரை நள்ளிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் பெண் எம்.பி.யான ரஷிதாகான் உள்பட மூத்த தலைவர்களும் அடங்குவர். இஸ்லாமா பாத்தில் நடக்கும் பேரணியில் பங்கேற்பதை தடுக்க பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இம்ரான்கான் கட்சி நிர்வாகி முஸ்சரட் சீமா கூறும்போது, லாகூரில் நிறைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பல்வேறு மாகாணங்களில் கட்சி தலைவர்கள் கைதில் இருந்து தப்பினர். பேரணியில் கலந்து கொள்வதை தடுக்க பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பாசிச தந்திரங்களை கையாள்கிறார் என்றார்.

    இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எனது அரசாங்கம் எப்போதும் எதிர்க்கட்சிகளின் பேரணிகளை நிறுத்தியது கிடையாது. இதுதான் ஜனநாயகவாதிகளுக்கும், நாட்டை திருடுபவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கி உள்ளதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர் சிவகங்கை எம்.எல்.ஏ.புகார் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதன்  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அது குறித்த நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். 

    அதன் ஒரு பகுதியாக சாத்தரசன்கோட்டை அருகே உள்ள குருந்தங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளில்  கிராம மக்களை  சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு ஆண்டாக சிவகங்கை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. என்பதாலேயே ஆளுங்கட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு நல திட்டங்கள் கூட வழங்கப்படவில்லை.  

    சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிவகங்கை தொகுதிக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை   வைத்த போது அந்த கல்லூரியை ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக்சிதம்பரம் கோரிக்கை வைத்ததால் காரைக்குடி தொகுதிக்கு அறிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
       
    மேலும் கடந்த ஓரு ஆண்டுகளில் முறையாக சாலை வசதிகளோ,   விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரமோ முறையாக வழங்கப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கியுள்ளதாக கூறி வேலை தராமல் திரும்பி அனுப்பி வருகின்றனர். 
     
    இது குறித்த கோரிக்கைகளே அதிகளவில் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர்.மேலும் சிவகங்கை தொகுதி இதுபோல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் தொகுதி மக்களை திரட்டி பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும்.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×