search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 arrest"

    பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டதால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது.

    இம்ரான்கான், பிரதமர் பதவியை இழந்தார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்தக்கோரி இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர்.

    இதையடுத்து இஸ்லாமாபாத்துக்கு பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் செல்ல தயாராகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரை நள்ளிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் பெண் எம்.பி.யான ரஷிதாகான் உள்பட மூத்த தலைவர்களும் அடங்குவர். இஸ்லாமா பாத்தில் நடக்கும் பேரணியில் பங்கேற்பதை தடுக்க பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இம்ரான்கான் கட்சி நிர்வாகி முஸ்சரட் சீமா கூறும்போது, லாகூரில் நிறைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பல்வேறு மாகாணங்களில் கட்சி தலைவர்கள் கைதில் இருந்து தப்பினர். பேரணியில் கலந்து கொள்வதை தடுக்க பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பாசிச தந்திரங்களை கையாள்கிறார் என்றார்.

    இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எனது அரசாங்கம் எப்போதும் எதிர்க்கட்சிகளின் பேரணிகளை நிறுத்தியது கிடையாது. இதுதான் ஜனநாயகவாதிகளுக்கும், நாட்டை திருடுபவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கயத்தாறு பஜாரில் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த சாலைபுதூர் பகுதியில் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

    கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த லாரி, வேன், கார்களுக்கு இந்த சுங்கச்சாவடியில் அனுமதி கட்டணம் இல்லாமல் செல்வதற்கு டிரைவர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதுதொடர்பாக கடந்த வாரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இன்று (24-ந்தேதி) கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று டிரைவர்கள் அனைத்து வாகனங்களையும் கயத்தாறு பஜாரில் நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த டிரைவர்கள், பொதுமக்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட முயன்றனர்.

    அவர்களிடம் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையொட்டி அவர்கள் கயத்தாறு பஜாரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதனையொட்டி அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, டி.எஸ்.பி.க்கள் உதயசூரியன், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சுங்கச்சாவடியில் உள்ள ஒவ்வொரு கவுண்டர்களுக்கும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    ×