search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    • முதுகுளத்தூரில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    முதுகுளத்தூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முதுகுளத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழுத்தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.கணேசன், மாவட்டத் தலைவர் என்.கலையரசன், தாலுகா செயலாளர் பி.அங்குதான், தாலுகா பொருளாளர் வி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு செயலாளர் வி.முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வேலையின்றி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அடிப்படை வசதிக்கே கஷ்டப்படும் அவர்களுக்கு அரசு 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் அரசு வேலை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநில செயலாளர் சங்கர் தலைமையில் துணை வட்டாட்சியரிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×