search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 நாள் வேலை திட்டம்"

    • 100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.
    • 100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (100 நாள் வேலை) திட்டத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த திட்ட பயனாளிகள் ஆதாரை இணைப்பதற்கு வழங்கப்பட்ட 5-வது காலக்கெடு நீட்டிப்பு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்து இருக்கிறது.

    அதன்படி இனிமேல் 100 நாள் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்பு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 14.33 கோடி பேர் செயல்முறை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர்.

    கடந்த டிசம்பர் 27-ந் தேதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில் 34.8 சதவீத (8.9 கோடி) தொழிலாளர்கள் மற்றும் 12.7 சதவீதம் (1.8 கோடி) செயல்முறை தொழிலாளர்கள் ஆதார் அடிப்படையிலான சம்பள திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

    இந்த திட்டத்தில் ஆதாரை அடிப்படையாக கொண்ட அமைப்பை பயன்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக தொழிலாளர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியபோதும், மோடி அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.

    உண்மையில், ஆதாரை அடிப்படையாக கொண்ட சம்பள அமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் பல துறை சார்ந்த வல்லுனர்களின் கவலைகளுக்கு மோடி அரசு செவிமடுக்கவில்லை.

    கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை அடிப்படை வருமானம் ஈட்டுவதில் இருந்து விலக்கி வைக்கும் பிரதமரின் கொடூரமான புத்தாண்டு பரிசு இது.

    100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.

    ஏழைகளின் நலனை பாழ்படுத்தும் வகையிலான இத்தகைய தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இந்தியர்களின் சமூக நலன்களை மறுக்க ஆதாரை ஆயுதமாக்குவதை நிறுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சமூக தணிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    சென்னை:

    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்த வேலை வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என்றும் அதன் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

    வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த ஆண்டில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதிகட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாச நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நாளாவது வேலை பார்த்து இருந்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள். தற்போது கொண்டு வரப் பட்ட இந்த திட்டத்தின்படி பதிவு செய்து இருந்த 25.25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

    மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் தகுதியான காரணங்களால் பதிவு செய்ய இயலாமல் போனவர்கள் மீண்டும் சேர்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

    கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. வேலைக்கான அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்துவிட்டால் அது வங்கி கணக்குடன் இணைந்து இருக்கும். அத்துடன் நிதி வழங்கும் துறையுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

    இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பள பட்டுவாடா செய்ய முடியும். வேலை செய்யாமலேயே ஆட்களின் பெயரை எழுதி பணத்தை சுரண்டுவதும் தடுக்கப்படும்.

    இன்று முதல் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் அடிப்படையிலேயே சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.

    • 100 நாள் வேலை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நடைபயண போராட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
    • சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு 14 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் ரூ.87 கோடி அளவிற்கு சம்பள பாக்கி உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் பிரதமர், நிதிய மைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளதால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகருக்கு வரும்போது மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி மாவட்ட காங்கிரஸ் சார்பில் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபயண போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் செங்க மல நாச்சியார்புரத்தில் தொடங்குகிறது. சுமார் 100 கிராமங்களுக்கு நடந்து சென்று 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம்
    • பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து நடுவீரப்பட்டு சி.என். பாளையம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து ஒன்றிய தலைவர் வைத்தி லிங்கம் தலைமையில் தீபாவளி பண்டிகையின் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்காததால் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட தோடு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.மேலும் சம்பளம் வழங்காததால் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட கலெக்டரிடம் உங்களது குறைகளை கூறியுள்ளோம்.

    மேலும் இன்னும் சில தினங்களில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய 3 மாத சம்பள பாக்கியினை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
    • அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் குமார் பேசுகையில்:-

    100 நாள் வேலையில் பல முறைகேடுகள் நடப்பதாக ஆவேசமாக கூறினார்.

    ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் இந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெயிலின் தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டுள்ளது
    • முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க பொதுமக்கள் வலியுறுதல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கடலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (48). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செல்வி 100 நாள் வேலைக்கு சென்றார்.

    வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி கிழே விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கி ருந்தவர்கள் உடனே செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மராட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், '100 நாள் வேலைக்கு செல்வோர் அவசரத்தில் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தால் செல்விக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒரு பிரச்னையும் இல்லை. சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலே போதும்' என்றனர். பணியின்போது பெண் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுவாக 100 நாள் வேலை என்பது பெரும்பாலும் ஏரி, குளம், குட்டை, ஆற்று கால்வாய் போன்ற நீர் நிலை பகுதிகளில் தான் வேலை நடக்கும். அப்போது, பணியாளர்கள் வேலை செய்து கொண் டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விஷப்பூச்சி கடிப்பது, உடைந்த கண்ணாடி பாட்டில் குத்தி கொள்வது போன்றவை நடக்கிறது.

    அவ்வாறு நடக்கும் போது ஆஸ்பத்திரி செல்ல அதிக நேரம் ஆவதால் 100 நாள் வேலை நடக்கும் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேற்கு வங்காளத்தில் இருந்து வேலை செய்தவர்களுக்கு சம்பளம் மறுப்பு
    • மத்திய மந்திரி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி கேட்டு கடிதம்

    100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஏற்கனவே பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களுக்கு சம்பளத் தொகை வழங்காமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. 6,366 கோடி ரூபாய் 18 மாநிலங்களுக்க வழங்காமல் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே கடந்த மாதம் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைப் பார்த்தவர்களுக்கு சம்பளம் மறுக்கப்படுவதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் வீட்டிற்கு வெளிப்புறம், ஜந்தர் மந்தர் மற்றும் கிரிஷி பவன் ஆகிய மூன்று இடங்களில் அக்டோபர் 2-ந்தேதி மற்றும் 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் திரணாமுல் காங்கிரஸ் கட்சி பேராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என, மேற்கு வங்காள எம்.பி.யும், திரிணாமுல் கட்சியை சேர்ந்தவருமான தெரிக் ஓ'பிரைன் டெல்லி போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து ஏற்கனவே கடந்த மாதம் 31-ந்தேதி கடிதம் எழுதியுள்ள நிலையில், காவல்துறை பதில் அளிக்காத நிலையில், தற்போது மீண்டும் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

    • 100 நாள் வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்குவதால் அடிப்படைத் தேவை களுக்கு உதவியாக இருக் கும் என மத்திய மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.

    இருந்தபோதும் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நேரமாகும். இதனால் காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வர தாமதமாகிறது. மேலும் மாலை 5 மணிக்கு வேலை முடிந்தால் வீட்டுக்கு செல்ல 7 மணி ஆகி விடுகிறது.

    அதன் பின்னர் வீடுகளுக்கு உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே 100 நாள வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த நாடாளுமன்ற குழுவினரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்ளகாக உயர்த்தவேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறி உள்ளார்.
    • 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட் டியில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை மாணிக் கம் தாகூர் எம்.பி. பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரு–கிறது. விருதுநகர் மாவட்டத் தில் 300 கிராமங்களிலும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 382 கிராமங்க–ளிலும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்துள்ளேன்.

    90 சதவீதம் பேர் பணி களை செய்து வருகின்றனர். மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பார்க்கிறது. கடந்த 5 வாரங்களாக ஊதியம் வழங் கப்படாத நிலை நீடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஏதேனும் புகார் இருந்தால் என்னிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுத் தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட் களாக உயர்த்த வேண்டும்.

    கப்பலூர் சுங்கச்சாவடி யில் ஆண்டுக்கு 41 லட்சம் வாகனங்கள் செல்லும் நிலை யில் 10 லட்சம் வாக னங்கள் வி.ஐ.பி. வாகனங்க ளாக கணக்கு காட்டப்பட்டுள் ளது. ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 வசூல் என்றாலும் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    சமையல் கியாஸ் சிலிண் டருக்கு மத்திய அரசு ரூ.1200 வாங்கி வந்த நிலை யில் தற்போது ரூ.200 குறைத் துள்ளது. இதுதேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கை. மக்கள் மீது அக்கறை இருந்தால் ராஜஸ்தானில் வழங்குவது போல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை இதுகுறித்து பிரதம ரிடம் முறையிட வேண்டும். தேசிய அளவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அதிக தொகை செலுத்தும் மாநி லங்களில் தமிழகம் 5-வது இடத்தில் வருகிறது. இதில் எந்த அளவிற்கு தமிழ கத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடந்த தீ விபத்து ரெயில்வே துறையின் அலட் சியத்தை காட்டுகிறது. ரெயில் பெட்டியில் கியாஸ் சிலிண்டரை எப்படி அனும தித்தார்கள் என்று தெரிய வில்லை. ரெயில்வே மந்திரி ரெயில் விபத்திற்கு பொறுப் பேற்று பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சாத்தூர் யூனியன் சின்னகொல்லப் பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால் உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு சரியாக வேலை வழங்கப்படவில்லை. சம்பளம் சரியாக தரவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்தநிலையில் பாதிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கடலூர் - பாலூர் சாலையில் பாதிரிக்குப்பம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில்,

    ஏற்கனவே எங்களுக்கு வேலையும், சம்பளமும் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஆட்குறைப்பு செய்யப் போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் வசதியானவர்களுக்கு வேலை கொடுத்துவிட்டு, ஏழை எளிய மக்களின் வேலையை பறிக்கிறார்கள்.இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்கள்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக கடலூர் பாலூர் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாமலை சேரி கிராமம். இங்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், 100 நாள் வேலை திட்ட முறை கேடுகளை களையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அவர்களிடம் ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×