search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணம்"

    • திருச்சியில் அழுகிய நிலையில் வீட்டுக்குள் எலக்ட்ரீசியன் பிணம் கிடந்தது
    • பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவன் சகாயராஜ் (வயது 40 )எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரதுபூட்டிய வீட்டுக்குள் இருந்து இன்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சகாயராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் சகாயராஜ் தூக்கில் பிணமாக தூங்கி கொண்டிருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.மனைவி கோபித்துச் சென்ற அன்றைய தினமே அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடந்தது
    • கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடப்பததாக வைகநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சதீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில்,இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்று தெரிய வந்தது. உடலை முகம் உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் மீன்கள் கடித்ததற்கான அடையாளம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாடலூர் காவல் நிலையம் அருகே
    • அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது

    குன்னம்

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூர் அருகே இரூர் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான கல்குவாரிகளும், கல் உடைக்கும் கிரஷர்களும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையொட்டி துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் துர்நாற்றம் வீசிய பகுதிக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது சாலையோரத்தில் அழுகிய நிலையில் பிணம் ஒன்று கிடந்துள்ளது. நீல நிறம் ஜீன்ஸ் பேன்ட், மஞ்சள் கருப்பு கோடு போட்ட டீசர்ட்டும் அணிந்திருந்த இறந்த நபரின் வயது சுமார் 25 - 30க்குள் இருக்கலாம் என்று தெரிகிறது. பாடாலூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் கிடந்த அந்த உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். யாரேனும் கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து பிணத்தை வீசி சென்றுள்ளார்களா? அல்லது வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தவரா? அருகில் நிறைய கல்குவாரிகள் இருப்பதால் அதில் ஏற்பட்ட மோதலால் கொல்லப்பட்டவரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாடாலூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலேயே கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் இன்று சாலை மறியல்
    • அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (வயது 16). ஆலம்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி மாணவி தானாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசீனார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இறந்த ஜனனியின் உறவினர்கள் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ேடார் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் குறித்து அவர்கள் கூறியதாவது:- பள்ளிக்கு சென்ற ஜனனி பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கை ேபாலீசார் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இந்த சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • நொய்யல் ஆற்றில் மிதந்த முதியவர் பிணத்தை கைப்பற்றி விசாரணை
    • ஆடு மேய்க்க சென்றவர் ஆற்றுக்குள் விழுந்தது எப்படி என்று போலீசார் விசாரணை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி ( 67). இவர் தனக்கு சொந்தமான 4 மாடுகள், 10 ஆடுகளை தினசரி மேய்த்து வந்தார். வழக்கம்போல ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக நொய்யல் பகுதியில் உள்ள வாய்க்கால் மேட்டு ஆற்றங்கரை பகுதிக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு ஆடு ,மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் ஆகியும் துரைசாமி வீட்டிற்கு திரும்பவில்லை. ஆடு, மாடுகளும் திரும்பி வரவில்லை.சந்தேகம் அடைந்த துரைசாமியின் மகன் விக்னேஷ் (23) என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை .இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் துரைசாமி அணிந்திருந்த செருப்பு, அவரதுஉடை நொய்யல் ஆற்று கரையில் கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றின் இடது கரை வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கு முதியவர் துரைசாமி இறந்த நிலையில் பிணமாக காவிரி ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து துரைசாமியின் பிரேதத்தை தண்ணீரில் இருந்து மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
    • இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் வக்கீல் புதுத்தெரு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தர். திலகர் திடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்

    மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த விவசாயி பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
    • முதற்கட்ட விசாரணை அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 58), விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் இறந்து கிடப்பதாக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அன்பழகனுக்கும், அவரது உறவினர்களுக்குமிடையே நிலத் தகராறு இருப்பது தெரியவந்தது. அன்பழகன் அதே பகுதியில் பிரச்சினைக்குரிய காலி இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அன்பழகன் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குளித்தலையில் கேட்பாரற்று நின்ற காரில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது
    • கொலையா? தற்கொலையா? என்று பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    குளித்தலை,

    திருச்சி கோணக்கரை பகுதி சாலையில் 4 நாட்களாக ஒரு கார் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காருக்குள் பார்த்தபோது, காருக்குள் ஆண் ஒருவர் படுத்து இருந்தார். ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்தது. துர்நாற்றம் வீசியது.இதனால் அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, காருக்குள் இருந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது.காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி விதைப்பண்ணை ரோட்டை சேர்ந்த ஆடலரசு (வயது 38) என்பதும் இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணையில், அவர் தனது மனைவி லட்சுமி பிரியா, 2 வயது மகளை தஞ்சை திருப்பந்துருத்தி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 31-ந்தேதி காலை 7 மணிக்கு குளித்தலைக்கு புறப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி குளித்தலை போலீசில் தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.அவர் காரை ஓட்டி வந்தபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நசியனூர் அருகே சென்ட்ரிங் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கபட்டது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், நசிய னூர், கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(32). இவரது மனைவி நித்யா (22). இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ் செண்டரிங் வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான வெங்கடேஷ் வேலை செய்து கிடைக்கும் பண த்தில் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக நித்யா கணவரைப் பிரிந்து, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வெங்கடேஷின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி யுள்ளது. அருகில் இருந்த வர்கள் இது குறித்து நித்யாவின் தாயாருக்கு போன் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்பேரில் அங்கு வந்த நித்யாவும், வெங்கடேஷின் தாயாரும் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பெட்ரூமில் உடல் அழுகிய நிலையில் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே பிணத்துடன் சாலையில் அமர்ந்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
    • பேச்சுவார்த்தைக்கு பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே பத்தி ராதரவை மேற்கு தெருவை சேர்ந்தவர் பனைத் தொழி லாளி முனியசாமி (65). கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் போது எதிர்பாராமல் தவறி விழுந்து காயமடைந்தார். அதனால் அவருக்கு ஏற் பட்ட உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

    பத்திராதரவையில் அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அப் பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. முதியவரின் சடலத்துடன் அவரது உறவினர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவின் ஒருங் கிணைப்பாளரான இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலையில் இரு தரப்பி னரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அதனை தொடர்ந்து அரசு புறம் போக்கு இடத்தை தாசில்தார் பழனிக்குமார் ஒதுக்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரச்சினைக்கு தீர்வாக சுடுகாட்டிற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் புதைத்துக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் தகன மேடை மற்றும் காம்பவுண்டு சுவர், சாலை வசதி அமைத்து தரப்படும், என்றார்.

    போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு தாசில்தார் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் நடந்தது. திருப்புல்லாணி சப்- இன்ஸ்பெக்டர் கர்த்திகை ராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • காணாமல் போன முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தட்டாங்காடு பகுதியை சேரந்தவர் சுப்பிரமணி (வயது 71). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு ரமேஷ்குமார் (41) என்ற மகன் உள்ளார். சுப்பிரமணி நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் ரமேஷ்குமாருக்கு ஈரோடு வைராபாளையத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் 70 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று பார்த்த போது இறந்தவர் சுப்பிரமணி தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ்குமார் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×