என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
- பாடலூர் காவல் நிலையம் அருகே
- அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது
குன்னம்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூர் அருகே இரூர் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான கல்குவாரிகளும், கல் உடைக்கும் கிரஷர்களும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையொட்டி துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் துர்நாற்றம் வீசிய பகுதிக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது சாலையோரத்தில் அழுகிய நிலையில் பிணம் ஒன்று கிடந்துள்ளது. நீல நிறம் ஜீன்ஸ் பேன்ட், மஞ்சள் கருப்பு கோடு போட்ட டீசர்ட்டும் அணிந்திருந்த இறந்த நபரின் வயது சுமார் 25 - 30க்குள் இருக்கலாம் என்று தெரிகிறது. பாடாலூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் கிடந்த அந்த உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். யாரேனும் கொலை செய்து வாகனத்தில் கொண்டு வந்து பிணத்தை வீசி சென்றுள்ளார்களா? அல்லது வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தவரா? அருகில் நிறைய கல்குவாரிகள் இருப்பதால் அதில் ஏற்பட்ட மோதலால் கொல்லப்பட்டவரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலேயே கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்