search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நசியனூர் அருகே சென்ட்ரிங் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
    X

    நசியனூர் அருகே சென்ட்ரிங் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

    • நசியனூர் அருகே சென்ட்ரிங் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கபட்டது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், நசிய னூர், கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(32). இவரது மனைவி நித்யா (22). இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ் செண்டரிங் வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான வெங்கடேஷ் வேலை செய்து கிடைக்கும் பண த்தில் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக நித்யா கணவரைப் பிரிந்து, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வெங்கடேஷின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி யுள்ளது. அருகில் இருந்த வர்கள் இது குறித்து நித்யாவின் தாயாருக்கு போன் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்பேரில் அங்கு வந்த நித்யாவும், வெங்கடேஷின் தாயாரும் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பெட்ரூமில் உடல் அழுகிய நிலையில் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×