search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணாமல் போன முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்பு
    X

    காணாமல் போன முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்பு

    • காணாமல் போன முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தட்டாங்காடு பகுதியை சேரந்தவர் சுப்பிரமணி (வயது 71). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு ரமேஷ்குமார் (41) என்ற மகன் உள்ளார். சுப்பிரமணி நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் ரமேஷ்குமாருக்கு ஈரோடு வைராபாளையத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் 70 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று பார்த்த போது இறந்தவர் சுப்பிரமணி தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ்குமார் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×